மும்பையில் ராஜ் தாக்ரேவுடன் லதா ரஜினிகாந்த் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மும்பைக்கு பயணம் மேற்கொண்ட லதா ரஜினிகாந்த், சிவாஜி பார்க் பகுதியிலுள்ள ராஜ் தாக்ரேவின் இல்லத்துக்கு இன்று சென்றார்.

அங்கு ராஜ் தாக்ரே மற்றும் அவரது மனைவி ஷர்மிலாவை லதா ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

அரசியல் வழக்கம்போல இது நட்பு ரீதியிலான சந்திப்பு என சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த், சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்ரேவோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

கடந்த 2010-ஆம் ஆண்டு பால் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த் பால் தாக்ரே தனக்குக் கடவுளைப் போன்றவர் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நிலையில், அவரது மனைவி லதா, நவநிர்மான் சேனாவின் தலைவரும் மறைந்த பால் தாக்ரேவின் மருமகனுமான ராஜ் தாக்ரேவை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெங்கட் பிரபு படத்தில் 5 கோடி; அப்புறம் 10 கோடிதான் என சிம்பு முடிவு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கத்தில்
செக்கச் சிவந்த வானம் படத்தில்
நடித்து முடித்துள்ளார் சிம்பு.

இப்படத்திற்குப் பின்னர் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்த சிம்பு திட்டமிட்டு உள்ளாராம்.

ஆனால் வெங்கட் பிரபுவுக்காக, அவரது படத்தில் மட்டும் அதனை பாதியாக (5 கோடி) ஆக
குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னர் , கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்தின் சர்வர் சுந்தரம் ரிலீஸ் தள்ளிப் போக இதான் காரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘திருடன் போலீஸ், உள்குத்து போன்ற படங்களைத் தயாரித்த, ‘கெனன்யா பிலிம்ஸ்’ தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் ‘சர்வர் சுந்தரம்’.

கேட்டரிங் கல்லூரியில் படித்த அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் வைபவி சாண்டில்யா நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் இம்மாதம் 6-ஆம் தேதி ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் வந்துள்ள லேட்டஸ்ட் தகவலின்படி இம்மாதம் 6-ஆம் தேதியும் ‘சர்வர் சுந்தரம்’ வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நிறைய கடன்கள் இருப்பதால் பொருளாதார ரீதியில் சிக்கலில் இருக்கிறாராம். இன்னொரு பக்கம் அவருடைய படங்களை வாங்கி வெளியிட்டவகையில் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்டு வருகின்றனர்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று இயக்குனர் ஆனந்த் பல்கி டுவீட் செய்துள்ளார்.

சர்வர் சுந்தரம் படம் ரிலீஸ் தள்ளிப்போனதால் கடும் அப்செட்டில் இருக்கிறார் சந்தானம்.

அஜித்தின் விஸ்வாசம் படத்தில் ரஜினியின் தங்க சிலை நாயகி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கிவரும் படம் விஸ்வாசம்.

‘ஏகன்’, ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களை தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக நயன்தாரா இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

100 படங்களை முடித்துவிட்ட இமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வேடம் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் அப்பா வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக காலா படத்தில் நடித்த ஈஸ்வரிராவ் நடிக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.

காலா படத்தில் ரஜினியுடன் தங்க சிலை பாடலுக்கு டூயட் பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் வீட்டில் 1.5 கிலோ தங்கம் கொள்ளை; வேலைக்காரி திருடினாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், சென்னை திருவான்மியூர் உள்ள மேற்கு காமராஜர் நகரில் வசித்து வருகிறார்.

வீட்டின் ஒரு பகுதியையே அலுவலகமாக பயன்படுத்தி வரும் அவர், கடந்த ஏப்ரல் மாதத்தில் வீட்டு லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் நகைகள் திருடு போயிருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், திருவான்மியூர் காவல் நிலையத்தில் இன்று மீண்டும் புகார் அளித்துள்ளார் அவர்.

வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நகைகளும் தற்போது திருடு போயிருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கெனவே மாயமான நகைகளுடன் சேர்த்து, மொத்தம் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடு போயிருப்பதாக தெரிய வந்துள்ளது.

வீட்டுப் பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, நடிகர் பார்த்திபன் வீட்டில் வேலைபார்க்கும் பெண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

லட்சுமி ராயை கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட *X வீடியோஸ்* நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா, பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர்.

மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக..

அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.

எனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்.. என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.

அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது..

அந்தப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய ‘x வீடியோஸ்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் அர்ஜுன்.

“பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் லட்சுமிராயுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று வேறு காட்சிகள் .இருந்தது.

ஆனால் லட்சுமிராய் தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.

அதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன்.

இப்போது ‘x வீடியோஸ்’ படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை.. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது” என்கிற அர்ஜுன், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

X Videos fame Arjun feel shy to hug Lakshmi Raai

More Articles
Follows