தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி மாநிலத்தின் கவர்னராக சில மாதங்களுக்கு முன்பு கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.
இவரின் பதவி ஏற்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியதாவது…
“புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
புதுச்சேரி மக்களின் ஒழுக்க நிலையை மாற்றுவதற்காக நடிகர் ரஜினிகாந்தை விளம்பர தூதராக நியமிக்க விரும்புகிறோம்.
ரஜினிகாந்தின் வேண்டுகோள்களும், செய்திகளும் புதுச்சேரியை ஆரோக்கியமானதாக மாற்றும். என நம்புகிறோம்” என்றார்.