எஸ்பிபி உடல் நல்லடக்கம்.: இறுதிச் சடங்குகளை செய்தார் சரண்; 24 காவலர்கள் 3 முறை துப்பாக்கியால் சுட்டனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 1.04 மணியளவில் மரணமடைந்தார்.

அவரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.

நேற்று இரவு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி. அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் 12 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.

அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆந்திர மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக அரசு சார்பில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் காவலர்கள் இறுதி அரசு மரியாதை கொடுத்தனர்.

அதன்படி 24 காவலர்கள் தங்கள் துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர்.

பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.

Legend SP Balasubramanyams funeral live updates

BREAKING எஸ்பிபி உடல் நல்லடகத்தின் போது விஜய் நேரில் இறுதி அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று செப்டம்பர் 25ஆம் தேதி மதியம் 1.04 மணியளவில் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் 12.30 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

உங்களை அறிமுகப்படுத்திய SPB-க்கு ஓர் இரங்கல் தெரிவிக்க மனமில்லையா அஜித்.?!

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.

அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பிபி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. (சற்று நேரத்தில்) இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.

Actor Vijay paid his last respect to late singer SPB

BREAKING பாடகர் எஸ்பிபி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செப்டம்பர் 25 இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு பிரபல பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

மேலும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர் சென்னை, டெல்லி அணி வீரர்கள்.

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்பிபி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என திருவள்ளூர் எஸ்பி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
செய்யப்படும்.

தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.

அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Singer SPB’s Funeral With Full State Honours on Saturday

ஒரு சகாப்தம் முடிந்தது. இனி இசையும் உலகமும் முன்புபோல இருக்காது…; SPB பற்றி சித்ரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு பிரபல பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

இந்த நிலையில் அவருடன் ஆயிரக்கணக்கான படங்களில் இணைந்து பாடிய சின்னக்குயில் சித்ரா தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்…

ஒரு சகாப்தம் முடிந்தது. இனிமேல் இசையும், உலகமும் பழையபடி இருக்காது. என்னை நல்ல பாடகியாக மாற்றுவதற்கு அவர் வழிநடத்தியதற்கு நன்றி எனக்கு வார்த்தைகள் போதாது. சாவித்திரியம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும், குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

An era is over. Music will never be the same. World will never be the same. Words are not enough to Thank him for guiding me to be a better singer. Cannot think about a concert without your great & gracious presence. Condolences &prayers to Savithriamma,Charan,Pallavi & Family.

Singer Chitra condolence to demise of legendary singer SPB

குழந்தையாகவே வாழ்ந்து இறைவனிடம் சேர்ந்து விட்டார்… SPB மறைவுக்கு ராஜ்கிரண் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியன்
அண்ணன்,

கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத
குழந்தையாகவே வாழ்ந்து விட்டு,
இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார்…

ஆகஸ்டு மாசம் 5 ஆம் தேதி,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று, ஒரு காணொளி வெளியிட்டார்.

அதில், “மிக மிக சிறிய அளவிலான
தொற்று தான். வீட்டிலேயே தனிமையில்
இருந்தாலே சரியாகிவிடும்.

ஆனாலும்,
என் குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதால் தான், மருத்துவ மனைக்கு வந்து விட்டேன், வெகு சீக்கிரம் வீட்டுக்கு
வந்துவிடுவேன்” என்று, மிகுந்த
நம்பிக்கையோடும், தெளிவாகவும்
பேசியிருந்தார்…

ஆனால் இன்று…அவர் நம்முடன் இல்லை…

இந்த இழப்பை தாங்க முடியவில்லை.

அண்ணனின் ஆத்மா சாந்தியடைய,
எல்லாம் வல்ல இறைவனிடம்
மன்றாடுகிறேன்…

– நடிகர் ராஜ்கிரண்

Actor RajKiran condolence to SPB demise

உலகை மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்…; SPB மறைவுக்கு STR இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எத்தனை ஆயிரம் பாடல்கள்?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்?? சிட்டாய் பறந்து பறந்து குரலால் உலகம் வளைத்தார். மொழிகள் தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின் அரசன்.

சாதாரணமான பாடகர் இல்லை நம் எஸ் பி பி. இந்த உலகில் துயரமானவர்களை மகிழ்விக்க… காலத்தால் அவதியுற்றோர்களை அரவணைத்துக் கொள்ள…
உலகை தினம் மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல் மருத்துவர்.

என் குடும்பத்திற்கும் அவருக்குமான நிகழ்வுகள் மறக்க இயலாதவை. என் தந்தை கம்போஸ் பண்ண பாடும் நிலா பாட வந்திருந்தார்.

குட்டிப் பையன் நான் ரெக்கார்டிங் பண்ண அமர்ந்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் பாட மறுத்திருப்பார்கள்.

என்னைப் பார்த்து தன் சிரிப்பால் வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும் இல்லாமல் நம்பிக்கை வைத்துப் பாடினார். இன்று வரை என்னால் மறக்க முடியாத பதிவு அது.

அதைப்போல… “காதல் அழிவதில்லை” படம் நான் நாயகனாக நடித்த முதல் படம். பாலு சார் “இவன்தான் நாயகன்” என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார்.

முதன் முதலில் “இவன் தான் நாயகன்” என எனக்காக உச்சரித்த குரல் இன்றும் என்னை நாயகனாக வைத்துக் கொண்டிருக்கிறது. நன்றி மறவேன் பாலு சார்.

யாரையும் காயப்படுத்தாத அந்த குணம். தவறிப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டால் மன்னிப்பு கோரும் தன்மை, ஒரு குழந்தையைப் போல தன் வாழ்நாள் முழுக்க வாழ்ந்து கடந்தவர்…

விடைகொடுத்து மீண்டும் உங்களை இந்த மண்ணில் வரவேற்க காத்திருக்கிறேன் பாடு நிலாவே… லவ் யூ

– சிலம்பரசன் T R

Actor STR condolence to SPB Demise

More Articles
Follows