தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
தற்போது 6 மாதங்களை கடந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் சினிமா சூட்டிங்கு அனுமதி அளிக்கப்பட்டது.
எனவே தியேட்டர்கள் திறக்க அனுமதி கேட்டு வருகின்றனர் திரையுலகினர்.
இதனையடுத்து வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று புதுடில்லியில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளம், புதுடில்லி, உத்தரப்பிரதேசம், குஜராஜ்த், மகாராஷ்டிரா ஆகிய ஆகிய மாநிலங்களில் உள்ள சில சங்கங்களுக்கும், பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்திற்கும் மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு ஆண்டிற்கு தமிழ், தெலுங்கு மலையாள, கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றனர்.
ஆனால் தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தென்னிந்தியத் திரையுலகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தென்னிந்திய திரையுலக பிரபலங்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது.
இதனையடுத்து இந்த தகவல் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் (NFDC) அகில இந்திய இயக்குனர் ராஜேஷ் கண்ணாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் அதே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறாராம்.
Kollywood condemns on theatre opening meeting by central government