தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் பிரபல சாராய வியாபாரி ராமு.
இவர் வினோதா என்ற பெண்ணை முதலில் திருமணம் செய்திருந்தார்.
அதன் பின் வினோதா இருக்கும் போதே எழிலரசி என்ற பெண்ணையும் 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் சொத்து பிரச்சினை காரணமாக கடந்த 2013ல் நீதிமன்றத்திற்கு எழிலரசியோடு ராமு சென்ற போது, அங்கு வந்த கூலிப்படையினர் எழிலரசி கண்முன்னே ராமுவை வெட்டி கொலை செய்தனர்.
முதல் மனைவி வினோதா ஏவுதலின் பேரில் இந்த படுகொலை நடந்தது..
ஆனால் எழிலரசி படுகாயத்துடன் உயிர்பிழைத்தார்.
இதன் பின்னர் கணவர் கொலைக்குப் பழிக்குப் பழியாக ஐயப்பன், வினோதா மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான வி.எம்.சி.சிவகுமார் உள்ளிட்ட 3 பேரை கொலை செய்தார் எழிலரசி.
கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் என எழிலரசி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே எழிலரசி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் .
பாஜக புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதனை எழிலரசி சந்தித்து அந்த கட்சியில் இணைந்ததாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் சில தகவல்களும் புகைப்படங்களும் வெளியானது.
ஆனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எழிலரசி காரைக்கால் மாவட்டத்திலுள்ள நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில் நிரவி -திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட எழிலரசி காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தகவலறிந்த போலீஸார் எழிலரசி சென்ற காரை நாகூர் அருகே மடக்கி எழிலரசியை கைது செய்தனர்.
Lady don arrested in Karaikal