தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளை துவக்கி நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக உள்ளார்.
இதுகுறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில்…
“மணிரத்னம் பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
அதில் மாதவனும் ஒருவர்.
இக்கதை இரண்டு நாயகர்கள் உள்ளடக்கியது.” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ‘அலைபாயுதே’, ‘கன்னடத்தில் முத்தமிட்டால்’ மற்றும் ‘ஆயுத எழுத்து’ ஆகிய படங்களில் மணிரத்னம்-மாதவன் இணைந்து பணிபுரிந்துள்ளார்கள்.
4வது முறையாக மீண்டும் இணைவார்களா? என எதிர்ப்பார்க்கலாம்.
மேலும், இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.