தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏப்ரல் 15ல் கொரோனா தடுப்பூசி் போட்டுக் கொண்ட நடிகர் விவேக் அடுத்த நாள் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அப்போது மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்..
” தடுப்பூசியால் விவேக்கிக்கு உடல்நல குறைவு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கொரோனா இந்தியாவிலேயே இல்லை.
மத்திய மாநில அரசுகள் மக்களை ஏமாற்றுகிறது என கண்டமேனிக்கு சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் மன்சூர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின் பேரில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல், தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல், சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல், தொற்றுநோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மன்சூரலிகான் கைது செய்யப்படுவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் முன்ஜாமீன் கேட்டு மன்சூரலிகான் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானின் முன் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே விரைவில் மன்சூர் அலிகான் கைதாவார் என சொல்லப்படுகிறது.
Madras high court cancels man soor ali khan bail case