‘சந்திரமுகி 2’ படத்தில் லாரன்சுக்கு ஜோடியாக ‘LUST STORIES’ நடிகை.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் சாதனை படைத் படம் ‘சந்திரமுகி’.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்த படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.

தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இதன் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது.

இதில் முதல் பாகத்தில் நடித்த ரஜினி, ஜோதிகா ஆகியோர் நடிக்கவில்லை.

ராகவா லாரன்ஸ் நடிக்க பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

இந்நிலையில், படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

காஞ்சனா பட ஹிந்தி ரீமேக்கை லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்துள்ளவர்தான் இந்த கியாரா அத்வானி. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.

மேலும் அண்மையில் ஆன்லைனில் வெளியான லஸ்ட் ஸ்டோரி வெப் சீரிஸில் சுய இன்பம் செய்வது போன்று நடித்து ரசிகர்களை கிறங்கடித்தவர் கியாரா அத்வானி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தன் மாமா விக்ரம் போல பெண் வேஷம் போடும் அர்ஜுமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாதா 87 பட இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG).

இதன் இறுதிக்கட்ட பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.,

புதுமுகம் அர்ஜுமன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.

அர்ஜுமன் நடிகர் விக்ரமின் உடன் பிறந்த சகோதரி அனிதாவின் மகன் ஆவார்.

இந்த ஜோடியுடன் பிக்பாஸ் ஜுலி, அனித்ரா, ரித்திகா சரண், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன், கதிர், KPY யோகி என பலர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அர்ஜுமனின் பிறந்தநாளை முன்னிட்டு PUBG படத்தில் இவரது 5 விதமான தோற்றங்களை அன்று வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அதில் ஒன்று பெண் வேடம் என தெரிய வந்துள்ளது.

கந்தசாமி படத்தில் நடிகர் விக்ரம் பெண் வேடம் ஏற்று நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாக நுழைந்தோம்.. நல்லதும் கெட்டதும் பார்த்தோம்.. அஜித் பற்றி வனிதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அவரது ரசிகர்கள் இந்த நிறைவு விழாவை ஸ்பெஷல் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.

பல பிரபலங்கள் இந்த டிபி.யை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வனிதாவும் ஒரு காமென் டிபியை பதிவிட்டு அஜித்தைப் பற்றி தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதில்…

“நம்ப முடியாதது. ஆனால் உண்மை. நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தான் சினிமாவில் நுழைந்தோம். சினிமாவில் நல்லதையும், மோசமானதையும் பார்த்தோம்.

அஜித் இந்த வெற்றிக்கு தகுதியானவர். நான் சந்தித்த மிக உண்மையான மனிதர்களில் ஒருவர்.

உங்களுக்கும், ஷாலினிக்கும் அனைத்து சிறப்புகளையும் கடவுள் கொடுப்பார்” என வனிதா பதிவிட்டுள்ளார்.

சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல்-சூரி மீன் பிடித்த விவகாரம்.; 3 வனத்துறையினர் பணியிடம் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு கடந்த 15-ம் தேதி நடிகர்கள் விமல் சூரி உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியானது.

இதனால் அவர்களுக்கு இபாஸ் கிடைத்தது எப்படி? வனத்துறையினர் எப்படி வனப்பகுதியில் அனுமதித்தனர் உள்ளிட்ட கேள்விகள் எழுந்தன.

அந்த பகுதியில் அனுமதியில்லாமல் விமல் சூரி இருவரும் மீன் பிடித்ததால் ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விமல் சூரி அங்கிருந்த போது பணியில் இருந்த வனக்காவலர்கள் இருவர் மற்றும் வனக்காப்பாளர் ஒருவரை பணியிட மாற்றம் செய்துள்ளதாக மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

அக்ஷய்குமார் தனுஷ் இணையும் படம் அக்டோபரில் மீண்டும் ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டை கலக்கும் தனுஷ் அவர்கள் ‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

மேலும் ‘ஷமிதாப்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார்.

தற்போது மீண்டும் ‘ராஞ்சனா’ இயக்குனர் ஆனந்த் எல் ராய் உடன் ‘அத்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார். தனுஷ் ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார்.

மார்ச் மாதத்தில் இப்பட சூட்டிங் தொடங்கப்பட்டு பின்னர் கொரானோ பாதிப்பால் நின்றது.

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் கதை பல ஊர்களில் நடப்பது போல உள்ளதாம். எனவே மதுரையிலும் இப்பட காட்சிகளை படம் பிடிக்க உள்ளனர்.

சிலம்பம் பாட்டிக்கு உதவி; மகள்களை மாடாக்கிய விவசாயிக்கு உதவி.. ரியல் ஹீரோவானார் சோனு சூட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனு சூட்.

சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த கொரோனா ஊரடங்கில் மிகப்பெரிய உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.

ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை தனது சொந்த செலவில் பல பஸ்களில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

ரஜினி-சிம்பு பட வில்லனுக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்; ஏன் தெரியுமா?

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வயதான பெண்மணி ஒருவர் சிலம்பம் சுற்றி வித்தை காட்டி பிச்சை எடுத்து வந்தார். இந்த வீடியோ வைரலானது.

இதனையறிந்த நடிகர் சோனு சூட் அந்த பாட்டியை அழைத்து பெண்களுக்கான சிலம்ப பயிற்சி பள்ளியை துவங்க சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறார்..

இதனையடுத்து ஆந்திரா சித்தூரில் விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுவதற்கு தன்னிடம் மாடுகள் இல்லாததால் தனது இரண்டு மகள்களையும் ஏரில் பூட்டி நிலத்தை உழுதுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சோனு சூட் அவர்களின் நிலத்தை உழுவதற்கு உடனடியாக ஒரு புதிய டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

சினிமாவில் வில்லனாக ஜொலித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக இருக்கிறார் சோனு சூட். அவருக்கு வாழ்த்துக்கள்.

More Articles
Follows