BREAKING தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீடிப்பு.; தளர்வுகள் இருக்கா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீடிக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு..

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு.

அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு.

பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு.

திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.

விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு.

10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி.

பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு.

Lockdown in TN extended till 31st Aug Complete lockdown on Sundays

BREAKING கொரோனா லாக்டவுன் 3.. ஜிம்கள் அனுமதி.; பள்ளி கல்லூரிகள் & தியேட்டர்கள் தடை தொடரும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம்…

ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் யோகா மையங்கள், ஜிம்கள் செயல்படுவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.

இரவுநேரத்தில் தனிநபர்கள் நடமாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.

எவை அனுமதி கிடையாது…?

மெட்ரோ ரயில்கள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தொடரும்.

திரையரங்குகள், ஸ்விம்மிங் பூல், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடரும்

அரசியல் கட்சி, விளையாட்டு, கலாச்சார கூட்டங்களுக்கான தடை தொடரும்.

ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

ஃபேஸ்புக் ட்விட்டர் யூடியூப் தள வீடியோக்களை சென்சார் செய்ய ஐகோர்ட்டில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய வேண்டும் என கோரிக்கை சமீப காலமாக வலுத்து வருகிறது.

தணிக்கை செய்ய தனி வாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் ஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்…

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

மேலும் இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வேலை செய்து வருவதாலும், இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் எந்தவித கட்டுப்பாடும் இன்றி யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனிவாரியம் ஒன்றை அமைக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் சிம்புவின் ரீல் சிஸ்டருக்கு ஆண் குழந்தை பிறந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூது கவ்வும், அண்ணனுக்கு ஜே… உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஞ்சலி ராவ்.

வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் தலையணை பூக்கள், மகாலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

கௌதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு தங்கையாக நடித்திருந்தார்

அதாவது நாயகி மஞ்சிமாவுக்கு தோழியாக நடித்தார்.

இவர் எடிட்டர் ஜோமினை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அஞ்சலி ராவ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம்.

மௌனம் மிக ஆபத்தானது..; சுற்றுச்சூழல் காக்க மௌனம் கலைப்போம். – சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அரசு வெளியிட்டுள்ள “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு” அச்சுறுத்தலாகவே அமையும் என்று, நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி நேற்று தெரிவித்திருந்தார்.

இதை நேற்று நம் தளத்தில் பார்த்தோம்.

இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பகிர்ந்துள்ளார் சூர்யா.

அத்துடன் இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி கருத்து பதிவிட்டுள்ளார் சூர்யா.

அவரின் பதிவில்….

பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது எனக் கூறியுள்ள சூர்யா, காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க, நம் மௌனம் கலைப்போம்” என தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹஜ் புனித யாத்திரை தொடங்கியது.; வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.

இந்தாண்டு மக்காவில் உள்ள புனித தலத்திற்குள் முதல் கட்டமாக 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அனைவரும் முகக் கவசத்துடன், தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பயம் காரணமாக இந்த ஆண்டு ஆயிரத்துக்கும் குறைவான பயணிகள் மட்டுமே புனித யாத்திரை மேற்கொள்ள சவுதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு, தனிமைக் காலம் முடிந்த பிறகே ஹஜ் யாத்திரை செல்ல முடியும்.

அந்த நாட்டு குடிமக்களையும், அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினரை மட்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows