எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

எதுக்குடா கிரிக்கெட்டு.? அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricketகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.

இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் அதையும் பார்ப்போம் என சிலர் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

ஆனால் ஐபிஎல் போட்டியை தற்காலிமாக இங்கே நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் போராட்டங்கள் செய்வோம் என்று தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.

இதனால் இனி 2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.

இந்நிலையில் பாடலாசிரியர் பா விஜய் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக ஒரு கவிதையை படித்து வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

அதில்…

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!

சே..சே..னு கூட்டம் மிதப்புல மிதக்கலாம் சேப்பாக்காம்.
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்..!

கடற்கரை ஓரத்த பூட்டி வச்சிப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் யாருடா புத்திசாலி..!

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்கப் பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!

விளம்பரத்துல தன்னையே வித்தவனெல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..!

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!

ஆவட்டும் சாரே! ஆன வரைக்கும் ஊர ஏமாத்து..
எங்கப் பச்சத்தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உங்க பம்மாத்து..!

காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மிறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!

காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்புடி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!

பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள விரட்டி அடிச்சு, வெளுக்கத் தாண்டா இந்தப் போராட்டம்..!

என்று எழுதியுள்ளார். இதை அவரே பாடல்போலவும், படித்துள்ளார்.

Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricket

இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா.? இந்த கேள்வியால் சூடான குஷ்பூ

இப்ப உன்னைய யாரு வச்சுருக்கா.? இந்த கேள்வியால் சூடான குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Khusboo angry reaction because of wrong questionதிரையுலக பிரபலங்கள் என்றாலும் அரசியல் பிரபலங்கள் என்றாலும் தற்போது தாங்கள் நினைக்கும் கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் நடிகை குஷ்பூ தற்போது அரசியல்வாதி ஆகிவிட்டதால் ட்விட்டரில் அதிகமான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

பெரும்பாலும் ட்விட்டரில் பிரபலங்கள் கருத்துக்களை பதிவிட்டால் சிலர் கடுமையான வார்த்தைகளை கூறி விமர்சித்து வருகின்றனர்.

அவர்கள் பதில் அளிப்பது இல்லை. ஆனால் குஷ்பூவோ கடுமையாக விமர்சித்தால் அதற்கு பதிலடி கொடுக்காமல் இருக்க மாட்டார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் ஒருவர் இப்ப உன்னைய யாரு வெச்சிருக்கா? என்று ஆபாசமாக கேட்டுள்ளார்.

அதற்கு குஷ்பூ கொடுத்துள்ள பதிலடி இதோ…

உன் அம்மாவ யாரு வச்சிருந்தா? உன்ன போல ஒரு நாய பெத்து எடுத்துருக்கா? மொதல்ல அத தெரிஞ்சிட்டு வா. அப்புறம் என்னை பத்தி பேசு என பதிலடி கொடுத்துள்ளார்.

குஷ்புவின் இந்த பதிலுக்கு அவரது ரசிகர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.

“உங்க ரேஞ்சுக்கு நீங்க இதுக்கு பதில் சொல்ல வேண்டாம். உங்க பெயரை கெடுத்துக்க வேண்டாம் என பதிவிட்டுள்ளனர்.

Khusboo angry reaction because of wrong question

khusboo tweet hot

தமிழகம் வந்துள்ள மோடிக்கு வீடியோ & கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்

தமிழகம் வந்துள்ள மோடிக்கு வீடியோ & கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM President Kamal appeal to Prime Minister Modiகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் தினம் தினம் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அருகே உள்ள ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்துள்ளார்.

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியை பறக்க விட்டுள்ளனர்.

மேலும் ஆகாயத்திலும் கருப்பு பாலுன்களை பறக்கவிட்டு அதில் ஓடிபோமோடி #GOBACKMODI என்று எழுதி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு வீடியோ வடிவில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவில்,

ஐயா வணக்கம், இது கமல்ஹாசன், நான் உங்கள் குடிமகன், இது என் மாண்புமிகு பிரதமருக்கு நான் அனுப்பித் தரும் ஒரு திறந்த வீடியோ,

தமிழகத்தில் நிலவும் இந்த நிலை தாங்கள் அறியாததல்ல, தமிழக மக்கள் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீதி வழங்கப்பட்டாகிவிட்டது. ஆனால் செயல்படுத்த வேண்டியது உங்கள் கடமை.

பாமரர்களும், பண்டிதர்களும் இந்த காலதாமதம் கர்நாடக தேர்தலுக்காகத் தான் என்று நம்பத் துவங்கி விட்டார்கள். அது ஆபத்தானது. அவமானகரமானதும் கூட, இதை நீங்கள் மாற்றுவீர்கள் என்று நம்புகிறோம்.

