தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருந்த இவர், அந்நிய நாடுகளுக்கு ராக்கெட் தொழில்நுட்பத்தை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இதனையடுத்து சில நாட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் குற்றவாளி அல்ல என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது இவரின் வாழ்க்கை படமாக உருவாகியுள்ளது. நடிகர் மாதவன், நம்பி நாராயணாக நடிக்கிறார்.
‘ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி ஆங்கிலம் மொழிகளில் தயாராகிறது.
தமிழில் ராக்கெட்ரி நம்பி விளைவு என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் டீசர் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
ராக்கெட்டரியில் 35 ஆண்டுகளும், ஜெய்லில் 50 நாட்களும் வாழ்ந்திருக்கிறேன். இந்த 50 நாளில் என் நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு தான் இந்த கதை, என்னைப்பற்றி அல்ல என டீசரில் மாதவன் சொல்வது போல உள்ளது.
இப்படத்தை ஆனந்த் மகாதேவன் உடண் இணைந்து நடிகர் மாதவனும் இயக்கியுள்ளார்.
இதன்மூலம் முதன்முறையாக இயக்குநராக களமிறங்கி உள்ளார் மாதவன்.
ஏற்கெனவே எவனோ ஒருவன், இறுதிச்சுற்று ஆகிய படங்கள் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது.