லதாவை தடவிய எம்ஜிஆர்..; கஸ்தூரியின் கருத்துக்கு லதா கண்டனம்

லதாவை தடவிய எம்ஜிஆர்..; கஸ்தூரியின் கருத்துக்கு லதா கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kasthuri under trouble for vulgar tweet Actress Latha condemn herநடிகை கஸ்தூரி அவ்வப்போது ட்விட்டரில் ஏதாவது ஒரு கருத்தை சொல்லிவிட்டு சர்ச்சையாக்கி கொண்டே இருப்பார்.

தற்போது எம்ஜிஆர் மற்றும் லதாவை இணைத்து ஒரு தடவல் ட்விட் போட்டுள்ளார்.

அதில்…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. #CSK 81 -3 (14 overs)
எனவே அவரின் கருத்துக்கு பிரபல நடிகை லதா தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

“ நான் 50 வருஷமா நடிச்சிக்கிட்டிருக்கேன். இப்போவரைக்கும் எனக்குன்னு ஒரு மரியாதையை தக்க வைச்சுக்கிட்டிருக்கேன்.

‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரை தெய்வமா மதிக்கிற கோடானுகோடி ரசிகர்கள் தமிழ்நாட்டுல இருக்காங்க. அவங்களையெல்லாம் ஒட்டு மொத்தமா மன வருத்தப்படுற மாதிரி இப்படியெல்லாம் எழுதலாமா..?

கஸ்தூரி நடிச்ச அளவுக்கெல்லாம் நான் எந்தப் படத்துலேயும் விரசமா நடிக்கலையே. அவங்களுக்கு கருத்துச் சொல்ல ஒரு விஷயம் தேவைப்பட்டுச்சுன்னா அவங்க நடிச்ச படத்துல இருந்தே சொல்லியிருக்கலாமே..? எதுக்கு நானும், ‘மக்கள் திலகமும்’ நடிச்ச படத்தைச் சொல்லணும்..

அவங்கதான் எதுக்கெடுத்தாலும் பெண்ணியம்.. அது… இதுன்னு கருத்துச் சொல்லிட்டிருக்காங்களே.. இதெல்லாம் பெண்ணியம் பேசுறவங்க பேச்சா.. ஒரு பொண்ணே, இன்னொரு பொண்ணை பொதுவெளில அவமானப்படு்த்துற மாதிரி பேசலாமா..?

கஸ்தூரிக்கு பப்ளிசிட்டி வேணும்ன்னா வேற எதையாவது செய்யலாம். இது அந்தப் பொண்ணுக்குத் தேவையில்லாத வேலை. இதுவொரு சீப்பான பப்ளிசிட்டி..

இதற்கு நடிகர் சங்கத்தில் இருந்து கண்டன கடிதம் அனுப்பி உள்ளதாக என்னிடம் சொன்னார்கள் அவர்களுக்கு மிக்க நன்றி. அதுமட்டும் இல்லாமல் அனைத்து எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களிலும் இருந்து கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இப்படிக்கு
நடிகை லதா

தற்போது லதாவின் கண்டனத்திற்கு பதிலளிக்கும் வகையில் கஸ்தூரி தெரிவித்துள்ளதாவது…

Kasturi Shankar‏Verified account @KasthuriShankar
MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்.

Kasthuri under trouble for vulgar tweet Actress Latha condemn her

கோவை மாவட்ட தொழில் மையத்தில் குளறுபடி.; பூனைக்கு மணி கட்டுவது யார்.?

கோவை மாவட்ட தொழில் மையத்தில் குளறுபடி.; பூனைக்கு மணி கட்டுவது யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

News about Kovai District Industries Centerகோவை மாவட்ட தொழில் மையத்தில் (District Industries Center) இதற்கு முன் பொது மேலாளராக இருந்தவர் ஓய்வு பெற்ற பிறகு, கண்ணன் என்பவர் தொழில் மையத்தில் இருந்து கோயமுத்தூர்தான் வேண்டும் என்று ஒத்த காலில் நின்று மேல் இருப்பவர்களை கவனித்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்துள்ளார்.

இவர் வந்த பிறகு தொழில் மையத்தில் இவருக்கு கீழ் பணிபுரியும் பெண் உதவி பொறியாளர்கள் மற்றும் மேலாளர்களை மிகவும் கீழ்தரமாக நடத்துகிறாராம்.

இவர் “நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை, என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று திமிராக பேசி அனைவரையும் மிரட்டுகிறாராம்.

