‘லிங்குசாமியின் கவிதையை படித்ததும் நனைந்தேன்…’ – இயக்குனர் சசி…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் லிங்குசாமி ஏற்கெனவே’ லிங்கூ’ என்கிற தனது முதல் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார்.

இவரின் இரண்டாவது படைப்பாக ‘லிங்கூ-2’ ‘ வாக ‘செல்ஃபி எடுத்துக்கொள்கிறது மரம்’ என்கிற ஹைக்கூ கவிதைகள் நூலை எழுதியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா, கௌதம் மேனனின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கவிதை நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட கௌதம் மேனன் மற்றும் பார்த்திபன் பெற்றுக் கொண்டனர்.

பாடகி அனுராதா ஸ்ரீராம் ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே’ என்ற பாடலைப் பாடினார்.

விழாவில் லிங்குசாமி பேசும்போது…

நான் எப்போதும் கவிதையுடன் இருப்பதாகவே உணர்கிறேன். பிறகுதான் கதை எல்லாம்.

கையில் காசு பணம் வேண்டாம். கவிதை போதும் பிழைத்துக் கொள்ளலாம் என்றிருப்பேன்.

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கவிதைகளுக்கு முன்னால அதெல்லாம் எனக்கு தெரியாது.

இப்போது கூட வருகிற அழைப்புகளில் 3 அழைப்புகள் பணம் திருப்பித்தரக் கேட்கும் அழைப்புகளாக இருக்கும். நான் யாரையும் ஏமாற்ற மாட்டேன்.

எனக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது. இந்த மனநிலையோடு அடுத்த படத்தை தொடங்குகிறேன். எல்லாக் கஷ்டங்களும் கடந்து போகும்” என்றார்.

சசி பேசும்போது…

”நல்ல கவிதை என்பது அதைப் படித்தவனை எழுத வைக்கும். லிங்குவின் கவிதைகளைப் படித்ததும் மொட்டமாடி மழையில் நனைந்தேன்” என்றார்.

பார்த்திபன் பேசும்போது…

”சினிமா கஷ்டத்தையோ நஷ்டத்தையோ கொடுக்கலாம். ஆனால் கவிதை இஷ்டத்தைத்தான் கொடுக்கும்” என்றார்.

விழாவில், தயாரிப்பாளர் யூடிவி தனஞ்ஜெயன், ஊடகர் ‘நீயா நானா’ புகழ் கோபிநாத், பத்திரிகையாளர் ரா.கண்ணன், இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், மிஷ்கின், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, மாரிமுத்து, நந்தாபெரியசாமி, ராஜுமுருகன், நலன் குமாரசாமி, மணிபாரதி, விஜய் மில்டன், கவிஞர்கள் அறிவுமதி,விவேகா,நெல்லை ஜெயந்தா, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டனர்.

பணத்திற்காக எந்த தவறும் செய்ய மாட்டார்… பாரிவேந்தர் பற்றி விக்ரமன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேந்தர் மூவிஸ் மதன் மாயமானதை தொடர்ந்து, எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் பாரி வேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பில் இயக்குனர் விக்ரமன் பேசியதாவது…

“திரைத்துறையின் பல்வேறு பிரிவினருக்கு பாரி வேந்தர் இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.

நலிவடைந்த கலைஞர்களின் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் மற்றும் மருத்துவ துறைகளிலும் இலவச கல்வியை வழங்கி வருகிறார்.

மேலும் குறும்பட இயக்குனர்களுக்கு 5டி கேமரா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வழங்கி அவர்களுக்கும் திரைத்துறையில் சாதிக்க வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

வேந்தர் மூவிஸ் மதன் பற்றி எந்த தகவலும் தெரியாது. அதற்காக அவர் கெட்டவர்? என்று சொல்லவில்லை.

பாரிவேந்தர் மிகவும் நல்லவர். பணத்திற்காக எந்த தவறும் செய்ய மாட்டார்.

அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் இந்த சந்திப்பை நாங்கள் ஏற்பாடு செய்தோம்.

அவருடைய எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் நிறைய கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

அப்படி இருந்தால், அவர் எதற்காக எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் இத்தனை உதவிகளை செய்ய வேண்டும்.”

இவ்வாறு பேசினார் விக்ரமன்.

இணையத்தை கலக்கும் படம்… கமலே நடனம் அமைத்து இயக்கிய பாடல்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் கமல், ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘சபாஷ் நாயுடு’.

இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இளையராஜா இசையில் உருவான ஒரு பாடலை நேற்று படமாக்கவிருந்தனர்.

ஆனால் அப்போது இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமலே அப்பாடலை படமாக்கினாராம்.

மேலும் கமலே பாடலுக்கான நடனத்தையும் அமைத்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இத்தகவலை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எனவே இவரது ரசிகர்கள் இப்படத்தை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

அம்மாயி கேரக்டரிலும் அசத்தப் போகும் வரலட்சுமி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாரை தப்பட்டை படத்தில் சூறாவளி கேரக்டரில் நடித்தார் வரலட்சுமி.

கேரக்டரின் பெயருக்கு ஏற்றவாறே படத்தில் அதிரடி ஆட்டம் ஆடி, இறுதியில் கலங்கவும் வைத்தார்.

இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் கூட எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அர்ஜூனின் நிபுணன் மற்றும் மம்மூட்டியுடன் கசாபா உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து, அம்மாயி என்ற படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கிறாராம் வரலட்சுமி.

இளையராஜா இசையில் உருவாகும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

ஜி.சங்கர் இயக்கும் இப்படத்தில் வினய் நாயகனாக நடிக்கிறார்.

உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கை பேசிய பிரேமலதா விஜயகாந்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தேமுதிக கட்சியைச் சேர்ந்த பிரமுகர் இல்லத்திருமணம் காரைக்குடியில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்…

”சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்து விட்டதால் சோர்வடைந்து விட்டதாக கூறுகின்றனர்.

விஜயகாந்த் படங்களில் நடிக்கும்போது வில்லனிடம் அடி வாங்கி கீழே விழுவார். பிறகுதான் எழுந்து நின்று திருப்பி அடிப்பார்.

அதுபோல் மீண்டும் எழுந்து வருவார். தேமுதிக வெற்றி பெறும்.

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான். ஆனால், கைவிட மாட்டார். கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால் ஒருநாள் கைவிட்டு விடுவார்” என்று பேசினார்.

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்… என்ற இந்த பன்ச் டயலாக் பாட்ஷா படத்தில் ரஜினி பேசியிருப்பார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு படக் கூத்து…. தயாரிப்பாளரை மாற்றிய ஜெயம் ரவி டீம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மிருதன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஜெயம் ரவி மற்றும் சக்தி செளந்தராஜன் இணைகின்றனர்.

இப்படத்தின் கலைஞர்கள் தேர்வு மற்றும் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இப்படத்தை ஒரு நாள் கூத்து படத்தை தயாரித்த, கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கவிருந்தது.

ஆனால் தற்போது இப்படத்தை கெனன்யா நிறுவனத்துக்கு பதிலாக ஜபக் தயாரிக்கிறார்.

‘போகன்’ படத்தை அடுத்து, சக்தி செளந்தர்ராஜன் இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி.

More Articles
Follows