ஹன்சிகாவின் குணாதிசயங்களை குறிக்கும் *MAHA* லெட்டர்ஸ்

ஹன்சிகாவின் குணாதிசயங்களை குறிக்கும் *MAHA* லெட்டர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maha title itself reveals 4 characters of Heroine Hanshika

Magnetizing, Alluring, Hidden & Aggressive’ ஆகியவை இந்த ‘MAHA’ படத்தின் தலைப்பின் முதல் எழுத்துக்களை குறிக்கிறது.

மேலும், மொத்த படமும் நாயகி ஹன்சிகாவின் குணாதிசயங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கிறது.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

“ஆம், ஒரு தயாரிப்பாளராக மிகக் கடுமையாக பணிபுரியும் இந்த குழுவை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு தயாரிப்பாளரை ஊக்கப்படுத்தும் முதல் விஷயம், படக்குழுவினர் சொன்ன தேதிக்குள் முடித்துக் கொடுக்கும் போது தான்.

இயக்குனர் ஜமீல், ஹன்சிகா மொத்வானி, ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் மற்றும் குழுவில் உள்ள அனைவரின் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்கிறார் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் வி மதியழகன்.

“வழக்கமாக சினிமாவில், திறமையான கலைஞர்களை இயக்குநரின் நடிகர், தயாரிப்பாளரின் இயக்குனர் என்ற அடைமொழியுடன் குறிப்பிடுவார்கள். ஆனால் நான் தொடர்ந்து பெரும் பொறுப்புடன் செயல்படும் ஒரு தயாரிப்பாளரின் குழுவைக் கொண்டிருக்கிறேன் என கருதுகிறேன்.

இது எனக்கு ஒரு நேர்மறையான உணர்வைத் தருகிறது. இப்போதே எனக்கு படத்தின் தரம் கண் முன்னால் தெரிகிறது” என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் வெவ்வேறு நிலைகளில் உருவாகி வரும், நயன்தாராவின் கொலையுதிர் காலம், அருண் விஜய் நடிக்கும் ‘பாக்ஸர்’ என நல்ல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

ஜிப்ரான் இசையமைக்க, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மகா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்களை கொண்ட ஒரு மர்மம் நிறைந்த திரில்லர் படம்.

Maha title itself reveals 4 characters of Heroine Hanshika

maha hanshika stills

திறமையானவர்களுக்கு லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் துணை நிற்கும். – ரவீந்தர் சந்திரசேகர்

திறமையானவர்களுக்கு லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் துணை நிற்கும். – ரவீந்தர் சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra House of Arts will supports Talented Artists says Ravindar Chandrasekarதிரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ வழங்கிய ருத்ர தசாகம் நாட்டிய விழா, சென்னை லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் டிசம்பர் 22 ஆம் தேதி இன்று நடந்தது.

சிவாலயங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை அளித்தது போன்ற உணர்வை ஏற்படுத்திய இந்த நிகழ்வில், சர்வதேச அளவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி வருபவரும் பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்கியவருமான நாட்டியாச்சார்யா வி.பி.தனஞ்செயன் அவரது மனைவியும் பரத நாட்டியக் கலைஞருமான சாந்தா தனஞ்செயன், மற்றொரு பிரபல பரத நாட்டிய கலைஞர் SNA Awardee நந்தினி ரமணி, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அன்றைய விஞ்ஞான ஆலோசகர் மற்றும் அப்துல்கலாம் விஷன் இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ், எழுத்தாளர் இயக்குநர் கேபிள் சங்கர், கெளதமி வேம்புநாதன், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் நடிகர் செளந்திரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

பரத நாட்டிய கலைஞர் பினேஷ் மஹாதேவன் குழுவினர் நடத்திய ‘ருத்ர தசாகம்’ சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அரங்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு ஆன்மீக விருந்தளித்தது போல இருந்தது என்றால் அது மிகையாகாது.

அதனைத் தொடர்ந்து பேசிய தனஞ்செயன், “திறமையான கலைஞர்கள் பணம் கொடுத்தால் தான் சபாக்களில் நாட்டியமாட முடியும் என்கிற நிலை மாறி கலைஞர்களுக்குப் பணம் கொடுத்து ஆட வைக்கவேண்டும்.

