தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று நவம்பர் 22ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள்.
இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.
இந்த தேர்தலில் மொத்தம் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1,303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர்.
இவர்களில் 1,050 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த், தனுஷ், பாரதிராஜா, ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.பி.சரண் ஆகியோர் வாக்களிக்கவில்லை!
இதற்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில், வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Khushboo and sivakarthikeyan cast their vote in TFPC election 2020