தொழில் மையத்திற்கு வரும் தொழில் முனைவோரிடத்திலும் ஏக வசனத்தில் பேசி சத்தம் போடுகிறாராம். தன்னை கவனிக்காமல் ”எப்படி மானியம் பெறுகிறீர்கள்” என்று பார்த்து விடுகிறேன் என்று சவால் விடுகிறாராம்.

இவருடைய நிர்வாக திறமையின்மையால் பணிகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் மற்றும் தொழில் முனைவோர்கள் மிகவும் கஷ்ட்டத்திற்கு உள்ளாகின்றார்களாம்.

மேலும் அவருக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களில் சிலர் திருப்பூரில் இருந்து ட்ரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு மிகவும் உறுதுனையாகவும் மற்ற பெண் அதிகாரிகளை மிகவும் கீழ்தரமாகவும் நடத்துவதாக நம்மிடம் சில ஊழியர்கள் முறையிடுகிறார்கள்.

இதற்கு முன் இருந்த பொது மேலாளரிடம் இருந்த அனைவரையும் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்து விட வேண்டும் என்று சில பல உள்ளடி வேலைகளையும் செய்து வருகிறாராம்.

இது மட்டும்மல்லாமல் வருகிற தொழில் முனைவோர்களிடம் இதற்கு முன் இருந்த தொழில் மேலாளர் அசோகன் என்பவர் மேல் பொய் புகார் அளிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறாராம் அப்படி புகார் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு மானியம் கிடைக்காது என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து வரும் தொழில் முனைவோர்கள் நொந்து கொண்டு செல்கின்றனர் என்று சில ஊழியர்கள் புலம்புகின்றனர்.

மேலும் அலுவலகத்தில் பணிபுரியும் கோபாலகிருஷ்ணன் என்ற ஊழியர் ஒருவர் சக ஊழியர்களுக்கு கம்யூட்டர் மற்றும் பிற அலுவலக ப்ரிண்டர்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்று சக பெண் ஊழியர்களை மிரட்டுகிறாராம்.

இதை பொது மேலாளரிடம் முறையிட்டால் அவர் அந்த ஊழியரை பார்த்து பயப்படுகிறாராம்.

பொது மேலாளர் ஏன் இந்த ஊழியருக்கு பயப்பட வேண்டும் என்று குழம்பி போய் உள்ளனர் மற்ற ஊழியர்கள்.

இதையெல்லாம் பொது மேலாளரிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கும்படி கூறினால் “உங்கள் அனைவரையும் வேறு ஊருக்கு மாற்றல் செய்துவிட்டு என்னுடன் முன்னால் திருப்பூரில் பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கோயமுத்தூருக்கு கொண்டு வந்துவிடுவேன் என்று மிரட்டுகிறாராம்.

இதையெல்லாம் பார்த்து அவரிடம் பணிபுரியும் நேர்மையான ஊழியர்கள் தமக்கு எப்போது மாறுதல் உத்தரவு வரும் என்று புலம்பி கொண்டு உள்ளனராம்.

மேலும் “என்னை இன்னும் மூன்று வருடங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. நான்தான் இங்கு அரசன் நான் யாருக்கும் பதில் சொல்ல தேவையில்லை. commissioner முதல் minister வரை எல்லோரையும் கவனித்துதான் இங்கு வந்துள்ளேன்”என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறாராம்.

பொதுமேலாளர் கண்ணன், மேலாளர் சந்திரசேகர் மற்றும் திருப்பூர் மேலாளர் திருமுருகன் ஆகிய மூவரும் கூட்டனி சேர்ந்துதான் இத்தனை அக்கிரமங்களையும் செய்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் தங்களுக்கு ஆகாத நேர்மையான ஊழியர்கள் மேல் பொய் புகார்கள் கூறி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

News about Kovai District Industries Center

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

செல்ல பிராணி நாய்யின் சாகசம்… வாட்ச்மேன் படம் பார்த்த மாணவர்கள் உற்சாகம்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)டபூள் மீனிங் புரோடஷன் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் GV.பிரகாஷ்குமார் நாயகனாக AL.விஜய் இயக்கதில் “வாட்ச்மேன்” படத்தை பார்த்த மாணவர்கள் அரங்கமே அதுரும் அளவிற்க்கு ஆராவாரத்துடன் ஆடினர்.படம் பார்த்த மாணவர்கள் கூறும் போது…”

