தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : ரஜினி-தனுஷ் வாக்களிக்கவில்லை..; குஷ்பூ-சிவகார்த்திகேயன் வாக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kushboo sivakarthikeyanஇன்று நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.

இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் வாக்களிக்கவில்லை!

இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Khushboo and sivakarthikeyan cast their vote in TFPC election 2020

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லரை படமாக்கும் எழில்..; பார்த்திபன் & கௌதம் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gautham karthik parthibanமுதன்முறையாக நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் க்ரைம் திரில்லர் கதையை படமாக்குகிறார் இயக்குநர் எழில்.

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.விஜய்குமரன் என்பவர் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க, குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத நிலையில் ‘புரடக்‌ஷன் நம்பர் 2’ என்று தற்காலிகமாக அழைக்கின்றனர்.

அண்மையில் இதன் சூட்டிங்கை சென்னையில் தொடங்கியுள்ளனர்.

Gautham Karthik and Parthiban joins for a thriller movie

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

வி.கே.ராமசாமி & நாகேஷ் இணைந்த ‘ருத்ர தாண்டவம்’ ரீமேக்..; சிவனாக நடிக்கும் சந்தானம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நகைச்சுவை நடிகர்களான வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் இணைந்து நடித்த படம் ‘ருத்ர தாண்டவம்’.

கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படம் வெளியானது.

கடவுள் சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பதை அப்போதே சொன்ன படம் இது.

அண்மையில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் இதே கதை தான்.

தற்போது “ருத்ர தாண்டவம் 2021” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவிருக்கிறார்.

இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைக்க இருந்தாராம் இயக்குனர்.

ஆனால் அது நிறைவேறாமல் போகவே, தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்..

Santhanam to act in Rudra Thandavam remake

rudra thandavam movie

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தம்பிக்கு ஜோடியாக நடித்தவரை அண்ணனுக்கும் ஜோடியாக்கும் பாண்டிராஜ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

இப்படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளாராம்.

ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க எஸ்ஆர். பிரபு தயாரித்து வருகிறார்.

Rashmika Mandanna to play female lead in Suriya’s next film

rashmika mandanna

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

அ இ த வி ம இ கட்சியை பதிய வேண்டாம்.; தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்… எஸ்கேப்பாகும் எஸ்ஏசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SA chandrasekharஅண்மையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை’ அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்த தகவல் வெளியான சில மணி நேரத்திலேயே கட்சிக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என அறிக்கை விட்டார் நடிகர் விஜய்.

தன் ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் சேர வேண்டாம். என் பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டார்.

பின்னர் கட்சியிலிருந்து (பொருளாளர் பதவியில்) விலகுவதாக விஜய் அம்மா ஷோபாவும் அறிவித்தார்.

எனக்கு பிடித்த நடிகர் பெயரில் மக்களுக்கு நல்லது செய்ய கட்சித் தொடங்கி இருக்கிறேன்.

தற்போது விஜய் ஆபத்தான வலையில் சிக்கியுள்ளார் என பரபரப்பாக பேட்டியளித்தார் எஸ்ஏசி.

இதன் பின்னர் கட்சியின் தலைவர் பத்மநாபனுக்கு மிரட்டல்கள் வருவதாக தெரிவித்த அவர், எஸ்.ஏ.சிக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார்.

யார் விலகினாலும் கட்சி நடக்கும்… தன்னுடைய பயணம் தொடரும் என்றார் எஸ்ஏசி.

இந்த நிலையில்… தற்போது கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என அவர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

SAC withdraw new political party ?

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை..; கமல்ஹாசன் வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasanதமிழக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கவுள்ளது தமிழக அரசு.

இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

“காவல்துறையினருக்கு மட்டும் திட்டவட்டமான பணி நேரமோ ஓய்வு ஒழிச்சலோ கிடையாது.

இதை மாற்ற வேண்டுமென்று பேச்சு எழுந்திருக்கிறது. கடமையைச் செய்பவர்களுக்கு ஓய்வு கொள்ளவும், உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு இளைப்பாறவும் உரிமை உண்டு.

சுழற்சி முறையிலோ வேறு விதத்திலோ பிற அரசு ஊழியர்கள் போல் காவல் துறையினருக்கும் ஓய்வு கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது.

வெறும் பேச்சாய் இல்லாமல் இது நடைமுறைப் படுத்தப்படவும் வேண்டும்.

One day leave for TN police MNM leader Kamal praised

More Articles
Follows