தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குநர் சிகரம் அமரர் கே.பாலசந்தர் அவர்களின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு, “கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர், நடிகர் கலைமாமணி ராஜேஷ் அவர்களின் அனுமதியுடன் ஒளிப்பதிவாளர் பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு இணை செயலாளர் பி.பழனி, இவர்களின் மேற்பார்வையில் கமலஹாசனின் அலுவலகமான ராஜ் கமல் இண்டர்நேஷ்னல் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த அமரர் கே.பி.அவர்களின் திருவுருவ சிலைக்கு “இயக்குநர் சிகரம்” அவர்களின் புதல்வி புஷ்பா கந்தசாமியும் மருமகன் கந்தசாமியும் தலைமை தாங்கி, கே.பி. அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி சிறப்பித்தார்கள்.
இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வசந்த் செலைக்ட் எஸ்.குமார், இசையமைப்பாளர், ரேஹோன் இயக்குநர், ரிஷி, கவிதாலயா நிறுவனத்தை சார்ந்த ராஜேந்திரன், ரோஷன், கே.பி.அவர்களின் கார் ஓட்டுனர் ஆர்.கோவிந்தராஜன், எடிட்டர்கள் அசோக், ஆனந்த்,”கே.பா.ர.சங்க பொருளாளர், எம்.முகமது இலியாஸ், செயற்குழு உறுப்பினர்கள், நடிகர், கலைமாமணி, டாக்டர் பூவிலங்கு மோகன் எடிட்டர் ராமமூர்த்தி, இணை செயலாளர் கண்ணப்பன் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
மேலும், வளசரவாக்கத்தில் அமைந்துள்ள *அக்க்ஷையா முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு மதியம் 12.30-அளவில் உணவு வழங்கப்பட்டது.
Late director K Balachander’s birthday party at Kamal’s office