சிவாஜி-கமல் மட்டும்தான் ‘செவாலியர் விருது’ பெற்றார்களா?

சிவாஜி-கமல் மட்டும்தான் ‘செவாலியர் விருது’ பெற்றார்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chevalier awardபிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றார்.

நேற்று (ஆகஸ்ட் 21, 2016) இவ்விருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கலைத்துறைக்கு இவர்கள் செய்த சேவையை பாராட்டி இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர தமிழகத்தை சேர்ந்த 4 பேர்கள் இவ்விருதினை பெற்றுள்ளனர். (இருவர் ஈழத்தமிழர்கள்)

1. அஞ்சலி கோபாலன் – (2013) செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக)
2. சிவயோகநாயகி இராமநாதன் – (2014) செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண்.. ஆசிரியர் & அதிபர்.
3. ஷெரீன் சேவியர் – (மனித உரிமைசார் பணிகளுக்காக)
4. நாகநாதன் வேலுப்பிள்ளை – (2011) யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

இவர்களைத் தவிர இந்தியளவில் பெற்றுள்ளவர்கள் யார்? என்பதை பார்ப்போம்…

  • ஜே.ஆர்.டி.டாட்டா – 1983 (தொழில் துறை)
  • சத்யஜித்ரே – 1987 (சினிமா)
  • ஜூபின் மேத்தா – 2001
  • எம்.பாலமுரளிகிருஷ்ணா – 2005 (இசை)
  • அமிதாப்பச்சன் – 2007 (சினிமா)
  • ஷாரூக்கான் – 2014 (சினிமா)
  • யஸ்வந்த் சின்ஹா – 2015 (நிதி நிபுணத்துவம்)
  • மனிஷ் அரோரா – 2016 (ஆடை வடிவமைப்பு)

செவாலியர் விருது பற்றி ஒரு பார்வை…

  • மாவீரன் நெப்போலியன், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளில் வீரச் செயல்கள் புரிந்தவர்களுக்காக துவங்கியதுதான் இந்த செவாலியே விருது.
  • அதன்பின்னர் 1802ஆம் ஆண்டிலிருந்து எல்லாத்துறை வல்லுனர்களுக்கும் இந்த விருது வழழங்கப்படலாம் என தீர்மானித்தனர்.
  • இவ்விருத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் பிரபலங்கள், குறைந்தபட்சம் அந்த துறையில் 25 வருடங்கள் சேவையாற்றியிருக்க வேண்டும்.
  • உலகளவில் 93,000 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாட்டினைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் வருடா வருடம் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
  • பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகையான எல்சீ அரண்மனையில் சிறப்பு விருந்துடன், இந்த விருது அளிக்கப்படும்.
  • செவாலியே விருது பெற்ற கலைஞர்கள், பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அரசாங்க பிரதிநிதிகளுக்கு சமமானவர்கள்.
‘பொண்டாட்டிடா..’ பன்ச் டயலாக் பேசி, ரஜினியை கவர்ந்த பெண்

‘பொண்டாட்டிடா..’ பன்ச் டயலாக் பேசி, ரஜினியை கவர்ந்த பெண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stillsரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள பல பேர் காத்திருக்கின்றனர்.

ஆனால் ரஜினியோ தன்னை கவர்ந்த ஒரு பெண்ணுடன் போட்டோ எடுக்க விரும்பி அவரை அழைத்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல… கபாலிடா என ரஜினி பேசிய பன்ச் டயலாக்கை பொண்டாட்டிடா என பேசி இணையங்களை கலக்கியவர்தான்.

எனவே, ரஜினி தரப்பு அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசி நேரில் அழைத்துள்ளனர்.

சென்னை சேமியர்ஸ் சாலையிலுள்ள தனுஷ் வீட்டில் இவர்களின் சந்திப்பு நடந்துள்ளது. அப்போது ரஜினி மகள் ஐஸ்வர்யாவும் உடன் இருந்துள்ளார்.

அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் என்ன சொன்னார்கள் என்று ஆர்வமாக கேட்டு அறிந்தாராம் ரஜினிகாந்த்.

‘விஜய்யை என்றும் வியந்து பார்க்கிறேன்’ – சதீஷ்

‘விஜய்யை என்றும் வியந்து பார்க்கிறேன்’ – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy suresh sathishகாமெடி நடிகர்களில் தனக்கான பாதையை உருவாக்கி டாப் ஹீரோக்களுடன் நடித்து வருபவர் சதீஷ்.

கத்தி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்யின் 60வது படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து சதீஷ் கூறியதாவது…

விஜய் சாருடன் மீண்டும் நடிப்பதை என்னுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்வேன்.

சக நடிகர் போல் அவரை பார்க்கவே முடியாது. அப்படியான ஒரு சிறந்த மனிதர்.

