தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரானோ ஊரடங்கால் (முன்பே) படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இன்னும் சினிமா சூட்டிங் நடத்த அரசு அனுமதிக்கவில்லை.
இருந்த போதிலும் சிம்பு ரசிகர்கள் மாநாடு பட ‘அப்டேட்’ தருமாறு தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி…
“எல்லோரும் ‘மாநாடு’ பட அப்டேட் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரசாங்கத்தின் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
அனுமதி கிடைத்ததும் உடனடியாக சூட்டிங்கை ஆரம்பிப்போம்,” எனத் தெரிவித்துள்ளார்.