தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ல் ரிலீஸாகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் விக்ரம் 7 விதமான கெட் அப்களில் நடித்தும் அதற்கேற்ப அவரே பல குரல்களில் பேசி இருப்பதாலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது
இந்த நிலையில்… இப்படத்தை 29 இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக, 1,785 இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
கோப்ரா பட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.
அவர் கூறியதாவது…
‘மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை, திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும். எனவே அதனால், தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, கோப்ரா படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.