15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரம்.; மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

15 கோடி ரூபாய் தங்க கடத்தல் விவகாரம்.; மோடிக்கு பினராயி விஜயன் கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

modi pinarayi vijayanகொரோனா வைரஸ் உயிரிழப்புகள் மனிதருக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கடத்தல் விவகாரத்தை மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் விசாரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்…

தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தப்பட்டுள்ள சம்பவம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்…. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தன் கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் முதலமைச்சர் பினராயி விஜயன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் மகன் சஞ்சய்..?

மாஸ்டர் படத்தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விஜய் மகன் சஞ்சய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sajon sanjay vijayதமிழ் சினிமாவின் தளபதி என்றால் அது நடிகர் விஜய் தான்.

இவரது மகன் சஞ்சய் வேட்டைக்காரன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பார்.

இவர் தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத் தயாரிப்பாளர் (விஜய்யின் உறவினர்) பிரிட்டோ தயாரிப்பில் சஞ்சய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் தயாரிப்பாளர் பிரிட்டோ இந்தச் செய்தியை மறுத்துள்ளார்.

மேலும் தான் இதுகுறித்து விஜய்யிடம் தான் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

இவையில்லாமல் விஜய் சேதுபதி தயாரிக்கவுள்ள படத்திலும் விஜய் மகன் சஞ்சய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ட்ராபிக் ரூட்ஸ் & ரூல்ஸ் இரண்டு வாரங்களுக்கு மாற்றம்..; முழு விவரம்…

சென்னையில் ட்ராபிக் ரூட்ஸ் & ரூல்ஸ் இரண்டு வாரங்களுக்கு மாற்றம்..; முழு விவரம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai trafficசென்னை போக்குவரத்துக் காவல் பிரிவு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப்பணி நடக்க இருப்பதால் வரும் 11-07-2020 முதல் 25-07-2020 வரை 15 நாட்களுக்கு கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. அண்ணா சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக EVR சாலை வருபவர்கள் தொடர்ந்து இதே சாலையில் செல்லலாம், மாற்றம் இல்லை. செண்ட்ரல் ரயில் நிலையல் வருபவர்கள் இப்பாதையை பயன்படுத்தலாம்.

2. முத்துசாமி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.

3. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்பவர்கள் ஈவினிங் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி, EVR சாலை சென்று வலதுபுறம் திரும்பி முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்.

4. ஈவினிங் பஜார் சாலையில் இருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல முடியாது.

5. வால்டாக்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி EVR சாலை சென்று வலது பக்கம் திரும்பி, முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம். இவர்கள் செண்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணா சாலை செல்ல முடியாது.

6. முத்துசாமி சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியிலும் கட்சியிலும் ஒரு போதும் சசிகலாவிற்கு இடமில்லை..- அமைச்சர் ஜெயக்குமார்

ஆட்சியிலும் கட்சியிலும் ஒரு போதும் சசிகலாவிற்கு இடமில்லை..- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayakumar sasikalaஅடுத்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி சிறைத் தண்டனையை முடித்து விட்டு வெளியே வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் தினம் மீடியாக்களில் வலம் வருகிறது.

இந்த நிலையில்… ஓ.எஸ்.மணியன் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த போது..

சசிகலா விடுதலைக்கு பிறகு யார் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்ற செய்தியாளர்கள் கேட்டனர்.

அந்த கேள்விக்கு… ”சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும்.

நான் சாதாரணமான மாவட்ட செயலாளர் என்றும் இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மற்றொரு சந்திப்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதிலளித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

சசிகலா குறித்து பேசியது ஒ.எஸ்.மணியன் அவர்களின் சொந்த கருத்ததாக இருக்கலாம்.

சசிகலா இல்லாமல் ஆட்சி நடத்துவது தான் அதிமுக அரசின் திட்டம். சசிகலாவிற்கு ஆட்சியிலும், கட்சியிலும் ஒரு போதும் இடமில்லை. அதிமுக-வின் நிலைப்பாட்டில் எப்போதும் மாற்றமில்லை.” என தெரிவித்துள்ளார்.

சசிகலா ரிலீசுக்கு (ஆகஸ்ட்டுக்கு) பின் தமிழக அரசியலில் கட்சி & காட்சி மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்க பெரியம்மாவும் ட்விட்டருக்கு வந்துட்டாங்க..;. ராதா மகள் கார்த்திகா ட்வீட்

எங்க பெரியம்மாவும் ட்விட்டருக்கு வந்துட்டாங்க..;. ராதா மகள் கார்த்திகா ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthika ambikaசிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, மோகன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அம்பிகா.

1980களில் தென்னிந்திய சினிமாவை கலக்கியவர்களில் இவரும் ஒருவர்.

இவரைப் போலவே இவரின் தங்கை நடிகை ராதாவும் மிகப்பிரபலம்.

ரஜினி & கமல் படங்களில் இவர்கள் இணைந்தும் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தனர்.

அம்பிகா சில படங்களில் நடித்து வருகிறார்

தற்போது, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் ‘ட்விட்டர்’ சமூக வலைதளத்தில் இணைந்துஉள்ளார்.

‘பேஸ்புக்’ பக்கத்தில் மட்டுமே கணக்கு வைத்துள்ள இவர், ட்விட்டரில் இணைந்ததை, ராதாவின் மகள் கார்த்திகா அறிவித்து உள்ளார்.

ராதாவின் மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகர் பிருத்விராஜுக்காக தன் மனைவி ஷாலினியை திட்டிய அஜித்

நடிகர் பிருத்விராஜுக்காக தன் மனைவி ஷாலினியை திட்டிய அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அவள் வருவாளா படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தவர் பப்லு என்ற பிருத்விராஜ்.

அந்த படத்தில் சிம்ரனின் முதல் கணவராக நடித்திருப்பார் பிருத்விராஜ்.

ஆனால் ஷாலினியுடன் பிருத்விராஜ் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அஜித் & ஷாலினியும் ஓர் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்

அங்கு பிருத்விராஜும் வந்துள்ளார்.

ஆனால் பல முறை பார்த்தும் ஷாலினியும், பப்லுவும் பேசிக் கொள்ளவில்லையாம்.

இதனையடுத்து அஜித் இது பற்றி ஷாலினியிடம் கேட்டாராம். நாங்கள் சேர்ந்து நடிக்கவில்லை என்றாராம் ஷாலினி.

ப்ரித்விராஜ் ஒரு சீனியர் நடிகர், என் நண்பர்… அவரை பார்த்தால் பேசியிருக்க வேண்டும் என்று கூறி கோபப்பட்டாராம்.

இதனையடுத்து பிருத்விராஜ்க்கு போன் செய்து ஷாலினியே இந்த தகவலை தெரிவித்து பேசினாராம்.

இதனால் ஆச்சர்யப்பட்டுப் போன பப்லு.. ‘ஷாலினியிடம் அப்படி கூறியிருக்க வேண்டியது அவசியமில்லை. அதுதான் அஜித். அவர் ஒரு பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்’ எனத் தெரிவித்துள்ளார்.prithviraj

More Articles
Follows