தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் திரண்டனர்.
ஒரு வாரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து கலந்து கொண்டார் லாரன்ஸ்.
போராட்டம் முடிவடையும் நாளில், அது போலீசாரால் கலவரமானது.
அதன்பின்னர் நடிகர் லாரன்ஸ் தமிழக முதல்வரை சந்தித்தார்.
இந்நிலையில் இச்சந்திப்பு குறித்தும், தன்னுடைய அடுத்த நடவடிக்கை குறித்தும் கூற பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஜல்லிக்கட்டு போராட்ட மாணவர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கவிருக்கிறோம்.
அந்த அமைப்புக்கு எந்த பெயரும் இதுவரை முடிவாகவில்லை.
அதையும் மாணவர்களே முடிவு செய்வார்கள்.
இந்த அமைப்பில் எந்த கட்சியை சார்ந்தவர்களும் இருக்க மாட்டார்கள்.
மேலும் அவர்கள் ஓட்டுக்காக பணம் வாங்க மாட்டார்கள் என்று உறுதியளித்த பின்னரே இந்த அமைப்பில் சேரலாம்.
இந்த அமைப்பு மருத்துவம் மற்றும் கல்விக்காக உதவும்,
சில நேரம் ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவானால், அதற்கான அவசியம் ஏற்பட்டால் நிச்சயம் மாணவர்களுடன் இணைந்து அரசியலுக்கு வருவேன்.
ஒவ்வொரு தொகுதியிலும் மாணவர்களே வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள்” என்று பேசினார்.
Lawrance will enter into Tamilnadu Politics with Students support