தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் நாடுகள் திணறி வருகிறது.
இதனால் உலகெங்கிலும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது.
ஆனால் ஆரம்பம் முதலே கரோனா பாதிப்பு இல்லை எனக் கூறி வரும் வட கொரியா, அங்கு என்ன நடக்கிறது என்பதையே இந்த உலகத்திற்கு தெரிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவி வருவதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அங்கு நிலவி வரும் உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வட கொரியா அதிபர் கிம் ஜாங் அவர்கள்… பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை கட்டாயம் இறைச்சிக்காக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென கட்டளையிட்டு இருக்கிறாராம்.
மக்களிடம் இருந்து பெறப்படும் நாய்கள் அங்குள்ள உணவகங்களுக்கு பிரித்து வழங்கப்படுகின்றன.
வட கொரியாவில் பணக்காரர்கள் மட்டுமே நாய்களை வளர்ப்பாளர்கள். ஏழை, நடுத்தர குடும்பத்தினர் பன்றிகளை தான் வளர்ப்பார்களாம்.
கடந்த ஜூலை மாதம் முதல் யாரும் வீட்டில் நாய்களை வளர்க்க கூடாது என கிம் உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வடகொரியாவில் நாய்களை வளர்க்க அரசின் அனுமதி வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வடகொரியாவில் வசிக்கும் 60% மக்கள் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணம் அணு ஆயுத சோதனைகளுக்காக செலவிடப்படும் தொகை தான் என்பது குறிப்பிடத்தக்கது.