தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால், டிக்கெட் புக்கிங்கு ஆன்லைனில் 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
எனவே இஷ்டத்துக்கு தியேட்டர்காரர்கள் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை உசிலம்பட்டி மகேந்திரபாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இம்மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
மதுரை கலெக்டர் நடராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், நவ.,6 முதல் 13 வரை திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கண்காணிக்க தணிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது, என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் கூடுதல் தகவலுக்காக விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சர்கார் படம் தொடர்பாக மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்.
சர்கார் திரைப்படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Madurai High court order in Sarkar movie ticket rate issue