தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அக்டோபர் 19ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்திற்கு தமிழகத்தில் அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கேரளா ஆந்திரா, கர்நாடகாவில் அதிகாலை 4 மணி 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே விஜய் ரசிகர்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
அந்த மாநிலங்களில் அதிக அளவு புக்கிங் நடைபெறுவதால் பல தியேட்டர்களில் கூடுதல் சிறப்பு காட்சிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்திற்கும் தமிழகத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. எனவே மற்ற மாநிலங்களுக்கு ரஜினி ரசிகர்கள் சென்று அதிகாலை காட்சிகளை பார்த்து ரசித்தனர். மேலும் அவர்கள் அதிரடியான விமர்சனங்களை பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
Like Jailer movie Leo shows got increased on other States