‘ரஜினிகாந்த் எடுத்த முடிவு சரியானதுதான்…’ – மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் சார்பாக இலங்கையில் உள்ள மக்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்ளவிருந்து, பின்பு அரசியல் நெருக்கடியால் ரத்து செய்தார்.

இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் மாதவன் பேட்டியளித்த போது, ரஜினி விவகாரம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதில்…

“சில சமூக பிரச்சினைகளை நடிகர்களான எங்களுடன் சம்பந்தப்படுத்தப்படுவது நியாயமற்றது.

திரையில் நீங்கள் நடிகர்களின் முகத்தைதான் பார்க்கிறீர்கள்.

ஆனால் அதற்குப் பின்னால் 500 குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது.

ஒருவர் பணக்காரராக இருப்பதற்கு அவரை குற்றம் சுமத்துவது நியாயம் அல்ல.

பணக்காரனாக நாங்கள் பிறக்கவில்லை. நேர்மையாக உழைத்து இந்த நிலையை அடைந்திருக்கிறோம்.

சட்டவிரோதமாக வரி செலுத்தாமல் வாழவில்லை.

ஒரு நடிகரின் சம்பாத்தியத்தின் பின்னால் பொறாமைப்பட ஒன்றுமில்லை.

எங்களால் தெருவில் இறங்கி நடக்க முடியாது. கூட்டம் கூடிவிடும். அதற்கு ஏற்றது போல் வாழவேண்டியுள்ளது.

ரஜினி இலங்கை பயணத்தை ரத்து செய்து சரியான முடிவு எடுத்துள்ளார்.

மேலும் சர்ச்சையை உருவாக்காமல் அந்த விஷயத்தை சிறப்பாக கையாண்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.

அவரது கொடுத்துள்ள அறிக்கையில் கூட ஒரு நடிகனாக, மனிதாபிமான அடிப்படையில் எதிர்காலத்தில் நான் இலங்கை செல்லும்போது அதை அரசியலாக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

அது என்னை கவர்ந்தது” என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

விஜய் டிவிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவியின் புகழ் வெளிச்சத்தில் பலன் அடைந்த சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலர் இன்று சினிமாக்களில் கலக்கி வருகின்றனர்.

தற்போது அவர்களை வைத்து தன் டிவி நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறது விஜய் டிவி.

இந்நிலையில், ‘அன்புடன் டிடி’ என்று புதிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

இதனை விருந்தினர்களுடன் கலந்துரையாடி திவ்யதர்ஷினி தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துக் கொள்ளவிருந்தார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் நடைபெற்றுள்ளது.

விரைவில் இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.

Sivakarthikeyan is first guest in Vijay TVs new show Anbudan DD

திருமணத்திற்கு முன்பே அக்‌ஷராஹாசன் கர்ப்பம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

(முன் குறிப்பு) இது வழக்கம்போல சினிமா செய்தி என்பதால் கோபப்படாமல் படிக்கவும்.

கமல்ஹாசனைப் போன்றே அவரது இரு மகள்களும் கோலிவுட் முதல் பாலிவுட் வரை சென்று கலக்கி வருகின்றனர்.

இதில் அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அக்‌ஷராஹாசன்.

இதற்குமுன்பே, அமிதாப் மற்றும் தனுஷ் உடன் ஷமிதாப் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இவர் நடித்துள்ள மற்றொரு ஹிந்திப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அதில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் இளம் பெண் வேடத்தில் நடித்துள்ளாராம்.

இது பெண்களின் விழிப்புணர்வு படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்டதாக தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார் அக்‌ஷராஹாசன்.

Akshara Haasan plays role in which the girl got pregnant before marriage

‘யோசிக்காம எங்க அப்பா பேச மாட்டார்..’ கமல் மகள் அக்ஷராஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைகாலமாக அரசியல் கருத்துக்களை அதிரடியாக கமல்ஹாசன் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறிவருகிறார்.

மேலும் தனியார் டிவி சேனல்களிலும் பேட்டியளித்து வருகிறார்.

இதனிடையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மகாபாரதத்தை மேற்கோள் காட்டி பதிலளித்து இருந்தார்.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்துக்களின் கலாசாரத்தை அவர் கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தன.

மேலும், கமல் மீது வள்ளியூர், கும்பகோணம் கோர்ட்டுகளில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு மட்டுமில்லை. பெங்களூருவிலும் பிரணவந்தா என்ற சாமியார் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து கமல்ஹாசனின் இளைய மகள் பதில் அக்‌ஷராஹாசன் கூறியதாவது…

“என் அப்பா எதை பேச முயன்றாலும், அதுகுறித்து நிறைய யோசிப்பார். ஆழமாக சிந்திப்பார். அதன்பிறகுதான் பேசுவார்.

அவரது வாழ்க்கையில் இதுபோன்ற நிறைய சர்ச்சைகளை அவர் சந்தித்து இருக்கிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

My father wont talk without thinking says Kamal daughter Aksharahassan

அரசியலா..? சினிமா..? ரசிகர்களுடன் ரஜினி ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலங்கை பயணம் செல்லவிருக்கிறார் ரஜினி… என்ற அறிவிப்பு வந்த உடனே அதுபற்றிய சர்ச்சை தமிழகத்தில் புயலாக வீசியது.

பின்னர் அரசியல்வாதிகளின் நெருக்கடியால் இலங்கை செல்லவில்லை என அறிவித்தார் ரஜினி.

ஆனால் இலங்கை தமிழர்கள் ரஜினியை காண வேண்டும் எனவும், அவரை எதிர்க்க தமிழக அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் கூறி போராட்டங்கள் நடத்தினர்.

இதற்கு ரஜினி நன்றி தெரிவித்து, நல்லதை நினைப்போம். விரைவில் சந்திப்போம் என கூறி அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

இதனால் தமிழக அரசியல் நிலவரம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி தன் ரசிகர்களை சென்னையில் ரஜினி சந்திக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த கூட்டத்தில் அரசியல் குறித்த முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படுமா? அல்லது இது சினிமா குறித்த சந்திப்பா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

Rajinikanth going to meet his fans on April 2nd 2017

ரஜினி-தனுஷ் இணையும் படத்தின் போட்டோ சூட் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2.0 படத்தை முடித்துவிட்டு ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை இவரது மருமகனும் நடிகருமான தனுஷ் தன் சொந்த பேனரில் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் பூஜை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் போடப்படும் என்று தெரிய வந்துள்ளது.

எனவே இப்படத்திற்கான போட்டோ சூட்டை விரைவில் நடத்தவிருக்கிறார்களாம்.

இதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவுள்ளார்.

படத்தின் பூஜை குறித்த அறிவிப்பு வரும் அன்றே, படத்தின் தலைப்பு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Rajini Dhanush Ranjith movie photo shoot updates

More Articles
Follows