உணவுப் பற்றாக்குறை; வீட்டு நாய்களை அரசிடம் ஒப்படைக்க கட்டளை

உணவுப் பற்றாக்குறை; வீட்டு நாய்களை அரசிடம் ஒப்படைக்க கட்டளை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kim jong unகொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் நாடுகள் திணறி வருகிறது.

இதனால் உலகெங்கிலும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.

ஆனால் ஆரம்பம் முதலே கரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி வரும் வட கொரியா, அங்கு என்ன நடக்கிறது என்பதையே இந்த உலகத்திற்கு தெரிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு நிலவி வரும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வட கொரியா அதிபர் கிம் ஜாங் அவர்கள்… பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை கட்டாயம் இறைச்சிக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்டளையிட்டு இருக்கிறாராம்.

மக்களிடம் இருந்து பெறப்படும் நாய்கள் அங்குள்ள உணவகங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன.

வட கொரியாவில் பணக்காரர்கள் மட்டுமே நாய்களை வளர்ப்பாளர்கள். ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பன்றிகளை தான் வளர்ப்பார்களாம்.

கடந்த ஜூலை மாதம் முதல் யாரும் வீட்டில் நாய்களை வளர்க்க கூடாது என கிம் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வடகொரியாவில் நாய்களை வளர்க்க அரசின் அனுமதி வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் வடகொரியாவில் வசிக்கும் 60% மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் அணு ஆயுத சோதனைகளுக்காக செலவிடப்படும் தொகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..?

‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

prabhas keerthy suresh‘பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு பிறகு பிரபாஸின் மார்கெட் இந்தியளவில் உயர்ந்துவிட்டது.

இதனையடுத்து சாஹோ’ என்ற பிரம்மாண்டமான படத்தில் நடித்தார்.

தற்போது ‘ராதே ஷ்யாம் படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

பிரபாஸின் 22வது படமான ‘ஆதி புருஷ்’ பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த படம் ‘ராமாயணம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் இதில் ராமர் கேரக்டரில் பிரபாஸ் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

ஓவியாவின் காதல் தத்துவங்கள்…; காதலில் விழுந்து விட்டாரா..?

ஓவியாவின் காதல் தத்துவங்கள்…; காதலில் விழுந்து விட்டாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviyaகளவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஓவியா.

அதனை தொடர்ந்து சில படங்களில நடித்து பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிறகு ஓவியாவை தெரியாதவர்களே தமிழ் நாட்டில் இருக்க முடியாது என்கிற லெவலுக்கு பிரபலமானார்.

ஆனால் பிக்பாஸ் கொடுத்த புகழ் அவருக்கு சினிமா வாய்ப்புகளை அள்ளி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் லவ் என்ற ஒரு பதிவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்.. நாம் மிகவும் நேசிப்பவர்கள் நம் அருகில் இல்லாமல் இருந்தாலும், நம்மை விட்டு ஒருபோதும் அவர்கள் விலகி போவதில்லை. அவர்கள் அருகில் இல்லாமல் இருக்கலாம், அவர்களது குரலை கேட்க முடியாமலும் பார்க்க முடியாமலும் இருக்கலாம்.

ஆனால் அவர்கள் எப்போதும் நம் அருகில் இருப்பதுப் போன்ற ஒரு உணர்வு இருக்கும்.

நேசித்தவர்களை நாம் மிஸ் செய்தாலும் அவர்கள் நமக்கு எப்போதும் அன்புக்குரியவர்கள், விருப்பத்துக்குரியவர்கள்’ என ஓவியா பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த பலருக்கும் ஓவியாவுக்கு என்னாச்சு..? காதலில் விழுந்துவிட்டாரா? என கேட்டு வருகின்றனர்.

ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்.. ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி… ஆர்.ஜே. விஜய் ஆனந்தம்

ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்.. ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி… ஆர்.ஜே. விஜய் ஆனந்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rj vijayவானொலி தொகுப்பாளர், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் ஆர்ஜே. விஜய்.

நடிகர் விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவை இவர் தான் தொகுத்து வழங்கினார்.

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் இவர்.

இந்த படத்தை ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தம்பியாக நடித்த ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஆர்ஜே விஜய் தனது சமூக வலைத்தளத்தில் அவர் அப்பாவான ஸ்டோரியை வித்தியாசமாக பதிவிட்டுள்ளார்.

‘ஒரு குட்டி ஸ்டோரி சொல்றேன்’, ஒரு குட்டி வந்ததுதான் சார் ஒரு ஸ்டோரி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ஜே விஜய்யை நாமும் வாழ்த்துவோம்.

ஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

ஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஒயிட் ஷாடோஸ் GDL போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி, மற்றும் லோகோவை வெளியிட்டனர் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மற்றும் ப்ரதீப் வி ப்ளிப் DGP-CBCID

நடனம் ஆடுபவர்களும், அதை ரசிப்பவர்களும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். இவர்களை உற்சாகப் படுத்தவும் ஊக்கப்படுத்தவும் கோகுல் டான்ஸ் லீக் என்ற போட்டி நடைபெற இருக்கிறது.

உலகத்தில் உள்ள 24 நாடுகளை சேர்ந்த நடன கலைஞர்கள் இந்த போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆன் லைன் மூலம் 24 நாடுகளில் உள்ள நடன குழுக்கள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு நடன இயக்குனர்கள், அம்பாஸ்டர்கள் இருக்கிறார்கள். சென்னையிலும் இதுபோல் ஒவ்வொரு குழுவுக்கும் நடன இயக்குனர்கள் இருக்கிறார்கள். இந்த போட்டி டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் தலைமையில், ஒயிட் ஷேடோ நிறுவனத்தின் சிஇஓ வினோத் சிரஞ்சீவி நடத்துகிறார்.

இதற்கான போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பூ கண்ணுக்கு என்னாச்சு..? கண்ணில் கட்டு எதற்கு..?

நடிகை குஷ்பூ கண்ணுக்கு என்னாச்சு..? கண்ணில் கட்டு எதற்கு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Eye operation updates of Actress Kushbhooநடிகை குஷ்பூ இன்று தன் ட்விட்டரில்.. கண்ணில் ஒரு கட்டு போட்டுள்ள ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.

குஷ்புவே அந்த புகைப்படத்திற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.

‘இன்று காலை தனது கண்ணில் கத்தி வைக்கப்பட்டதால் (ஆபரேஷன்) சில நாட்கள் ஆக்டிவாக இருக்க மாட்டேன். விரைவில் திரும்ப வந்துவிடுவேன். வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணியவும், வெளியே சென்றால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுபற்றி விசாரிக்கையில் குஷ்பூ கண்ணில் சிறு கட்டி ஒன்று இருந்ததாகவும், அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

குஷ்பு விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் குஷ்பு பதிவிட்டுள்ளதாவது…

Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance.

Eye operation updates of Actress Kushbhoo

More Articles
Follows