பாகுபலி-பைரவா பாடல்களுக்கு உள்ள ஒற்றுமை

பாகுபலி-பைரவா பாடல்களுக்கு உள்ள ஒற்றுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bairavaa baahubaliவிஜய் நடித்துள்ள பைரவா படப் பாடல்கள் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் ஆகியவற்றால் தமிழகம் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் மிக எளிமையாக வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமைக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இதன் உரிமையை பிரபல ஆடியோ நிறுவனமாக லஹரி நிறுவனம் பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

கிட்டதட்ட 30 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களின் பாடல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் வெளியான பாகுபலி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியோ உரிமைகளை இந்நிறுவனமே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lahari Music may acquire the right of Bairavaa Audio

ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு

ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்ற மோடி அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya dhanushசினிமாவில் உள்ள பல துறைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை.

எனவே அவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட வேண்டும் என ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, அண்மையில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார்.

இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறும் 64வது தேசிய விருது வழங்கும் விழாவில் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் பிரிவையும் சேர்க்க அமைச்சர் வெங்கையா நாயுடு ஒப்புதல் அளித்து விட்டாராம்.

மேலும் ஒலியமைப்பு மற்றும் சிறந்த லொக்கேஷன் ஒளிப்பதிவாளர் ஆகியவற்றுக்கும் இனி தேசிய விருது வழங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

ஸ்டண்ட் கலைஞர்கள் பற்றிய ‘சினிமா வீரன்’ என்ற குறும்படத்தை ஐஸ்வர்யா இயக்கி வருவது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கமலின் கனவை நிறைவேற்ற கைகொடுக்கும் லைக்கா

கமலின் கனவை நிறைவேற்ற கைகொடுக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal will start Marudhanayagam soonஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு கனவுப்படம் இருக்கும்.

கமல்ஹாசனின் கனவுப்படம் மருதநாயகம் என்பது நாம் அறிந்ததே.

கடந்த 1997ஆம் ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் இப்படத்தை தொடங்கி வைத்தார்.

முதல் 30 நிமிடம் படம் தயாரான நிலையில் படத்தின் பட்ஜெட் காரணமாக படம் நிறுத்தப்பட்டது.

இதன்பின்னர் கமல் பல படங்களில் நடித்து இயக்கினாலும் மருதநாயகம் நிலை அப்படியே இருந்தது.

இந்நிலையில் ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்புக்காக பிரிட்டன் சென்றுள்ள கமல், லைக்கா நிறுவன சேர்மன் சுபாஷ்கரனை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அப்போது அவர்கள் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு இப்படம் மீண்டும் உயிர் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், விஷ்ணுவர்தன், நாசர், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜெயலலிதாவின் மகள் போட்டோ… சின்மயி ரியாக்ஷன்

ஜெயலலிதாவின் மகள் போட்டோ… சின்மயி ரியாக்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chinmayi-sripada-1கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

இந்த துயரத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளமுடியாமல் தவிக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஜெயலலிதாவின் மகள் இவர்தான் என்ற ஒரு பெண்ணின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாவது…

“அவர் பிரபல மிருதங்க வித்வான் பாலாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்” என்று தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பெண்மணி என்று கூறப்படுகிறது.

“She belongs to the family of renowned Mridangam Vidwan V Balaji. When he is not busy with concerts he is a part of the web series called ‘Husbanned’
– Chinmayi Sripaada @Chinmayi

‘கபாலி’யை நெருங்கும் ‘பைரவா’

‘கபாலி’யை நெருங்கும் ‘பைரவா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijayரஜினி நடித்த கபாலி படத்தின் கேரள உரிமையை மோகன்லால் வாங்கியிருந்தார்.

இப்படத்தை அவர் ரூ. 8 கோடிக்கு பெற்று, ரூ. 11 கோடி வரை லாபம் பெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் உரிமையும் கேரளாவில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

கேரளா உரிமையை மட்டும் 7 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கு பிரபலம் ஒருவர் வாங்கியிருக்கிறாராம்.

இதன் மூலம் கபாலி உரிமை விலையை பைரவா நெருங்கியுள்ளார்.

‘ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா பதில் சொல்ல வேண்டும்…’ மன்சூர் அலிகான்

‘ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா பதில் சொல்ல வேண்டும்…’ மன்சூர் அலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mansoor Ali Khanகடந்த வாரம் டிசம்பர் 5ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் கிட்டதட்ட இரண்டு மாதங்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார்.

அப்போது அவர் உடல்நிலை குறித்த படங்களோ, குரல் பதிவோ எதுவும் வெளியாகவில்லை.
இதனால் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பொதுமக்களே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

செப்டம்பர் 21ஆம் தேதி வரை நலமாக இருந்த முதல்வர் திடீரென எப்படி உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவார்.

ஒரு முதல்வர் என்றால் அவர் அருகே 24 மணி நேரமும் டாக்டர் குழு ஒன்று இருக்கும். அதையும் மீறி அவருக்கு எப்படி உடல்நலம் இல்லாமல் போகும்?

அப்படியே உடல்நலம் இன்றி போனாலும் அவருடைய உடலுக்கு என்ன? கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? என்பதை மறைப்பது ஏன்?

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும்.

அவரின் மரணத்திற்கு யார் காரணமாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்

நான் ஏற்கனவே அதிமுகவில் இருந்தவன் தான். நான்கைந்து முறை அம்மாவை குடும்பத்துடன் நேரில் பார்த்துள்ளேன்.

ரொம்ப அன்பானவர், பாசமிக்கவர். அப்படிப்பட்ட ஒருவர் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய குற்றச்சாட்டு என்னவெனில் ஏன் யாருமே இதுகுறித்து கேள்வி கேட்கவில்லை. ‘ஏன் என்று கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை’ என்று எம்ஜிஆரே பாடியுள்ளார்.

இது என்ன நாடா? இல்லை அடிமைகள் வாழும் தேசமா? கேள்வி கேட்க கூட முடியாதென்றால் என்ன ஜனநாயகம்? அதைவிட செத்து மடியலாமே

மருத்துவமனையில் ஐசியூ வில் அட்மிட் ஆனாலும் கண்ணாடி வழியாக பார்க்க அனுமதிப்பதுண்டு.

ஆனால் ஜெயலலிதாவை கவர்னர் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காதது ஏன்?

எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை சொல்லிவிட்டேன். எனது சந்தேகத்தை தீர்க்க வேண்டியது 73 நாட்கள் உடனிருந்து கவனித்த சசிகலாவும், அப்பல்லோ பிரதாப் ரெட்டியும்தான்.

தேவை பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன்.

இவ்வாறு மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

More Articles
Follows