தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக, அதிமுக, கமல், சீமான் மற்றும் தினகரன் ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.
(தேமுதிக தேர்தல் நிலைபாடு விரைவில் தெரிய வரும்..)
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியும் மற்றும் (வேந்தர்) ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சியும் ‘மாற்றத்திற்கான கூட்டணி’யை அமைத்தனர்.
சமீபத்தில் இவர்கள் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துக் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி இவர்கள் மூவருக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டது.
மேலும் விசிக திருமாவளவனை.. “வா தம்பி.. வா தம்பி” என அழைத்து பார்த்தார் கமல்.
ஆனால் திமுக – காங் கூட்டணி கொடுத்த கொடுத்த 6 தொகுதிகளே போதும் என திருமாவளவன் அங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில் மநீம & சமக & ஐஜேகே ஆகிய 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்டது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் சரத்குமார் (சமக) மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதனையடுத்து கமல்ஹாசன் சரத்குமார் ரவி பச்சமுத்து ஆகிய மூவரும் தங்களது தொகுதிகளில் பிரசாரம் செய்ய தயாராகிவிட்டனர்.
சீமானின் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியும் இல்லாமல் 234 தொகுதிகளிலும் தனியாக போட்டியிடவுள்ளது.
தினகரனின் அமமுக அணியில் ஒவைசி கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Makkal Needhi Maiam to contest in 154 seats in TN elections