தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’.
இந்த படத்தில் பாரதிராஜா, அதிதி பாலன், கௌதம் வாசுதேவன் மேனன், யோகி பாபு, மஹானா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வைரமுத்து பாடல்களை எழுத ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை வீரசக்தி என்பவர் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழா மேடையில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும்போது..
“தங்கர்பச்சான் படங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும். அவரது ஒன்பது ரூபாய் நோட்டை நான் பார்த்து இருக்கும்..
தம்பி இந்த படத்தை கூட நீங்க பார்த்திருக்கீங்களா என்று என்னிடம் கேட்டார். அவருக்காக தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன்.
தற்போது லியோ சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த இடைவெளியில் அவருக்காக நான் வந்தேன். கருமேகங்கள் கலைகின்றன படம் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தி பேசினார் லோகேஷ்.
அதன் பின்னர் மேடை ஏறிய தங்கர் பச்சன் அவருக்கு பலாப்பழமும் பாதாம் முந்திரி பருப்பும் கொடுத்தார். அதற்கான காரணத்தை தொகுப்பாளர்கள் மோகன் மற்றும் அனிதா கேட்டபோது.. “நான் உழவன் என் விவசாய நிலத்தில் விளைந்தது.்அவருக்கு கொடுத்தேன் வேறு ஒரு காரணமும் இல்லை என்றார்.
தற்போது விஜய் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.. அந்த இடைவெளியில் இங்கே வந்திருக்கிறார்.. கண்டிப்பாக நானே அதுபோல ஒரு சூழ்நிலை வந்திருப்பேனா என்று தெரியாது அவர் வந்தமைக்கு நன்றி ” என தெரிவித்தார்.
Lokesh Kanagaraj speech at Karumegangal Kalaigindrana