ஜெயராஜ் & பெனிக்ஸ் கொலை; போலீசை தண்டிக்க வேண்டும் என கோலிவுட் ஸ்டார்ஸ் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது மொபைல் போன் கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் தந்தை, மகனை அழைத்துச் சென்று போலீஸ் தாக்கினர்.

அங்கு சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளனர்.

காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிக்கையும் வைத்துள்ளனர்.

சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

சினிமா பிரபலங்கள் வெளியிட்டுள்ள ட்வீட்கள் இதோ…

குஷ்பு: ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில், மேற்கொண்டு எந்த தாமதமும் இன்றி, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டு சட்டம் தன் கடமையைச் செய்வதை நாம் பார்ப்போமா? குற்றம் செய்தவர்கள் தப்பித்துவிடக் கூடாது.

தங்களின் அன்பார்ந்தவர்களை ஒரு குடும்பம் இழந்துள்ளது. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி. #JusticeForJeyarajAndFenix

ஐஸ்வர்யா ராஜேஷ்: சாத்தான்குளம் சம்பவம் கொடூரமானது. முற்றிலும் மிருகத்தனமான செயல். கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி.

ஜெயம் ரவி: #JusticeForJeyarajAndFenix சட்டத்தை விட மேலானவர் யாரும் இல்லை, இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

வரலட்சுமி: ஒரு விஷயம் தவறென்றால், தவறு தான். அதை யார் செய்திருந்தாலும் சரி. சாத்தான்குளம் காவல்துறை நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியைத் தருகிறது. அந்த குடும்பத்துக்கு ஆறுதலே தர முடியாது. ஒட்டுமொத்த காவல்துறையையும் இதை வைத்துக் குற்றம்சாட்ட முடியாது. அந்த வெறி பிடித்த இரண்டு பேரும் தண்டிக்கப்பட வேண்டும்.

கார்த்திக் சுப்புராஜ்: சாத்தான்குளத்தில் நடந்த விஷயம் கொடூரமானது. மனிதத்தன்மைக்கு ஒரு அவமானம். குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பட்ட ஆன்மாக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். சில மனிதர்கள், வைரஸ் கிருமிகளை விட ஆபத்தானவர்கள்.

ஹன்சிகா: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்டுள்ள குரூரத்தைக் கேள்விப்பட்டுக் கலங்கிவிட்டேன். காவல்துறைக்கும், நமது தேசத்துக்கும் இந்த வெறி பிடித்தவர்கள் அவமானத்தைத் தேடித் தந்துள்ளனர். குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

கெளதம் கார்த்தி: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நீதியை, சட்ட ஒழுங்கை நிலைநாட்டக்கூடிய, நல்ல, நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல் அல்ல இது. சீருடையில் இருக்கும் சில காட்டுமிராண்டித்தனமான குற்றவாளிகளின் செயல்..

இமான்: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது காட்டப்பட்ட வன்முறை முற்றிலும் மிருகத்தனமானது. அவர்கள் அனுபவித்த சித்திரவதையை ஜீரணிக்க முடியவில்லை. இந்தியாவில் நடந்த இந்த இரக்கமற்ற செயலுக்கு நாம் குரல் கொடுப்போம். ஜெயராஜும், பென்னிக்ஸும், இந்தியாவின் ஜார்ஜ் ஃப்ளாய்ட்.

ஜி.வி.பிரகாஷ்: பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை.

நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளும் என்பதே வரலாறு. இருவர் மரணத்தை மனிதக் குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கதிர்: மக்களைப் பாதுகாக்கிறது என்பதால் தான் சட்டம் ஒழுங்கு மதிக்கப்படுகிறது. அது அப்பாவி மக்களுக்கு அச்சுறுத்துலாக மாறக்கூடாது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால் நீதியும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதிக்காக அனைவரும் ஒன்றாக நிற்போம் என்று நம்புகிறேன்.