நல்ல கலைஞர்களை ஊக்குவித்தால், அவர்களால் அற்புதமான நாட்டிய விருந்து படைக்க முடியும். அப்படி, நல்ல கலைகள் அரங்கேற்றப்பட்டால், ரசிகர்களும் அதனை அங்கீகரிப்பார்கள்.

அந்த வகையில், திறமையுள்ள கலைஞர்களைக் கண்டறிந்து முற்றிலும் சிறப்பான மேடையமைத்துக் கொடுக்கும் ரவீந்தர் சேகரரின் லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ நிறுவனம் பாராட்டுக்குரியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாட்டியத்திற்கான அரங்குகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதைப்போன்ற அரங்குகளை நாம் அமைக்கவேண்டும்.

உலகின் துயர்களைத் தீர்க்கும் நாடு என்கிற பொருள் படவே பாரதம் என்று நம் நாடு அழைக்கப்படுகிறது. நாட்டின் பெயரும் அதன் கலையும் ( பாரத நாட்டியம் ) ஒரே மாதிரி அழைக்கப்படுவது நம் நாட்டில் மட்டும் தான்..” என்றார்.

“தமிழை மறந்ததே கலைகளும் அழிய காரணம் ” என நடிகர் செளந்திரராஜா பேசினார். “கலைகளை இலவசமாகக் கொடுத்து விடாமல், ஒரு ரூபாயாவது ரசிகர்களிடம் வசூலிக்க வேண்டும்…” என கேபிள் சங்கர் பேசினார்.

“பரத நாட்டியம், நம் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கிறது. புத்துணர்ச்சி தருகிறது.

அதன் மூலம் மகிழ்வும் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கிறது. கலாம் ஐயாவுடன் ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற போது, அங்குள்ள கலைகளை அந்த நாட்டு மக்கள் தினமும் பார்த்து ரசித்து கொண்டாடுகிறார்கள்.

அதுபோன்ற நிலை, நம் நாட்டிலும் ஏற்படவேண்டும்..” என்றார் பொன்ராஜ்.

லிப்ரா ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் பேசிய போது…

“திறமையான கலைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மேடை அமைக்கவேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். இதன் மூலம் எந்த பண பலனும் கிடைக்கவேண்டாம்.

ஆத்ம திருப்தியும் நம் பாரம்பரிய கலைஞகளுக்கு ஏதாவது செய்கிறோம் என்கிற நிறைவுமே முக்கியம்… வருடந்தோறும் என்றில்லாமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவோம்.

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், பரத நாட்டியத்தைத் தீவிரமாக நேசிக்கும், நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறமையுள்ள கலைஞர்களுக்கு லிப்ரா ‘ஹவுஸ் ஆஃப் ஆர்ட்ஸ்’ என்றுமே துணை நிற்கும்.

ரசிகர்களை கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். நீங்கள் குடும்பத்துடன் வந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளியுங்கள். கலைஞர்களை ஊக்குவியுங்கள்.” என்றார்.

Libra House of Arts will supports Talented Artists says Ravindar Chandrasekar

Libra House of Arts will supports Talented Artists says Ravindar Chandrasekar

தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா

தமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association newsதமிழ்நாடு திரையரங்கு & மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழாவானது, சென்னை இராமபுரம் Feathers – A Radha Hotel – ல் நடைபெற்றது.

தமிழ் நாட்டில் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிற திரையரங்குகள் மற்றும் புதிதாக தோன்றியுள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை இணைத்து ஒரு புதிய சங்கமாக தோற்றுவிக்கப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கத்தின் புரவலர் திரு. அபிராமி இராமநாதன் தலைமை தாங்கினார், தமிழக அரசின் மாண்புமிகு. உயர்கல்வித்துறை அமைச்சர் திரு கே பி அன்பழகன் அவர்களும், மாண்புமிகு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜீ அவர்களும் குத்துவிளக்கேற்றி சங்கத்தை துவக்கி வைத்தனர்.

