ரஜினிக்கு முன்பே கமலை இயக்க ‘மாஸ்டர்’ ப்ளானில் லோகேஷ்

ரஜினிக்கு முன்பே கமலை இயக்க ‘மாஸ்டர்’ ப்ளானில் லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajமாநகரம், கைதி ஆகிய இரு சூப்பர் ஹிட் படங்களை அடுத்து விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

கொரோனா பிரச்சினையால் இப்பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ள படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் அதனை லோகேஷ் இயக்கவுள்ளதாகவும் வந்த தகவல்களை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் கொரோனா பிரச்சினைக்கு பின்னர் ரஜினி அண்ணாத்த படத்தில் கவனம் செலுத்துவார் என்பதால் கமலை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

அதன் பின்னர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் இரண்டு உச்ச நட்சத்திரங்களை இயக்கும் வாய்ப்பை ஒரே நேரத்தில் பெறவுள்ளார் லோகேஷ்.

உயிரோட இருக்கணும் குமாரு… அதான் மேட்டரு; கொரோனாவுக்கு கொக்கி குமார் விழிப்புணர்வு

உயிரோட இருக்கணும் குமாரு… அதான் மேட்டரு; கொரோனாவுக்கு கொக்கி குமார் விழிப்புணர்வு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director selvaraghavanசெல்வராகவன் இயக்கிய படங்களில் அனைவரையும் கவர்ந்த படங்களில் ஒன்று புதுப்பேட்டை.

தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் இந்த படத்தில் நடித்திருந்தனர். விஜய்சேதுபதி இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது ரெடியாகும் என அடிக்கடி செல்வராகவனை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புதுப்பேட்டை பட காட்சி வைத்து கொரோனாவுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அந்த மீம்ஸ்சில்… கொக்கி குமார் கேரக்டர் தனுஷ்க்கு மாஸ்க் போட்டுவிட்டுள்ளனர்.

அதில், “இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு… அது மட்டும்தான் மேட்டரு” என குறிப்பிட்டுள்ளார் செல்வா.

திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

திருச்சியில் தேர்வு எழுத வந்து ரசிகர்களிடம் சிக்கிய சாய்பல்லவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sai pallaviமலையாள சினிமாவில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறவர் நடிகை சாய் பல்லவி.

இவர் கடந்த 2016ம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவராக (டாக்டராக) பணிபுரிய வேண்டுமென்றால் எப்எம்ஜிஇ தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

இதனையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தேர்வை எழுத வந்துள்ளார் சாய்பல்லவி

நேற்று திருச்சியில் உள்ள எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்திருக்கிறார்.

அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

அந்த செல்பிக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது.

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

GDP சரிவு.: டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் மோடி; காங். தலைவர்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trump modiGDP – ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி மைனஸ் 23. 9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக உற்பத்தி துறை மைனஸ் 39.3 விழுக்காடும், சுரங்கத்துறை மைனஸ் 23.3 விழுக்காடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.

வேளாண்துறையை தவிர மற்ற அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இது கடந்த 45/50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான சரிவு பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது..

சுதந்திர இந்தியாவின் மிக மோசமான சரிவு. கடந்த மார்ச் மாதமே மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும், அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது..

உலகின் மிக வலிமையான இந்திய பொருளாதாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர், பொருளாதார கொள்கையை தவறாக கையாள்வதில் பிரதமர் மோடி டிரம்ப்க்கு அடுத்த இடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மோகன் ராமன் மகளும் காமெடி நடிகையுமான வித்யூலேகா நிச்சயதார்த்தம்

மோகன் ராமன் மகளும் காமெடி நடிகையுமான வித்யூலேகா நிச்சயதார்த்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vidyullekha ramanகவுதம் மேனனின் இயக்கத்தில் ஜீவா நடித்த நீதானே என் பொன் வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக நடித்தவர் வித்யூலேகா.

இந்த படத்தின் மூலம் தான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜில்லா, வீரம், தீயா வேலை செய்யணும் குமாரு, பவர் பாண்டி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் வித்யுலேகா.

இவரின் தந்தை மோகன் ராம் அவர்களும் பல படங்களில் நடித்துள்ளார்.

ஓவர் குண்டாக இருக்கும் வித்யுலேகா சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்திருந்தார்.

அப்போதே இவர் திருமணத்திற்கு தயாராகிறார் என்ற செய்திகள் வலம் வந்தன.

இந்த நிலையில் வித்யுலேகாவுக்கும் சஞ்சய் என்பவருக்கும் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

அரியர் ஸ்டூடண்ஸ் ஆல் பாஸ்..; ஆனா மார்க் எப்படி போடுறது..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tn college studentsதமிழக கல்லூரிகளில் அரியர் தேர்வுகளும் கட்டணம் செலுத்தி இருந்தாலோ அரியர் மாணவர்கள் தேர்ச்சி அடையச்செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கு மாணவர்களிடையே பலத்த வரவேற்பு உருவானது. பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்தள்ளது.

பல அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான மதிப்பெண் வரவில்லையாம்.

அதாவது முந்தைய செமஸ்டர்களில் மாணவர்கள் பெற்ற எக்ஸ்டர்னல் (External) மற்றும் இண்டர்னல் (Internal) மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் பாஸ் மார்க் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

முந்தைய செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ-யின் வழிகாட்டுதல் ஆகும்.

More Articles
Follows