தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
அவரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமின்றி இந்திய சினிமாவையே உலுக்கியுள்ளது.
அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அவரின் ரசிகர்கள் பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்று காணப்படுகிறார்கள்.
நேற்று இரவு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி. அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு அவரது உடல் 12 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகின்றனர். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது மகன் சரண் இறுதி சடங்குகளை செய்தார்.
அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பாடகர் மனோ, நடிகர் அர்ஜீன், இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், இயக்குநர் அமீர் உள்ளிட்டவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆந்திர மாநில அரசின் சார்பில் நீர்வளத்துறை அமைச்சர் அனில்குமார் நேரில் சென்று எஸ்.பி.பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் எஸ்பிபியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அமைச்சர் மாபா பாண்டியராஜன்.
இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் காவலர்கள் இறுதி அரசு மரியாதை கொடுத்தனர்.
அதன்படி 24 காவலர்கள் தங்கள் துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர்.
பாடும் நிலா பாலு அவர்களின் உடல் நல்ல அடக்கம் செய்யப்பட்டது. இனி மண்ணில் அந்த எஸ்பிபி.யின் இனிய குரல் ஒலிக்காது.. ஆனால் விண்ணில் ஒலிக்கட்டும்.
Legend SP Balasubramanyams funeral live updates