தமிழர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீதி கிடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை நீங்கள் அமைத்தே ஆக வேண்டும். அது உங்கள் கடமை.

நினைவுறுத்த வேண்டியது என் உரிமை. இங்கே இந்த வீடியோவில் சொல்ல மறந்த வார்த்தைகளை கடித வடிவிலும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தயது செய்து செயல்படுங்கள்.

இன்றைய நிலை மாற வழி செய்யுங்கள். வணக்கம். வாழ்க இந்தியா. நீங்களும். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

MNM President Kamal appeal to Prime Minister Modi

மேலும் கடிதம் மூலமும் தன் கருத்தை தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு..

MNM Kamal request to Modi

திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள்; நடிகை சுலக்ஷனா வேண்டுகோள்

திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள்; நடிகை சுலக்ஷனா வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குமாரி மதுமிதாவின் பரதம் நாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சுலக்ஷனா திருமணத்திற்கு பிறகும் நடனமாடுங்கள் என்று பேசினார்.

அந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு….

பிரபல தொழிலதிபர் ஜி.வினோத்குமார் – அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின்(வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகு விமர்சையாக நடந்தது.

குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி.ரோஷினி கணேஷ் ஏழு விதமான பாடல்களைப் பாடியதற்கு மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது.

சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஜட்ஜ் திரு.ஹரி பரந்தாமன், நடிகை சுலக் ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி பள்ளி நிர்வாகி திருமதி ஹேமலதா போன்றவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

அனைவரும் குமாரி மதுமிதாவின் நாட்டியத்தினைக் கண்டு வியந்து போனார்கள்.

நிகழ்சியில் பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் பேசுகையில்….”குமாரி மதுமிதா விற்கு இது அரங்கேற்றம் போல் தெரியவில்லை.

பல மேடைகளில் ஆடி அனுபவம் பெற்றவர் போல் தோன்றியது.மதுமிதாவின் தாய்,தந்தையரின் அயராத ஊக்குவிப்பின் செயலை மிகவும் பாராட்டுகிறேன்.

நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம். அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது.

இளம் வயதில் பரதம் கற்றுக்கொண்டால் நினைவாற்றல் வளரும்… நோய்நொடிகள் வரவே வராது.

கல்வியில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்க பரதம் கைகொடுக்கும்” மதுமிதா பரதக் கலையிலும், கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கும்,மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி.ஸ்ரீமதி வெங்கட் மற்றும் பக்கவாத்தியக்காரர்களுக்கும் மதுமிதாவின் பெற்றோர் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.

Actress Sulakshna participated in Miss Madhumithas bharathanatyam show

Baratham-18

 

Baratham-9

Baratham-4

காளி-க்கு ரூட் கிளியர்; ரிலீஸ் செய்ய தடையில்லை என கோர்ட் உத்தரவு

காளி-க்கு ரூட் கிளியர்; ரிலீஸ் செய்ய தடையில்லை என கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras HC vacates interim stay on film Vijay Antonys Kaaliஇசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தனது மனைவி பாத்திமா தயாரிப்பில் நாயகனாக நடித்துள்ள படம் காளி.

இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, அஞ்சலியுடன் 3 நாயகிகள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் காளி படத்துக்கு தடை விதிக்கக்கோரி பிச்சர் பாக்ஸ் நிறுவன உரிமையாளர் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில் விஜய் ஆண்டனி தயாரித்த அண்ணாதுரை படத்தை வெளியிட்டதன் மூலம் தனக்கு 4 கோடியே 73 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இந்த தொகையை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 79 லட்சம் ரூபாய் பணம் தராமல், காளி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன், காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஜய் ஆண்டனியின் மனைவி மற்றும் காளி படத்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆதிகேசவலு ஆகியோர் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் 2 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்த உத்தரவிட்டு, படத்தை வெளியிடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

இப்படத்தை வெளியிடுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீக்குவதாகவும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

எனவே சினிமா ஸ்டிரைக் முடிந்தவுடன் காளி படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Madras HC vacates interim stay on film Vijay Antonys Kaali

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணை இயக்கும் விஜய்சேதுபதி பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith Jayakodi will direct Bigg Boss fame Harish Kalyan`சிந்து சமவெளி’, `பொறியாளன்’, ‘வில் அம்பு’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் படு பிரபலமானார்.

தற்போது இளன் இயக்கத்தில் யுவன் தயாரிப்பில் `பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், `புரியாத புதிர்’ படத்தை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடியின் அடுத்தபடத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கிறாராம்.

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Ranjith Jayakodi will direct Bigg Boss fame Harish Kalyan

More Articles
Follows