தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னடத்தில் 4 படங்களை இயக்கிய நரேந்திர பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் படம் ‘கேக்காமலே கேட்கும்’.
சி.வி.ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சி.வெங்கடேஷ் தயாரித்துள்ள இந்த படத்தில் அறிமுகம் கிரண் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக திவ்யா, வந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் மஞ்சுநாத், பிரார்த்தானா என்.பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். கன்னடம், தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிதர் திவான் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது படத்தின் இயக்குனர் நரேந்திர பாபு படம் குறித்து பேசும்போது, ‘‘என் தாய் மொழி தமிழ் தான்! ஆனால் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். கே.பாலச்சந்தர் இயக்கிய சில சீரியல்கள், படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளேன்.
கன்னடத்தில் 4 சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறேன்.
இது என் 5வது படமாக உருவாகியுள்ளது.
தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.
இது வழக்கமான பேய் படமாக இருக்காது.
இன்று எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அதில் மெசேஜ் வழியாக பேய் வருகிறது.
அது மற்ற போன்களுடன் தொடர்பை ஏற்படுத்தி செல்கிறது என்கிற கதையை வித்தியாசமாக உருவாக்கியிருக்கிறேன்.’’ என்றார்.
Kekamalae Kekkum movie has story line of Ghost in Cell Phones