சங்கத் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் அவர்களும் , சங்க பொது செயலாளராக திரு. R .பன்னீர் செல்வம் அவர்களும் பொருளாளராக திரு.D.C. இளங்கோவன் அவர்களும் மற்றும் பல நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

விழாவில் திரையரங்க தொழில் வளர்ச்சியடையும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும், வழங்க உள்ள சலுகைகளையும் பற்றி அறிவித்து அமைச்சர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

இவ்விழாவில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ்
உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நலிவடைந்த திரையரங்க தொழிலை மேம்படுத்தும் வகையில் ஆணை வழங்கியதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையிலான நல்லரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது,

மேலும் நிலுவையில் உள்ள மற்ற கோரிக்கைகளையும் விரைவாக பரிசீலனை செய்து ஆணை வழங்கிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது, விழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி திரையரங்குகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association news

Tamilnadu Theatre and Mulitiplex Owners Association news

தாணு-தனுஷ்-வெற்றிமாறன் இணையும் *அசுரன்* பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தாணு-தனுஷ்-வெற்றிமாறன் இணையும் *அசுரன்* பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Vetrimaaran Thanu team up for Asuran first look releasedதனுஷ், வெற்றிமாறன் இணைந்த வடசென்னை படம் அண்மையில் வெளியானது.

இப்படத்தின் 2-வது பாகம் வெளிவருவதற்கு முன்னதாக நடிகர் தனுஷை வைத்து மற்றொரு படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘அசுரன்’ என்று தலைப்பிட்டு அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரை வெளியிட்ட தனுஷ் கூறியதாவது…

“மாரி 2 படத்தின் வெற்றி செய்தி வந்து கொண்டிருக்கும் வேளையில் எனது அடுத்த படமான ‘அசுரன்’அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை வெற்றி மாறன் இயக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்” என்று கூறியுள்ளார்

இப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

Dhanush Vetrimaaran Thanu team up for Asuran first look released

தீர்ப்பு கூறிய வழக்கையே படமாக எடுத்த நீதிபதி; பார்க்க காத்திருக்கும் பாக்யராஜ்

தீர்ப்பு கூறிய வழக்கையே படமாக எடுத்த நீதிபதி; பார்க்க காத்திருக்கும் பாக்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgementஓய்வுபெற்ற நீதிபதி மூ.புகழேந்தி, செல்லம் அன்கோ கிரியேஷன்ஸ் சார்பில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து இயக்கும் படம் வேதமானவன்.

மனோ ஜெயந்த், மகாராஷ்ட்டிராவைச் சார்ந்த ஊர்வசி ஜோஷி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை எஸ்.கண்ணன் கவனிக்க இசை பணியை இசை கவிஞர் செளந்தர்யன் மேற்கொள்கிறார்.

‘சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிக்கு, இந்த சமூகம் என்ன வரவேற்பு கொடுக்கிறது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதையாம்.

தான் நீதிபதியாக இருந்தபோது வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இப்படத்தை இயக்கியுள்ளார் புகழேந்தி.

இப்படத்தில் டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

வேதமானவன் படத்தின் பாடல்களை வெளியிட்டு இயக்குனர் கே. பாக்யராஜ் பேசுகையில்,

“நீதிபதியாய் இருந்து அனைத்து பொறுப்புகளையும் முடித்துவிட்டு, இலக்கியத் துறையிலும் அதிக ஈடுபாடோடு சுமார் 20 புத்தகங்கள் எழுதியுள்ளார் புகழேந்தி.

அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் இப்போது திரை உலகிலும் நுழைந்துள்ளார்.

பொருளாதாரம் போன்றவற்றைப் பற்றி கவலைப்படாமல் திரைப்படம் எடுக்க முயற்சி செய்யுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்திய அவரது குடும்பம் கிரேட்!

நீதிபதி புகழேந்தியிடம் நல்ல ரசனை உள்ளது. குற்றம் தொடர்பான பின்னணி கொண்ட இந்த கதைக்கு ‘வேதமானவன்’ என்று ரசனையான டைட்டிலை வைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதால் எனக்கும் இந்த படம் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இயக்குநர் புகழேந்தி ஐயாவை மனமார பாராட்டுகிறேன்” என பேசினார்.

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgement

Retd Judge directed Vedhamanavan movie This story based on his judgement

மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்.; வைரமுத்து எச்சரிக்கை

மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும்.; வைரமுத்து எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

If human destroys Nature Then Nature will destroy us says Lyricist Vairamuthu‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 20ஆம் ஆளுமையாக சங்கப் பெரும்புலவர் கபிலர் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார். செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் விழாவுக்குத் தலைமை தாங்கினார். முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

இயற்கை என்ற பெரும்பொருளை மனித வாழ்க்கை என்ற அரும்பொருளோடு ஈராயிரமாண்டுகளுக்கு முன்பே இணைத்தவர் என்று கபிலரைக் கருதலாம்.
இயற்கை என்பது மனிதனுக்குத் துணைப் பொருளன்று முதற்பொருள் என்ற இலக்கணத்திற்கு இலக்கியம் படைத்தவர் கபிலர்.