இடை இடையே நிறைய ஆலோசனைகளும் சொல்வார். எனவே, அவரை வியந்து பார்க்கிறேன்.

அவரது நிறைய படங்களில் அவரே காமெடி செய்திருப்பார். அதனால் ஒரு காமெடியானாக நான் அவருடன் நடிப்பது எனக்கு உதவியாக இருக்கிறது” என்றார்.

‘எல்லா விருதுக்கும் தகுதியானவர் கமல்’… சூர்யா-கார்த்தி வாழ்த்து

‘எல்லா விருதுக்கும் தகுதியானவர் கமல்’… சூர்யா-கார்த்தி வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal surya karthi sivakumarசெவாலியர் விருது பெற்றுள்ள கமல்ஹாசனை திரையுலகினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஷால், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று கமலை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவரது உடல் நலத்தையும் கேட்டு அறிந்தனர்.

மேலும் சிவக்குமார், சூர்யா, கேஎஸ்ரவிக்குமார், ஸ்ரீமன், பிரேம்குமார் உள்ளிட்டோரும் அவரை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில்….

“செவாலியே என்ன உலகின் அனைத்துக் கலைஞர்களுக்கும் வழங்கும் எல்லா விருதுகளுக்கும் தகுதியான ஒரே கலைஞன். இன்று வாழும் கலைஞன். நீங்கள் ஒருவரே” என்றார்.

‘ரசிகர்களுக்காக சம்பளத்தை உயர்த்தாதவர் எம்ஜிஆர்’’ – மயில்சாமி

‘ரசிகர்களுக்காக சம்பளத்தை உயர்த்தாதவர் எம்ஜிஆர்’’ – மயில்சாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rickshawkaran movie posterஎம்ஜிஆர் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற ‘ரிக்ஷாக்காரன்’ படத்தின் நவீன டிஜிட்டல் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேவி பாரடைஸ் தியேட்டரில் நடைபெற்றது.

45 ஆண்டுகளுக்கு முன் இப்படம் இதே அரங்கில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், சத்யா மூவிஸின் நிறுவனருமான ஆர். எம். வீரப்பன், சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், நடிகர்கள் மயில்சாமி, சின்னி ஜெயிந்த், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மயில்சாமி பேசியதாவது…

புரட்சி தலைவரின் படங்களையும் பாடல்களையும் மட்டுமே பார்த்து வளர்ந்தவன் நான்.

‘ஆங்கிலம் அறிவுக்காகத் தான் மட்டுமே ஆடம்பரத்திற்காக இல்லை…’ என்ற அவரது ‘ரிக்ஷாக்காரன்’ என்னால் மறக்க முடியாது.

ரசிகர்களின் டிக்கெட் விலை உயரக்கூடாது என்பதற்காக தன் சம்பளத்தை உயர்த்தாத ஒரே நடிகர் அவர்தான். என்றார்.

சின்னி ஜெயந்த் பேசியதாவது…

“ஏழை சிரிச்சா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் சிரித்தால் புரட்சி…” இந்த விழாவானது, என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தேடி தந்துள்ளது…” என்றார்.

ஆர்.எம்.வீரப்பன் பேசியதாவது…

எனக்கு 90 வயது ஆகிவிட்டது என்றாலும், இந்த விழா மூலம் எனக்கு நாற்பது வயது குறைந்து இருக்கிறது.

என்னை அன்போடு வரவேற்ற ஒவ்வொரு எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கும் நன்றி.’ என்றார்.

Rickshawkaran digital trailer released

 

 

‘ஜோக்கர்’ ராஜூமுருகனின் அடுத்த அதிரடி

‘ஜோக்கர்’ ராஜூமுருகனின் அடுத்த அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

joker mvoie shooting spotகுக்கூ என்ற தனது முதல் படத்திலேயே ஒரு அழகான காதல் கதையை சொன்னவர் ராஜூமுருகன்.

எனவே இவரது அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அண்மையில் வெளியான இவரது ‘ஜோக்கர்’ எதிர்பாராத வகையில் பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது.

அரசியலை நையாண்டி செய்த இப்படத்திற்கு இதுவரை எந்தெவொரு எதிர்ப்பும் எழவில்லை. மாறாக அரசியல்வாதிகளே பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன் அடுத்த படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

அடுத்த படத்திற்கான கதையை எழுதி வருகிறேன். விரைவில் அப்படம் அறிவிப்பேன். இது முற்றிலும் வேறு களத்தில் இருக்கும்.

நான் என்னுடைய இயக்குநர் லிங்குசாமியிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன். என்றார்.

‘ஜோக்கர்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.

இந்தியில் தானே ரீமேக் செய்ய விரும்புவதாக ராஜூமுருகன் கூறியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows