நிதிநிலை அறிக்கைகள் வயிற்று வங்கிக்காக தயாரிக்கப்படனும் : வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து.

அந்த வரிசையில் 22ஆம் ஆளுமையாக அவ்வையார் குறித்த கட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில் அரங்கேற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :

தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில் அவ்வையார் என்பவர் ஒருவரல்லர். ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர் அவ்வையார் என்ற பெயரில் இயங்கியிருக்கலாம். சங்ககால அவ்வையார் என்றும் நீதிநூல் அவ்வையார் என்றும் அவ்வை இலக்கியத்தை நான் இரண்டாகப் பிரிக்கிறேன்.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும் ஆண்களே தீர்மானித்த காலத்தில், ஆண்களுக்கான ஒழுக்க விதிகளையும் எழுதிய பெண்ணியப் பெரும்புலவர் என்று சங்ககால அவ்வையைக் கொண்டாடலாம். நாடோ காடோ, பள்ளமோ மேடோ ஆடவர்கள் நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்த நிலம் நலம் பெறும் என்று சட்டம் வகுத்தவர் சங்ககால அவ்வை.

பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்தவராகக் கருதப்படும் பிற்கால அவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியது கற்றவரைச் சென்றடைந்த இலக்கியமானது. பிற்கால அவ்வையின் பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.

அவ்வையார் யாருக்கும் அஞ்சாத பெண்மணி. வள்ளுவரும் இளங்கோவும் கம்பனும்கூட வரையறுக்காத ஒரு கருத்தை அவ்வையார் சொல்லியிருக்கிறார். கற்பு என்றால் என்ன என்று எந்தப் புலவனும் வரையறுக்கவில்லை. அது பெண்ணின் உடலோடும் மனதோடும் சம்பந்தப்பட்டது என்று மட்டுமே கருதப்பட்டது.

அது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்று ஓரவஞ்சனையுடன் உணர்த்தப்பட்டது. அவ்வையார் ஒருவர்தான் கற்புக்கு இலக்கணம் சொன்னார். “சொன்ன சொல் மாறாத தன்மைதான் கற்பு” என்ற பொருளில் “கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” என்று ஓங்கி அடித்தார். ஆண் பெண் என்ற உடல்களைத் தாண்டி வாக்குத் தவறாத நேர்மைதான் கற்பு என்று மனிதகுலத்துக்கே பொதுவான அறமாக்கினார்.

அப்படிப் பார்த்தால் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும் அனைவரும் கற்புடையவர்களே, தவறினால் அனைவரும் கற்பிழந்தவர்களே என்பது அவ்வையின் அளவுகோல்.

அவ்வையார் போன்ற அறிவுஜீவிகளையும் கூழுக்கு அலையவிட்டதுதான் தமிழ் உலகம் செய்த தவறு. பாண்டிய மன்னனின் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அவ்வையார் பந்தியில் இடம்பிடிக்கமுடியாமல் பட்டினி கிடந்திருக்கிறார். “நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்று பாடியிருக்கிறார்.

அவ்வையார் காலத்திலிருந்து ஆண்ட்ராய்டு காலம் வரை நம்மால் பசியை ஒழிக்க முடியவில்லை. இன்னும் இந்தியாவில் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்கிறார்களாம்.

ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில் ஐந்தில் ஒரு குழந்தைக்கு உயரத்திற்கேற்ற எடை இல்லையாம். ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப் பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில் உள்ள மூன்றாம் நாடு இந்தியாதானாம்.

பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே “ஐயமிட்டு உண்” என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலை அறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காக இல்லாமல் வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்.

வருமானத்தை விடத் தன்மானமே பெரிது என்பார்கள் புலவர்கள். அதுதான் அவர்களுக்கு அறச்சீற்றம் தந்திருக்கிறது. அவ்வையார் அரசையும் கண்டித்திருக்கிறார்; ஆண்டவனையும் கண்டித்திருக்கிறார். கொடிய கணவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள் ஒரு நல்ல மனைவி.

இந்த இழிந்தவனுக்காக இவளைப் படைத்தாயே பிரம்மனே. உனக்கு நான்கு தலை; ஒருதலை ஏற்கனவே அற்றுப்போனது. இப்படித் தவறு செய்த உன்னைப் பார்த்தால் மிச்சமுள்ள மூன்று தலைகளையும் நானே கிள்ளி எறிந்திருப்பேன் என்று உரிமையோடும் உணர்வோடும் கடவுளையே கண்டித்தவள் அவ்வை.

இன்றைய காலத்திற்குப் பொருந்தாத அவ்வையின் கருத்துகளைப் புறந்தள்ளுவோம்; பொருந்தும் கருத்துகளைப் போற்றுவோம்; அவற்றை வாழ்க்கை படுத்துவோம். அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை; தமிழர்களின் தனிஉரிமை.

Lyricist Vairamuthu speech at Public event

சௌந்தர்யா ரஜினி திருமண வரவேற்பில் வித்தியாசமான பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌவுந்தர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இவரின் மகன் வேத் என்பவர் இவருடன் வசித்து வருகிறார்.

தற்போது நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் என்பவரை 2வது திருமணம் செய்யவுள்ளார்.

