தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் பல மாநிலங்களில் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர் குழந்தைகள்.
பலர் தாய், தந்தை இருவரில் ஒருவரை இழந்தாலும் சிலர் இருவரையுமே இழந்து தவித்து வருவது மகா கொடுமை.
குழந்தைகளின் பரிதாப நிலையை உணர்ந்த ஏராளமான தன்னார்வ அமைப்புகள் உதவ முன்வந்துள்ளன.
குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோரை இழந்துவிட்டால் நிவாரண உதவிகளை மாநில அரசுகள் அளித்து வருகி்ன்றன.
மேலும் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட ஓரிரு மாநில அரசுகள் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில் கேரள அரசும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் நேற்று அளித்த பேட்டியில்…
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தொடக்க உதவித்தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அதன்பின் 18வயதுவரை மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த குழந்தைகள் பட்டப்படிப்பு முடிக்கும் வரை அதற்கான கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
என உத்தரவிட்டுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
Kerala govt to give financial aid of Rs 3 lakh, free education for kids who lost their parents to Covid