தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் நாயகி மற்றும் டைரக்டர் கலந்துக்கொள்ளாத போதும் சிறப்பு விருந்தினர் ராதாரவி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக கருத்துக்களை பேசினார். இதனால் பலரும் கண்டிக்க, திமுக கட்சியை விட்டு முக. ஸ்டாலின் நீக்கினார்.
மேலும் விஷால் உள்ளிட்ட நடிகர்களும் கண்டித்தனர்.
இதனிடையில் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் ‘‘இந்த படத்தை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டு விட்டனர் என்று நினைத்தேன்.
பொருத்தமற்ற நிகழ்ச்சியில் தேவையற்ற நபர்கள் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே பேசினர்’’ என்று ராதாரவியை கண்டித்தார்.
விக்னேஷ் சிவனின் இந்த பேச்சை படத்தயாரிப்பாளர் கண்டித்துள்ளார்.
கொலையுதிர் காலம் படத்தை வாங்கிக்கொள்வதாக சொன்ன வினியோகஸ்தர்கள் தற்போது வேண்டாம் என்று பின்வாங்கிவிட்டனர்.
டிஜிட்டல் உரிமையை வாங்குவதாக உறுதி அளித்த நிறுவனமும் இப்போது வேண்டாம் என்று கூறிவிட்டது.
எனவே படத்தின் நஷ்டத்துக்கு பொறுப்பு ஏற்கும்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.