தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் மொழிகளில் ஒரே நாளில் வெளியாகவிருப்பதால், படக்குழுவினர் இரவு பகல் பாராமல் அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தெலுங்கு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்.
அப்போது கபாலி கதையின் ஒரு பகுதியை அவர் கூறினாராம்…
“சுதந்திர காலத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசாங்கம் மலேசியாவிற்கு தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அழைத்து சென்றதாம்.
அங்குள்ள ரப்பர் தொழிற்சாலையில் இவர்களை வேலைக்கு அமர்த்தி கடுமையாக வேலை வாங்கியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கபாலி புரட்சி செய்து, தன் மக்களை காப்பாற்ற போராடுகிறார். இந்த போராட்டமே இதன் மையக்கரு.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல. சென்டிமெண்ட் நிறைந்த கதையம்சம் உள்ள படம் எனவும் தெரிவித்திருக்கிறார்.