‘கத்தி’ மீது வழக்கு தொடுத்தவர் அடுத்து ‘குத்துச் சண்டை’ போடுகிறார்

‘கத்தி’ மீது வழக்கு தொடுத்தவர் அடுத்து ‘குத்துச் சண்டை’ போடுகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaththiமுருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை என்னுடையது என மீஞ்சூர் கோபி வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தன் அடுத்த படங்களின் மீது கவனம் செலுத்தி வருகிறார் இவர்.

கலெக்டராக நயன்தாரா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார் இவர்.

இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

எனவே, தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து களத்தில் இறங்கியிருக்கிறார்.

இதில் வடசென்னை பகுதியில் பாக்ஸிங் பாப்புலர் ஆனது எப்படி? என்பதை கதைக்களமாக கொண்டு உள்ளார்.

இதில் ஹீரோ வேடத்தில் நடிக்க வைக்க, தலித் இளைஞர் ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படத்திற்கு ‘குத்துச்சண்டை’ அல்லது ‘குத்துச்சண்டை பரம்பரை’ என பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறார் மீஞ்சூர் கோபி.

ஆகஸ்ட்டில் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சாய்பல்லவி ஜோடி

ஆகஸ்ட்டில் இணையும் ஜி.வி.பிரகாஷ்-சாய்பல்லவி ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gv prakash and sai pallavi movieராஜேஷ் இயக்கத்தில் “கடவுள் இருக்கான் குமாரு” மற்றும் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் “புரூஸ்லி” ஆகிய படங்களில் நடித்துவருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

தற்போது இந்த இரண்டு படங்களும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எனவே ஆகஸ்ட் முதல் ராஜூவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதில் நாயகியாக ப்ரேமம் புகழ் மலர் டீச்சர் சாய் பல்லவி நடிக்கிறார்.

இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் ஒன்பது பாடல்கள் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்-சூர்யாவுக்கு கதை ரெடி செய்யும் இருமுகன் இயக்குனர்

விஜய்-சூர்யாவுக்கு கதை ரெடி செய்யும் இருமுகன் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and suriya stillsபிரபல இயக்குனர் ஏஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக இருந்தவர் ஆனந்த் ஷங்கர்.

விஜய் நடித்த துப்பாக்கி, சூர்யா நடித்த ஏழாம் அறிவு உள்ளிட்ட படங்களின் போது முருகதாசுடன் பணிபுரிந்துள்ளார்.

தற்போது விக்ரம் நடிக்கும் இருமுகன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் விஜய், சூர்யா படங்களை இயக்குவது எப்போது என்ற கேள்விக்கு அண்மையில் அவர் பதிலளித்துள்ளார்.

விஜய், சூர்யா படங்களை இயக்க காத்திருக்கிறேன்.

கதை ரெடியானதும் அவர்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.

கபாலி லாபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பங்கு.?

கபாலி லாபத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பங்கு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stillsபெரும் எதிர்பார்ப்பில் உருவான சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படம் வெளியாகி ஒரு வாரத்தை கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் இப்படம் ஒரே வாரத்தில் ரூ. 7 கோடி வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் உலகம் முழுவதும் ரூ. 320 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு? என்னவாக இருக்கும்? என்ற கேள்விகள் கோலிவுட்டை வலம் வருகின்றன.

அதாவது ரூ. 40 கோடி வரை ரஜினிக்கு சம்பளம் பேசப்பட்டதாம்.

தற்போது கபாலி அதிக பட்ச வசூலை ஈட்டிவருவதால் இதில் ரஜினிக்கு பங்கு உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே லாபத்தில் ரூ. 40 கோடி ரஜினிக்கு தரப்படும் என சொல்லப்படுகிறது.

ஆகமொத்தம் கபாலியில் ரஜினியின் சம்பளம் மட்டும் ரூ. 80 கோடியை நெருங்கும் எனத் தெரிகிறது.

இது நடக்கும் பட்சத்தில் இந்தியாவில் எந்த நடிகரும் எட்டாத உயரத்தை பிடிப்பார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெற்றிக்காக இணைந்து வரும் கார்த்தி-தனுஷ்

மீண்டும் வெற்றிக்காக இணைந்து வரும் கார்த்தி-தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and karthiதீபாவளி என்றால் சினிமா இல்லாமல் சுவாரஸ்யம் இருக்காது.

எனவே, வழக்கம்போல இவ்வருட தீபாவளியையும் சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கார்த்தி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’
தீபாவளி (அக்டோபர் 25) தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதே நாளில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்துள்ள ‘கொடி’யும் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு தீபாவளியன்று தனுஷின் ‘ஆடுகளம்’ மற்றும் கார்த்தியின் ‘சிறுத்தை’ ஆகிய படங்கள் மோதி இரண்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடமும் இரண்டும் வெற்றிப் பெற வாழ்த்துவோம்.

அனைத்தையும் மக்களுக்கே கொடுத்த ரியல் சூப்பர் ஸ்டார்

அனைத்தையும் மக்களுக்கே கொடுத்த ரியல் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nana patekar stillsஇன்றும் ஒரு விவசாயி தற்கொலை…. கடந்த சில ஆண்டுகளாக வறட்சியில் தவிக்கும் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தினச்செய்தி இதுதான்.

இயற்கை கொடுத்த இந்த வறட்சியை தடுக்க அரசாங்கத்தாலும் முடியவில்லை.

எனவே தன் சொந்த மாநில மக்களுக்காக களத்தில் இறங்கினார் நடிகர் நானா படேகர்.

தமிழில பாராதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் இவர் நடித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

சில காலம் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் சக நடிகர் மன்கர்டுடன் இணைந்து ‘நாம் ‘ என்ற அறக்கட்டளையை தொடங்கினார்.

தான் சம்பாதித்த பணம் மற்றும் வசூலான பணம் என அனைத்தையும் மக்களுக்கே கொடுத்தார்.

தானே களத்தில் இறங்கி 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கு உதவினார்.

உதவிய பணம் போக எஞ்சிய பணத்தில் மராத்வாடா பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சம்பாதித்த பணத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டது குறித்து கேட்டால்.. ‘இப்போதுதான் என் பிறப்பின் அர்த்தத்தை உணர்கிறேன்.” என்கிறார்.

இப்போ சொல்லுங்க, இவர் நிஜ சூப்பர் ஸ்டார்தானே…

More Articles
Follows