அதுல்யா ரவி: முற்றிலும் மனிதத்தன்மையற்ற செயல். சாத்தான்குளத்தில் வாழும் ஒரு கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயராஜும், பென்னிக்ஸும் காவல்துறை அதிகாரியால் மிருகத்தனமாக நடத்தப்பட்டுள்ளனர். மற்றவர்களின் உயிர் மீது யாருக்கும் இவ்வளவு அதிகாரம் இருக்கக் கூடாது. இந்த குற்றவாளிகளுக்கு நமது எதிர்ப்பைக் காட்ட வேண்டிய நேரமிது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ராஷி கண்ணா: சீருடையில், காட்டுமிராண்டித்தனமான, குரூரமான செயல்களை செய்துள்ள இவர்களை நினைத்தால் முதுகுத்தண்டு சில்லிடுகிறது. யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல. நீதி தரப்பட வேண்டும். அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

சாந்தனு: போலீஸ் மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். அவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இது விசாரணை அல்ல. இது ஒரு கொலை. அனைவரையும் விட சட்டமே மேலானது என்றால், இதுதான் அதன் சக்தியைக் காட்ட சரியான நேரம்.

இயக்குநர் ரத்னகுமார்: இது முற்றிலும் ஒரு அநீதி. விசாரணை என்ற பெயரில் அப்பாவிகள் கொல்லப்படுவது சகித்துக் கொள்ள முடியாத ஒன்று.

இப்போது நீதி ஒழுங்காக வழங்கப்படவில்லை என்றால், நீதி அமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும். தயவுசெய்து இந்த விவகாரத்தை மாற்றிப்பேசி, மற்ற பிரச்சினைகளை வைத்துத் திசைதிருப்பாமல் இருங்கள்.

இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அடுத்த படைப்பு “நேக்டு நங்கா நக்னம்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கரோனாவால் திரைத்துரைக்கு ஏற்பட்டுள்ள தடைகளை பொருட்படுத்தாமல், ராம்கோபால் வர்மா தொடர்ந்து தன்னால் முடிந்த அளவு சிறப்பான ட்ரெண்ட் செட்டிங் படங்களை உருவாக்கி அவற்றை வெளியிட்டும் வருகிறார்.

எளிதில் துவண்டுவிடாத மனம் கொண்ட ராம்கோபால் வர்மா, இந்த கரோனா அச்சுறுத்தல் ஏற்படுத்திய தடைகளின் இடையே படங்களை வெளியிடுவதில் இயக்குநர்களுக்கு ஒரு வழியை கண்டறிந்துள்ளார்.

சமீபத்தில் வெளியான அவரது க்ளைமாக்ஸ் படம் ஷ்ரேயாஸ் ஈடியில் முதன்முறையாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ATT (Any Time Theatre) தளம் ஷ்ரேயாஸ் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஏடிடி தளம், வெறும் 50,000 பார்வைகளை மட்டுமே எதிர்பார்த்தது, ஆனால் பிரம்மாணடமான 2,75,000 லாகின்களும், 1,68,596 கட்டணம் செலுத்திய பார்வைகளும் படம் வெளியான 12 மணி நேரத்தில் கிடைத்தன. ஒட்டுமொத்தமாக 2,89,565 பார்வைகள் கிடைத்துள்ளது.

க்ளைமாக்ஸ் படத்தின் பெரும்வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமான நேக்டு நங்கா நக்னம் படத்தை இதே தளத்தில வரும் ஜூன் 27 அன்று வெளியிடவுள்ளார்.

நேக்டு நங்கா நக்னம், ஏடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது ராம்கோபால் வர்மா திரைப்படமாகும்

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் காணக்கிடைக்கும். இந்த தளத்தில் 5 மொழிகளில் வெளியாகும் முதல் படமும் இதுவே.

சினிமா ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாராட்டுகளை கிளைமாக்ஸ் திரைப்படம் பெற்றுள்ளது. சினிமா உலகில் ஆன்லைன் தியேட்டர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஷ்ரேயாஸ் ஈடியின் புதிய வெர்ஷன் ஏராளமான வெற்றிப்படங்களை வரும் 2021 மார்ச் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளது.

ராம்கோபால் வர்மா படங்கள் தவிர்த்து, 302, சிவன் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களின் நேரடி வெளியீட்டை மற்ற 10 மல்டிப்ளெக்ஸ்களும் காணவுள்ளன. நயன்தாரா நடிக்கும் தமிழ் திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பும் நேரடியாக ஷ்ரேயாஸ் இடியின் மூலம் வெளியாகவுள்ளது. இது ஷ்ரேயாஸ் ஈடிக்கும் தமிழ் ரசிகர்களுக்கும் இடையே இருக்கப்போகும் நீண்ட பந்தத்தின் ஆரம்பமாக இருக்கும்.

