தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு டிரேட் மார்க் (வர்த்தக்குறி) பெறப்பட்டதை அடுத்து, இந்த தலைப்பை யாரும பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் தன் படத்திற்கு ‘மெர்சலாயிட்டேன்’ என்று தலைப்பு வைத்திருப்பதாகவும், அவர்களின் டிரேட் மார்க் அறிவிப்பால் தன் படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதனால் அக்டோபர் 6-ஆம் தேதி வரை ‘மெர்சல்’ தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதன்பின்னர் ‘மெர்சல்’ படத்தின் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனால் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தார் ராஜேந்திரன்.
தற்போது அந்த வழக்கையும் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
எனவே மெர்சல் படத்திற்கு இருந்த எல்லா தடைகளும் முற்றிலும் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.