தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் சிநேகன்.
இவர் ’உயர்திரு 420’ என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
அதன்பின்னர் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கமலுடன் நெருக்கமானார்.
அதிமுக ஆதரவாளராக வலம் வந்த சினேகன், கமலின் நட்பு கிடைக்கவே தற்போது,‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தீவிர ஆதரவாளராக மாறிவிட்டார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சிக்காக ‘இது நம்மவர் படை’ என்கிற பெயரில் பிரச்சாரப் பாடல்கள் எழுதியிருக்கிறார்.
இதற்கான வெளியீட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.
சில மாதங்களுக்கு முன் கட்சி அறிவிப்பு வந்தாலும் நேற்றுதான் இந்த கட்சிக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Lyricist Snehan wrote songs for Kamalhaasans political party