இவர்களின் திருமணம் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி நேற்று கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில மணமக்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூல பைக்கு பதிலாக விதைப் பந்துக்களை ரஜினி குடும்பத்தார் பரிசளித்துள்ளனர்.

ஒருவர் எத்தனை விதைபந்துக்களை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு காகித பேக்கில் அந்த விதைபந்து போடப்பட்டு அதன் மேல் அது என்ன விதை என்பதையும் குறிப்பிடப்பிட்டு இருந்தனர்.

இதை நாம் நட்டு வைக்கலாம். அல்லது தூக்கி எறிந்தால் போதும் அங்கு அது மரமாக முளைக்கும்.

ரஜினியின் இந்த முயற்சியை வித்தியாசமான பரிசை பலரும் பாராட்டினர்.

Soundarya Rajini gave Seed Balls As Return gift In her wedding reception

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியுடன் இணையும் யோகிபாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பேட்ட’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தனது அடுத்த படத்தை உடனே தொடங்கவிருக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது.

தளபதி படத்திற்கு பிறகு இந்த ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்வார் என கூறப்படுகிறது.

இதில் நடிப்பதறக்காக கிட்டதட்ட 3 மாதங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி.

தற்போது ரஜினியுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியுடன் தோன்றும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க யோகிபாபுவை அனுகியிருக்கிறார்களாம்.

அவரும் தளபதி 63 படத்தை முடித்துவிட்டு இதில் நடிக்கவுள்ளதாக தெரிவித்து இருக்கிறாராம்.

இதற்கு முன்பே பேட்ட படத்தில் முனிஷ்காந்த் நடித்த வேடத்தில் யோகிபாபுவை தான் அனுகினார்களாம். அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டவர் தற்போது நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

For the first time Yogibabu team up with Rajini in AR Murugadoss direction

தூக்கி எறியப்பட்ட பாலாவின் வர்மா..; புதிய இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை ‘E4 ENTERTAINEMENT’ நிறுவனம் பெற்றது.

இப்படத்தை வர்மா என்ற பெயரில் பிரபல டைரக்டர் பாலா இயக்கினார்.

விக்ரம் மகன் துருவ், மேகா சவுத்ரி, ரைசா இணைந்து நடித்திருந்தனர்.

ஆனால் ‘அர்ஜுன் ரெட்டி’ படம் போல் வர்மா எங்களுக்கு திருப்தியில்லை. எனவே படத்தை குப்பையில் வீசிவிட்டு புதிய படத்தை தயாரிக்கவுள்ளோம் என ‘E4 ENTERTAINEMENT’ நிறுவனம் அதிரடியாக அறிவிக்க கோலிவுட்டே அதிர்ந்து போனது.

விரைவில் புதிய இயக்குனர் இப்படத்தை இயக்குவார் என அறிவித்தனர்.

அதன்படி தற்போது உருவாகவுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை கௌதம் மேனன் இயக்குவார் என்ற தகவல்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன.

ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.

பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“M10 PRODUCTION” சார்பில் M.S.முருகராஜ் தயாரித்து வரும் படம் “பக்ரீத்”. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுபு.

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர்கள் ஏ ஆர் முருகதாஸ், அட்லி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

டி இமான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்து வருகிறார். திலிப் சுப்புராயன் ஸ்டண்ட் இயக்குனராகவும், மதன் கலை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையில் பக்ரீத் வெளியாக இருக்கிறது

வர்மா ட்ராப்; தயாரிப்பாளருடன் இணைந்து பாலாவை அவமானப்படுத்திய விக்ரம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்குப்படத்தின் ரீ-மேக்கை வர்மா என்ற பெயரில் இயக்கினார் டைரக்டர் பாலா.

விக்ரம் மகன் துருவ், மேகா சவுத்ரி, ரைசா இணைந்து நடித்திருந்தனர்.

இவர் இதுவரை ரீமேக் படங்களை பாலா இயக்கியது இல்லை. இருந்தபோதிலும் விக்ரமின் நட்புக்காக ஒப்புக் கொண்டார்.

ஒப்புக் கொண்டபோதே அப்படியே ரீமேக் செய்ய மாட்டேன். என் பாணியில் படம் இருக்கும் என்றே சொன்னாராம் பாலா.

இதை படத்தயாரிப்பு நிறுவனமான ‘E4 ENTERTAINEMENT’ படநிறுவனமும் விக்ரம் தரப்பும் அப்போது ஒப்புக் கொண்டதாம்.

ஆனால் திடீரென ‘அர்ஜுன் ரெட்டி’ படம் போல் வர்மா இல்லை. எங்களுக்கு திருப்தியாக அமையவில்லை. அதனால் ‘வர்மா’வை ட்ராப் செய்கிறோம். படம் முடிந்துவிட்டாலும் ரிலீஸ் செய்ய மாட்டோம்.

வேறு இயக்குநரை வைத்து புதிதாக ஒரு படத்தை எடுப்போம் என படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முதலில் எல்லாவற்றிக்கும் ஒப்புக் கொண்டு இப்போது தயாரிப்பாளருடன் இணைந்து விக்ரமும் தன்னை அவமானப்படுத்திவிட்டார் என பாலா தரப்பு கடும் கோபத்தில் உள்ளதாம்.

More Articles
Follows