தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கம் முடியும் முன்பே டாஸ்மாக்கை திறந்தது தமிழக அரசு.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கு தொடரப்படவே டாஸ்மாக்கை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்தது.
மேலும் ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை வாங்கியது.
இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் தமிழக அரசின் மேல் முறையீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்.
தயவுகூர்ந்து
#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து ரஜினியின் ரசிகரும் நடிகருமான ஜீவா கூறியுள்ளதாவது…
“தலைவர் ரஜினிகாந்த் யார் மீதும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, மக்களின் குரலாக நம்மை ஆளுபவர்களுக்கு மிகவும் கண்ணியமான முறையில் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் ஆளும்கட்சி அலட்சியம் செய்துள்ளது. எனவே தலைவர் ரஜினி சொன்னது போல், இனி ஆட்சிக்கு வருவோம் என்பதை அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுகவினரும் மறந்து விட வேண்டும்.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர் ரஜினிகாந்த் ஆட்சி விரைவில் மலரும்,” என்று கூறினார்.