சத்யராஜ் படத்திற்காக மீண்டும் இணையும் மாதவன்-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது இவர்கள் மீண்டும் ஒரு படத்திற்காக இணையவுள்ளனர்.

ஆனால் இது படத்தில் நடிப்பதற்காக அல்ல.

சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எச்சரிக்கை; இது மனிதர்கள் நடமாடும் இடம்.

சர்ஜீன் இயக்கியுள்ள இப்படத்தில் வரலட்சுமி, கிஷோர், விவேக் ராஜகோபால் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

இந்த ட்ரைலரைதான் மாதவனும் விஜய்சேதுதியும் இணைந்து வெளியிட உள்ளனர்.

Madhavan and Vijay Sethupathi launching Sathyarajs Echcharikkai Trailer

துப்பறிவாளன் படம் பார்த்தால் நீங்களும் விவசாயிகளுக்கு உதவலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படம் இன்று (செப்டம்பர் 14) வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான பின் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் வசூலிக்கப்பட்டு விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, ‘துப்பறிவாளன் ‘ படத்தின் திரையரங்க வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று விஷால் அறிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் 380க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

அதில் எத்தனை காட்சிகள் திரையிடப்படவுள்ளதோ,அந்த காட்சிக்கு விற்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்து ஒரு ரூபாய் வசூலித்து விவசாயிகள் நலனுக்கு கொடுக்கப்படவுள்ளது.

படம் பார்க்கும் ரசிகர்கள் இப்படியும் விவசாயிகளுக்கு உதவலாம்.

ஏழை மாணவிக்கு உதவுவதாக கூறி விஜய் ரசிகர்கள் ஏமாற்றினார்களா? இதோ ஒரு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரியலூரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவி ரங்கிலா என்பவரை படிக்க உதவி செய்கிறேன் என்று கூறி அவரை விஜய் ரசிகர்கள் ஏமாற்றியதாக செய்திகள் வந்தன.

கல்லூரி பணம் கட்ட முடியாதலால் தற்கொலைக்கு முயன்ற அந்த பெண்ணை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்று கூறி விஜய் உதவுவது போல புகைப்படங்கள் எல்லாம் எடுத்து விட்டு பாவம் அந்த ஏழை பெண்ணை ஏமாற்றி விட்டதாகவும் செய்திகள் வந்தன.
இந்நிலையில் இதுகுறித்து விஜய் ரசிகர் மன்றனத்தினர் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

எங்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் கொடுத்த பொய்யான வாக்குறுதி அது என விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்.

இதோ அந்த அறிக்கை கடிதம்

மகளிர் மட்டும் படம் பார்த்தா சூர்யா பட்டு புடவை கொடுப்பாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள மகளிர் மட்டும் படத்தை சூர்யா தன் 2டி நிறுவன சார்பில் தயாரித்துள்ளார்.

பிரம்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஊர்வசி, பானுப்பிரியா, சரண்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இசை ஜிப்ரான்.

இப்படம் நாளை செப். 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இப்படம் பார்க்கும் பெண்களுக்கு மட்டும் இலவச பட்டு சேலையை வழங்கவிருக்கிறாராம் சூர்யா.

தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பெண்மணிக்கு மட்டுமே இந்த சேலை என்பது இது முதல் 3 நாட்களுக்கு மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷங்கர்-அஜித்-அனிருத் புதிய கூட்டணி; தயாரிப்பாளர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேகம் படம் ரிலீஸ் ஆனபின்னர் ஒரு ஆப்பரேசனை முடித்துவிட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் அஜித்.

இதனையடுத்து அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் விவேகம் படத்திற்கு கிடைத்த நெகட்டிவ்வான விமர்சனங்களால் தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைக்க இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஷங்கர் – அஜித் கூட்டணியை உருவாக்கியதும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தான் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாகவே அஜித் பேட்டி எதுவும் கொடுக்கமாட்டார். தற்போதுதான அவர் ஆப்பரேசனை முடித்துள்ளார்.

எனவே அவர் முழுவதும் குணமானவுடனேதான் இதற்காக விடை தெரியும் என எதிர்பார்க்கலாம்.

நடிகையாகனுமா அட்ஜஸ்ட் பண்ணு சொல்வாங்க… – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் அழகான நடிப்பின் மமூலம் கோலிவுட்டை கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டாடி என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் சினிமாவில் ஒரு நடிகையாக எந்த மாதிரியாக பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது என அதிரடியாக தன் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

சில உப்புமா படங்களுக்கு கூட சினிமாவில் நடிக்கனுமா? அட்ஜஸ்ட் செய்துகொள்வீர்களா என கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் வைக்கும் பெயர்கள் என்ன தெரியுமா? அக்ரீமெண்ட், அட்ஜஸ்ட்மென்ட், காண்ட்ராக்ட் என அழைப்பார்கள்.

ஒரு பெண்ணை நடிகையாக ஜெயிக்க வைக்க பெண்களை இப்படி வற்புறுத்துவது மிகவும் கேவலமான செயல் எனவும் தெரிவித்துள்ளார்.

To became heroine cine industry forcing to adjust says Aishwarya Rajesh

More Articles
Follows