தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, ஆஸ்ரம் என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும் பல சமூகநலப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சில மாதங்களாக லதா மற்றும் நடிகர் பார்த்திபன் ஆகியோர் திருடப்படும் குழந்தைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
மேலும் இதுபோன்ற ஆதரவற்ற நிலையில் உள்ள தெருவோர குழுந்தைகளுக்காக சிட்டிசன் பிளாட்பார்ம் என்ற அமைப்பை தொடங்க உள்ளார் லதா.
இதில் அபயம் கேர் பார்சில்ட்ரன் (Abhayam Care for Children) என்ற திட்டத்தின் மூலம் இதுவரை காணாமல் போன குழந்தைகளை தேடும்பணியில் ஈடுபடுத்தவுள்ளனர்.
இதற்கான சிறப்பு நிகழ்ச்சி நாளை காலை 10.00 மணியளவில் சென்னை காமராஜ் அரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொள்கிறார்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.