கமலின் *நம்மவர்* படைக்காக சினேகன் எழுதிய பிரச்சாரப் பாடல்

கமலின் *நம்மவர்* படைக்காக சினேகன் எழுதிய பிரச்சாரப் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Snehan wrote songs for Kamalhaasans political partyசினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் சிநேகன்.

இவர் ’உயர்திரு 420’ என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

அதன்பின்னர் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமலுடன் நெருக்கமானார்.

அதிமுக ஆதரவாளராக வலம் வந்த சினேகன், கமலின் நட்பு கிடைக்கவே தற்போது,‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார்.

இந்நிலையில், கமல்ஹாசனின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்கிற பெயரில் பிரச்சாரப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

இதற்கான வெளியீட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.

சில மாதங்களுக்கு முன் கட்சி அறிவிப்பு வந்தாலும் நேற்றுதான் இந்த கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist Snehan wrote songs for Kamalhaasans political party

ஆந்திராவில் பிரபலமான கோயிலில் சூர்யா-கார்த்தி தரிசனம்

ஆந்திராவில் பிரபலமான கோயிலில் சூர்யா-கார்த்தி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and Karthi visited Simhachalam temple and offered special prayersசூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்து வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்’.

பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தில் நாயகியாக சாயிஷா நடிக்க, சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், பிரியா பவானிசங்கர், பானுபிரியா, மவுனிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படித்த இளைஞர்களும் விவசாயம் முன் வரவேண்டும் என்பதை வலியுறுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

தெலுங்கில் இப்படத்திற்கு சின்ன பாபு என பெயரிட்டு இதன் இசை வெளியீட்டு விழா இன்று ஆந்திராவில் நடத்தவுள்ளனர்.

இதற்காக சூர்யா, கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ், சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் அங்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆந்திராவில் பிரபலமான சிமாசலம் வராக லட்சுமி நரசிம்ம கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர்.

அந்த படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Suriya and Karthi visited Simhachalam temple and offered special prayers

suriya karthi at andhra temple

கல்யாணம் எப்போ?; சொந்தமாக படம் தயாரிப்பது ஏன்.? அதர்வா பேட்டி

கல்யாணம் எப்போ?; சொந்தமாக படம் தயாரிப்பது ஏன்.? அதர்வா பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Atharvaa speech at Semma Botha Aagatha press meet regarding his marriageநடிகர் அதர்வா தயாரித்து நடித்துள்ள புதிய படம் ‘செம போத ஆகாதே’. மிஸ்டி கதாநாயகியாக வருகிறார்.

மனோபாலா, கருணாகரன், யோகிபாபு, ஜான்விஜய், கும்கி அஸ்வின் ஆகியோரும் நடித்துள்ளனர். பானா காத்தாடியை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஜீன் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது அதர்வா கூறியதாவது:-

“நிறைய படவிழாக்களில் தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன்.

அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. இந்த படத்தை ஏற்கனவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அது முடியவில்லை.

நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். பத்ரி வெங்கடேஷ் ஒரு ஜாலியான படமாக இதை எடுத்துள்ளார். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை.

போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.

எனக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். எனக்கு இன்னும் கல்யாண வயது வரவில்லை.”

இவ்வாறு அதர்வா பேசினார்.

Atharvaa speech at Semma Botha Aagatha press meet regarding his marriage

sba press meet

மாரி-2 சூட்டிங்கில் வில்லனுடன் மோதிய போது தனுஷுக்கு காயம்

மாரி-2 சூட்டிங்கில் வில்லனுடன் மோதிய போது தனுஷுக்கு காயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush got injured in Maari 2 shootingபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்து வரும் படம் ‘மாரி 2’.

இப்படத்தில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் டோவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். இவருக்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது.

அப்போது, எதிர்பாராத விதமாக வலது காலிலும், இடது கையிலும் தனுஷுக்கு அடிபட்டு விட்டது.

உடனே படக்குழுவினர் அவருக்கு முதலுதவி செய்தார்கள்.

இதனையடுத்து இந்த செய்தி பரவ, யாரும் கவலை கொள்ள வேண்டாம். நான் நலமாக இருக்கிறேன் என தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Dhanush got injured in Maari 2 shooting

கமல்-விக்ரம்- அக்‌ஷராஹாசன் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்

கமல்-விக்ரம்- அக்‌ஷராஹாசன் கூட்டணியில் பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ghibram will be composing music for Kamal Vikram combo movie`சாமி ஸ்கொயர்’ மற்றும் `துருவ நட்சத்திரம்’ ஆகிய இரண்டு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விக்ரம்.

இந்த இரு படங்களை முடித்த பிறகு கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

`தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் இதில் கமலின் 2வது மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையைமைக்க ஜிப்ரான் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

அண்மைக்காலமாக கமலின் படங்களுக்கு ஜிப்ரான்தான் இசையமைத்து வருகிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த படத்தை முடித்துவிட்டுதான் `மஹாவீர் கர்ணா’ என்ற வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Ghibram will be composing music for Kamal Vikram combo movie

kamal ghibran

ரஜினி-அஜித்தை அசிங்கப்படுத்தி விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

ரஜினி-அஜித்தை அசிங்கப்படுத்தி விஜய் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay ajithநேற்று ஜீன் 22ஆம் தேதி நடிகர் விஜய் தன் பிறந்தநாளை கொண்டாடினார்.

இதனையொட்டி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களில் அவரது ஹிட்டான படங்களை திரையிட்டனர்.

இதனை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் விஜய் படம் திரையிடப்பட்டது. அங்கு ஏற்கெனவே காலா படமும் ஓடிக் கொண்டிருப்பதால் ரஜினி பேனரும் வைக்கப்பட்டது.

விஜய் ரசிகர்கள் சர்கார் பர்ஸ்ட் லுக்கை கொண்டாடும் போது. காலா பேனரை கிழித்துள்ளனர்.

மேலும் சில சேனல்கள் அவர்களை பேட்டி எடுத்தபோது ரஜினி மற்றும் அஜித்தை கேவலமாக திட்டியுள்ளனர்.

இதில் ஒரு விஜய் ரசிகர் மற்ற ரசிகர்களுக்கு பதிலடி என தெரிவித்த போதிலும் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் ஓவராகப் பேசிவிட்டார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களுக்கு எதிராக ரஜினி, விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு அவரை திட்ட, இணையமே கலவரமானது.

சம்பந்தப்பட்ட நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் இந்த ரசிகர்கள் இப்படி அவர்களுக்காக மோதுவதை பார்த்தால் என்னதான் சொல்வது..?

Vijay fans troll Rajini and Ajith became issue in Social medias

More Articles
Follows