4 மொழிகளில் விஷாலின் ‘சக்ரா’.. ட்ரைலரை வெளியிடும் 4 மொழி நட்சத்திரங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்றையாக நான்கு மொழிகளில் விஷால் நடிக்கும் ‘சக்ரா’ . நான்கு மொழி நட்சத்திரங்கள் வெளியிடும் படத்தின் ட்ரெய்லர் !

விஷால் நடித்து வரும் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை தென்னகத்தின் நான்கு மாவட்டங்களில் நான்கு பிரபல நடிகர்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.தமிழில் கார்த்தி, ஆர்யா, தெலுங்கில் ராணா, மலையாளத்தில் மோகன்லால்,கன்னடத்தில் யஷ் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

படத்தின் ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாக இருக்கிறது.இதற்கு முன் வெளியான ‘சக்ரா’வின் க்ளிம்ப்ஸ் என்கிற குறு முன்னோட்டம் லட்சக்கணக்கான பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டுள்ளது.இந்த குறு முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது இரும்புத்திரை படம் போல் இருக்குமா? இது ‘இரும்புத்திரை 2ஆம் பாகமா? என்று இயக்குநரிடம் கேட்டிருக்கிறார்கள்.

இதுபற்றி இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் கூறும்போது ‘
“சைபர் க்ரைம் பற்றிய படம்தான் “சக்ரா”வும் என்றாலும் இரும்புத்திரைக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் இருக்காது. அதுமட்டுமல்ல இந்த படத்தின் ஒரு காட்சி கூட வேறெந்த படத்திலும் நீங்கள் பார்த்திருக்க முடியாது. அப்படிப் புதிய தளத்தில் காட்சிகள் இருக்கும். இதில் கதாநாயகன் விஷால் தான் என்றாலும் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களையும் உங்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கும்படி கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கும். ஆனால் அவை வழக்கம் போல் இருக்காது. ஒரு வினாடி கூட பார்வையாளர்கள் கவனம் தவற விட முடியாத அளவுக்கு அவர்களை இருக்கையின் நுனியில் கட்டிப் போடும் படமாக இருக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் .” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர்.

விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்கும் எம்.எஸ். ஆனந்தன் ,
இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பின்னணியுள்ள கதையாக “சக்ரா” உருவாகி வருகிறது. வங்கிக் கொள்ளையர்களை விட சைபர் ஹேக்கர்ஸ் என்பவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை விளங்க வைக்கும் கதை.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியெம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

ட்ரெய்லர் வரும் சனிகிழமை வெளியாகிறது.!

முதன்முறையாக பெட்ரோல் விலையை ஓவர் டேக் செய்த டீசல்.!; என்ன சார் நடக்குது நாட்டுல..?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் தலைநகர் டெல்லி.

இங்கு பல அரசியல் அதிரடி நிகழ்வுகளுக்கு பஞ்சமிருக்காது. அது பழகி போன ஒன்று.

ஆனால் தற்போது டில்லியில் முதல் முறையாக, டீசல் விலை பெட்ரோலை விட அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது பொதுமக்கள், மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், 18வது நாளாக டெல்லியில் டீசல் விலை 48 காசுகள் உயர்த்தப்பட்டதால், லிட்டர் 79.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்படாததால், லிட்டர் 79.76 ரூபாயாக இருந்தது.

இதன் மூலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெட்ரோலை விட டீசல் அதிக விலைக்கு விற்பனையானது.

பெட்ரோல் இன்ஜின் கார்களை விட டீசல் இன்ஜின் கார்கள் அதிக மைலேஜ் தரும்.. பராமரிப்பு செலவும் குறைவு..
ஆயுட் காலமும் அதிகமாக இருக்கும்.

அத்துடன் பெட்ரோல் விலையை காட்டிலும் டீசல் விலை எப்போதும் மிக குறைவாக இருக்கும்.

