தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.
இருந்தபோதிலும் ஐபிஎல் போட்டிகள் நடந்தாலும் அதையும் பார்ப்போம் என சிலர் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.
ஆனால் ஐபிஎல் போட்டியை தற்காலிமாக இங்கே நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் போராட்டங்கள் செய்வோம் என்று தமிழ் உணர்வாளர்கள் எதிர்த்து வருகின்றனர்.
இதனால் இனி 2018ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெற வாய்ப்பு இருக்காது என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாடலாசிரியர் பா விஜய் அவர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக ஒரு கவிதையை படித்து வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.
அதில்…
தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..
முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..!
சே..சே..னு கூட்டம் மிதப்புல மிதக்கலாம் சேப்பாக்காம்.
அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்..!
கடற்கரை ஓரத்த பூட்டி வச்சிப்புட்டியே காவலாளி..
புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் யாருடா புத்திசாலி..!
ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..
எங்கப் பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..!
விளம்பரத்துல தன்னையே வித்தவனெல்லாம் வீரன்ற..
தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..!
ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே..
அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..!
ஆவட்டும் சாரே! ஆன வரைக்கும் ஊர ஏமாத்து..
எங்கப் பச்சத்தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உங்க பம்மாத்து..!
காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
எங்க தொண்டைய மிறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..!
காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..
அப்புடி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..!
பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..
உங்கள விரட்டி அடிச்சு, வெளுக்கத் தாண்டா இந்தப் போராட்டம்..!
என்று எழுதியுள்ளார். இதை அவரே பாடல்போலவும், படித்துள்ளார்.
Lyricist Pa Vijays poem to support cauvery and to ban IPL Cricket