தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காலா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய ரஜினிகாந்த்…
இது காலா படத்தின் இசை வெளியீட்டு விழா போல் இல்லை. படத்தின் வெற்றி விழா போல் உள்ளது.
என்னுடைய படத்தில் சிவாஜி படத்திற்கு தான் இறுதியாக வெற்றி விழா நடைபெற்றது.
அப்போதைய முதல்வர் கருணாநிதி எனது சிவாஜி பட திரைப்பட வெற்றி விழாவிற்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடையில் பேசியும் இருந்தார்.
75 வருடமாக தமிழக மக்கள் அந்த குரலை கேட்டு கொண்டு இருந்தனர்.
தற்போதும் அந்தக் குரலை கேட்பதற்கு கோடிக்கணக்கான தமிழர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். நானும் காத்துக்கொண்டிருக்கின்றேன். அவர் விரைவில் பேசுவார் என நம்புகிறேன்.
நான் கங்கையை காணவே அடிக்கடி செல்கிறேன். என் வாழ்க்கையில் கனவுகளில் ஒன்று நதி இணைப்புகள்தான்.
தென்னிந்திய நதிகளையாவது இணைத்து விட்டு அடுத்த நாளே நான் கண் மூட (உயிரை விட) தயார்.
வாழ்க்கையிலும் சரி, திரைப்படத்திலும் சரி நல்லவனாக இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது.
ஒரு படம் ஓடவில்லை என்றால் ரஜினி முடிந்துவிட்டான் என சொல்கிறார்கள். இதை 40 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
20 வருடங்கள் ஓடலாம். 30 வருடங்கள் ஓடலாம். இவன் என்னய்யா ஓடிக்கிட்டே இருக்கான் என்கிறார்கள்.
நான் என்ன செய்ய.? நான் ரசிகர்களாலும், ஆண்டவனாலும் நான் 40 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறேன்.” என பேசினார் ரஜினிகாந்த்.
Linking Southern Rivers My Only Dream says Rajini at Kaala audio launch