ஆனால் இந்த அதிரடி டீசல் விலை உயர்வால் டீசல் கார் ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஜெயராஜ் & பென்னிக்ஸ் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் + ஒருவருக்கு அரசு வேலை..; முதல்வர் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ் & அவரது பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் சர்ச்சையாக அப்பகுதியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்கவுள்ள உத்தரவின்படியும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன் உயிரிழந்த ஜெயராஜ் & பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

TN CM assures action against cops for death of father son duo

பழைய படங்களுக்கு நியூ லுக்; கமல் பாராட்டில் டிசைனர் கோபி பிரசன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் உட்பட பெரிதும் பேசப்படும் பல திரைப்படங்களின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா, வடிவமைத்த சில கடந்த காலப் படங்களின் விளம்பர டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

வேறு விதத்தில் சொல்வதென்றால் அரிதான முத்தாக அமைந்த சில தமிழ் படங்களின் விளம்பர வடிவமைப்பை தன் ஆக்கப்பூர்வ திறனால் மேலும் அழகு படுத்தியிருக்கிறார் கோபி பிரசன்னா என்று கூறலாம்.

இது குறித்து விவரி்த்த கோபி பிரசன்னா “பழைய படங்களுக்கு டிசைன் செய்யும் பணி, எட்டு ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசனின் ‘ராஜ பார்வை’ படத்திலிருந்து தொடங்கியது.

கமல் சாரிடமிருந்து இதற்குக் கிடைத்த பாராட்டு, மறக்க முடியாத தருணமாக எனக்கு அமைந்ததுடன் மேலும் இது போன்ற படங்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தையும் சிறுகச் சிறுக என்னுள் விதைத்தது.

சற்று அதிக ஆண்டுகளை எடுத்துக் கொண்ட இந்தப் பணிகள், உலகளாவிய நெருக்கடி பரவிய காலம்வரை நீடித்தது.

ஆரம்பகால நாட்கள் ஆர்வத்தைத் தந்தாலும், சில வாரங்களுக்குப் பின் நெருக்கடி தந்த இந்த எதிர்மறை நிலையிலிருந்து வெளிவர தீவிரமாக முயன்றேன்.

இதன் பிறகு நாளொன்றுக்கு இரண்டு மூன்று போஸ்டர்கள் வீதம், உருவாக்கி பத்து படங்கள்வரை முடித்தேன். நேர்மறை எண்ணங்களைக் கொடுக்கும் சாதகமான சூழ்நிலையை இது உருவாக்கவே, திரைப்பட இயக்குநர்களும், திரைத்துறையில் உள்ள நண்பர்களும் என்னை வாழ்த்தினார்கள்” என்றார்.

கடந்த காலப் படங்களுக்குப் பணியாற்றுவது குறித்து விவரித்த கோபி பிரசன்னா, “180கள் மற்றும் 1990களின் துவக்கம்வரை கைகளிலேயே டிசைன்கள் உருவாக்கும் பணி நடைபெற்றது.

மென் பொருள் இன்றி, சிற்பி செதுக்குவதைப்போல், கத்தரிக்கோலை கவனத்துடன் பயன்படுத்தி படங்களை வெட்டியெடுத்து நமது ஆக்கப்பூர்வமான திறமையைக் கொண்டு சுவரொட்டிகள் மட்டும் விளம்பரப் பதாகைகளை வடிவமைக்க வேண்டும்.

எனவே நான் தற்கால தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏன் புதுமையாகப் படைக்கக்கூடாது என எண்ணினேன். ஒவ்வொரு படத்துக்கும் ஓர் ஆன்மா உண்டு. அதை நான் விளம்பர வடிவமைப்பு மூலம் வெளிக்கொணர முயல்கிறேன்.

உதாரணமாக ‘முள்ளும் மலரும்’ திரைப்படம் ரஜினி சாரின் முரட்டுத்தனமிக்க காளி கதாபாத்திரத்தால் கட்டமைக்கப்பட்டது. எனவே நான் குறிப்பிட்ட வடிவமைப்பிலும் வண்ணங்களிலும் இதை செய்திருந்தேன்.

தற்போதைய தலைமுறை ரசிகர்களும் இதை புரிந்து கொண்டு பாராட்டுவதுடன் படத்தைப் பார்க்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்” என்றார் கோபி பிரசன்னா.

Publicity Designer Gopi Prasannaas innovative posters to old movies

More Articles
Follows