சமந்தா இடத்தில் கீர்த்தி சுரேஷ்; சாவித்ரியாக நடிக்கிறார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவை தன் அழகிய நடிப்பால் கவர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் விரைவில் பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறாராம்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் இது தொடர்பாக சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமந்தா மற்றொரு கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ள இப்படத்திற்கு மகாநதி என பெயரிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இது தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாவித்ரி பற்றி சில குறிப்புகள்…

  • நடிகையர் திலகம் என அழைக்கப்பட்டவர் சாவித்ரி.
  • தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
  • காஸ்ட்லி கார், பங்களா, அதிக சம்பளம் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கட்டியவர்,
  • ஆனால் இவரது கடைசிகால வாழ்க்கை மிகவும் மோசமாக அமைந்தது.
  • போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஆதரவின்றி இறந்து போனதாக கூறப்படுகிறது.

Keerthy Suresh may act in Savitri’s biopic

அனிருத்துக்கு சான்ஸ் இருக்கு… ஆனா இல்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அனிருத் இசைக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தொடர்ந்து வருகிறது.

இதை தொடர்ந்து, தற்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்திற்கு தற்போது இசையமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது.

ஆனால் அனிருத்தோ ரூ. 3 கோடியை சம்பளமாக கேட்க, அனிருத்தை புக் செய்ய தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்களாம்.

இதனால், சான்ஸ் இருந்தும் இல்லாமல் இருக்கிறாராம் அனிருத்.

‘பைரவா’ ரிலீஸில் சிக்கல்… விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் வருகிற ஜனவரி 12ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது.

இப்படத்திற்கு தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் வருகிற 10ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள தியேட்டர்கள் மூடச்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாம்.

விநியோகஸ்தர்கள் தியேட்டர்கள் உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ள லாபம் பங்கீடு பிரச்சினைதான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இப்பிரச்சினை தீரும் வரை பைரவா உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகாது என்பதால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படத்தில் தனுஷ்-சிவகார்த்திகேயன் நடிக்க, இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத்.

இதனையடுத்து தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் பல படங்களில் அனிருத்தான் இசையமைத்தார்.

தன் படங்களில் இசையமைப்பாளரை தனுஷ் அறிவிக்காவிட்டாலும் அனிருத் இசையமைப்பார் என்றே பரவலாக பேசப்பட்டது.

ஆனால் சமீபகாலமாக தனுஷாலும் அவரது உறவினர்களாலும் அனிருத் ஒதுக்கப்படுவது தெளிவாக தெரிகிறது.

தனுஷின் ‘கொடி’ படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.

தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ படத்தில் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இதனையடுத்து, சௌந்தர்யா ரஜினி இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்திலும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘மாரியப்பன்’ படத்திலும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்வதால், தனுஷ் – அனிருத் இடையிலான நட்பு இனி தொடருமா? என்பது கேள்விக்குறியே.

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கும் சிவகார்த்திகேயன் படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

கமல்-விஜய்-தனுஷ்-சிம்பு வரிசையில் அமலா பால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் கமல்-விஜய்-தனுஷ்-சிம்பு உள்ளிட்ட நடிகர்களே பாடல் பாடி நடித்து வருகின்றனர்.

அதுபோல் நடிகைகளில் ஆண்ட்ரியா மற்றும் ரம்யா நம்பீசனும் படங்களில் பாடி வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் தற்போது அமலாபால் இணைந்துள்ளார்.

ஜெயராம், பிரகாஷ் ராஜ் நடித்து வரும் ‘அச்சான்யன்ஸ்’ என்னும் மலையாள படத்தில் அமலாபாலும் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு பாடலை இவர் பாடவிருக்கிறாராம்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வர, தீவிர பயிற்சியில் இருக்கிறார் அமலா.

Amala paul going to sing a song in movie

பிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர்.

ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது.

பின்னர் சூர்யா வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தனியார் டிவியின் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா பேசும்போது…

எங்கள் கூட்டணியை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு படம் செய்ய வேண்டும் என தோன்றும்.

பிரச்சினையான சமயத்தில் எங்கள் இருவருடைய கருத்துக்களும் வலுவாக இருந்தது.

எனவே அப்போது கௌதம் மேனனுடன் இணைய மறுத்துவிட்டேன்.

எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்றை அப்போது வெளியிட்டு விட்டேன்.

பின்னர் அப்படி செய்திருக்கக் கூடாது என்றே தோன்றியது.

ஆனால் சமீபத்தில் இருவரும் சந்தித்து பேசினோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம்.” என்று பதிலளித்துள்ளார்.

More Articles
Follows