இன்று உலகம் முழுக்க உச்சரிக்கப்படுகிறது சுற்றுச்சூழல் என்ற கருதுகோள். ஒரு நாட்டின் மொத்தப் பரப்பில் 33 விழுக்காடு காடு வேண்டும் என்று கதறுகிறது ஐ.நா. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் 160கோடியில் இருந்து 650கோடிக்குத் தாவியிருக்கிறது உலக மக்கள்தொகை.

ஆனால் அதே காலவெளியில் உலகம் தன் சதுப்புநிலக் காடுகளில் பாதியை இழந்திருக்கிறது. மனிதா இயற்கையை விட்டு எட்டிச் செல்லாதே என்று எச்சரிக்கிறது கபிலர் பாட்டு.

இயற்கைக்கு எதிரான மனிதனின் யுத்தம்தான் உலகத்தை வெப்பமயமாக்கி ஓசோன் கூரையைக் கிழித்திருக்கிறது.

புவி வெப்பத்தால் ஒருமணி நேரத்திற்கு ஒரு உயிரினம் அழிந்துகொண்டிருக்கிறது. இன்னும் மூன்று டிகிரி வெப்பம் கூடினால் உலகில் 33 விழுக்காட்டு உயிரினம் அழிந்துபோகும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால், மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும். விண்ணும் மண்ணும் தங்கள் சமநிலையை இழந்துவிடும்; பருவங்கள் மாறிப்போகும்; துருவங்கள் உருகிப்போகும். காடுகள் அழிந்தால் மலைவளம் குன்றும்; மலைவளம் அழிந்தால் மழைவளம் குன்றும்; மழைவளம் அழிந்தால் நிலவளம் குன்றும்; நிலவளம் அழிந்தால் விளைநிலம் குன்றும். பிறகு வேளாண்மை என்ற நாகரிகத்தை விளைநிலங்களில் புதைக்க வேண்டியிருக்கும்.

விலங்குகளையும் பறவைகளையும் தாவரக் கூட்டங்களையும் மனித வாழ்வோடு கட்டுவிக்கும் ஊடுசரடாகக் கபிலர் இலக்கியம் விளங்குகிறது. கபிலர் இலக்கியம் அறிந்த தமிழன் கல்லை வணங்கமாட்டான்; புல்லை வணங்குவான்.

கபிலர் பாட்டுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இருவர் படத்தில் நறுமுகையே பாடலில் இடம்பெற்ற ‘அற்றைத் திங்கள் அந்நிலவில்’ என்ற தொடர் கபிலரிடம் நான் கடன்பெற்றது. கபிலரை இணையதள உலகத்தோடு இணைக்கும் முயற்சிதான் அது.

தமிழர்கள் மத்தியில் பக்தி இலக்கியம் பரவிய அளவுக்குச் சங்க இலக்கியம் பரவவில்லை. பக்தி இலக்கியம் மறுமையோடு தொடர்புடையது;

சங்க இலக்கியம் இம்மையோடு தொடர்புடையது. சங்க இலக்கியம் கடினச் சொற்களால் ஆனது என்று கழித்துவிட வேண்டாம். பாறைகளின் இடுக்கில் தேன்கூடு தெரிவதுபோல, கெட்டிப்பட்ட சொற்களுக்கு மத்தியில்தான் கொட்டிக்கிடக்கிறது தமிழர் பண்பாடு.

இளைஞர்களே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மூதாதையர் வாழ்ந்த வாழ்வின் முகவரி தேடி நகருங்கள். நல்லன கொள்ளுங்கள்; அல்லன தள்ளுங்கள்.

பாரியின் மரணத்திற்குப் பிறகும் பாரிமகளிரை ஆதரித்தவர் கபிலர். ஒரு தோழனின் வாழ்வோடும் தாழ்வோடும் உடனிருப்பதே உயர்ந்த அறம் என்பதைக் கபிலர் பெருமான் வாழ்வில் கற்றுக் கொள்ளுங்கள்.

If human destroys Nature Then Nature will destroy us says Lyricist Vairamuthu

More Articles
Follows