தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழர்கள் வாழ்வில் முக்கியமாக இந்துக்கள் கலாச்சாரத்தில் நிறைய பழக்க வழக்கங்களுக்கு ஓர் அழகான அருமையான அர்த்தம் உண்டு.
அதிலும் இன்றைய மகளிர் மறந்து போன கோலங்கள் வரைவதற்கு பல அர்த்தங்கள் உள்ளன.
பிறந்த குழந்தையை வரவேற்க தொட்டில் கோலம்; சுபிட்சத்தை வரவேற்க ஹிர்தய கோலம், வட்டக் கோலம், பாம்புக் கோலம், பார்டர் கோலம், மனை கோலம். கம்பிக் கோலம், தந்திரிக் கோலம், புள்ளிக் கோலம் என கோலங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
காலையில் எழுந்து தண்ணீர் தெளித்து வாசலில் சாணம் பூசுவதில் கூட அர்த்தம் உண்டு. சாணம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது.
இதனால் அன்றைய நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது.
கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை, ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுகிறது. இதனால் உங்கள் சிந்தனைகள் சிதறாது.
தினமும் இதை செய்வதால் தெளிந்த சிந்தனைகள் உங்களுக்குள் உருவாகும்.
ஆனால் இது எதையும் தெரியாமல் இன்று ப்ளாஸ்டிக் கோலங்கள் போடப்படுகிறது. அதற்கு காரணம் டிஜிட்டல் வேர்ல்ட்.
இந்த நிலையில் நாம் மறந்து போன இந்த கோல காலச்சாரத்தை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் சொல்ல கோலம் போடு என்ற யூடியுப் சேனல் வழிவகை செய்கிறது.
கோலம் போடுவதற்கென்றே இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல வகையான கோலங்கள் அழகாக வரையப்பட்டு வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் CSK அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோலம் போடு என்ற பாடல் இணையத்தை கலக்கி வருகிறது.
Kolam podu team celebrates CSK Victory in IPL 2020 match
இதோ அந்த வீடியோவை பாருங்கள்…