“படத்தின் ஆரம்ப முதல் முடிவு வரை படத்தில் வந்த செல்லபிராணி ப்ரவ்ணி நாய் (browni) பண்ணும் சகாசங்கள் செம. படத்தில் நாய்ய பார்த்தவுடன் என்ன அறியாமையிலே சீட்டை விட்டு எழுந்திருச்சி கத்தினேன்.திரும்பி பார்த்த அரங்கமே நாயை பார்த்து அலருது. ஒரு முதலாளி உயிறை காப்பாற்ற நாய் பண்ணும் சாகசம் மற்றும் சுட்டித்தனம் எங்களை கவர்ந்தது..இப்ப நல்லா புரியுது.ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்ச்மேன் நாய் தான்.இனி எங்களோட ஹிரோ ப்ரவ்ணி நாய் தான்.கண்டிப்பா நாய்க்காக இன்னொரு முறை நாங்கள் மட்டும்மல்லாமல் எங்க நண்பர்களையும் கூட்டிகிட்டு தியேட்டர்ல பார்ப்போம்.

மேலும் கரிப்பா தலைமையாசிரியர் பெருமாள் கூறும் போது.இந்த கோடை விடுமுறைக்கு ஒவ்வொரு குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் வாட்ச்மேன் அந்த அளவுற்க்கு எல்லா தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.

இந்த நிகழ்வில் சாலி கிராமம் கரியப்பா கார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பி.டி.செல்வகுமார் அவர்கள் கலந்துக்கொண்டனர்.

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் ” பியார் “

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கும் ” பியார் “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசுந்தரம் மற்றும் மாரிசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ” பியார்” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் முன்னணி நடிகர் கதா நாயகனாகவும் முன்னணி நாயகி கதா நாயகியாகவும் நடிக்கிறார்கள். அதற்காக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

மற்றும் சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ஷபிபாபு ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – N.ஆனந்தகுமார்

இசை – A.K.ரிஷால் சாய்

பாடல்கள் – வ.கருப்பன்

எடிட்டிங் – ரமேஷ் வேலுகுட்டி

நடனம் – அசோக்ராஜா

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

கலை – முத்துவேல்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா எஸ்.செல்வகுமார். இவர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளராக பணியாற்றியவர்.. தற்போது நட்ராஜ் மனிஷா யாதவ் நடிக்க முடிவடையும் நிலையில் உள்ள சண்டி முனி என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் இயக்கும் இரண்டாவது படம் ” பியார் ”

தயாரிப்பு – விண்டோபாய் பிக்சர்ஸ் V.பாலகிருஷ்ணன் R.சோமசந்தரம், மாரிசன் மூவிஸ்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள் ..இந்த படத்தில் வித்தியாசமாக ஒரு ஹீரோ இரண்டு பேய்க் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.அ தாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க்காதல் என்றும் சொல்லலாம்.

ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது..

ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பே அடுத்த படம் கமிட்டானது எப்படி என்று இயக்குனரிடம் கேட்ட போது. சண்டி முனி படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளரிடம் சொன்னது போல் முடித்துக் கொடுத்ததை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் என்னை பியார் படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுக்கும் நான் திட்டமிட்டு சொன்ன படி முடித்துக் கொடுப்பேன் என்கிறார் மில்கா எஸ்.செல்வகுமார்

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ : திரையுலகம் காணாத அதிசயம்

10 லட்ச ரூபாயில் ஒரு படம் ‘ழகரம் ‘ : திரையுலகம் காணாத அதிசயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுத்து திரையுலகம் காணாத அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் புதுமுக இயக்குநர் க்ரிஷ். அப்படி உருவாகியுள்ள படம் தான் ‘ழகரம்’.இந்தப் படம் ஏப்ரல் 12-ல் வெளியாகிறது.

இயக்குநர் கிரிஷுக்கு சொந்த ஊர் நாகர்கோவில் .சினிமா கனவோடு சென்னை வந்தவர் புதிய தலைமுறை ,ஜீ தமிழ் போன்ற தொலைக் காட்சி சேனல்களில் பணியாற்றியிருக்கிறார் .பல நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியிருக்கிறார் .
இப்போதுகூட புதிய தலைமுறை டிவியில் வீடு என்கிற பெயரில் நிகழ்ச்சி தயாரித்து வழங்கி வருகிறார்.

அது என்ன’ ழ கரம் ‘தலைப்பு ?

பலருக்கு வாயில் நுழையாத எழுத்துதான் ‘ழ’ அதன் சிறப்புக் கருதியே படத் தலைப்பாக ‘ழகரம்’ என்று வைத்துள்ளார்.

கிரிஷ் சினிமா வாய்ப்பு தேடலில் இறங்கியபோது நடிகர் நந்தாவின் நட்பு கிடைத்திருக்கிறது .

அவரது ஆதரவால்தான் ழகரம் படம் வளர்ந்து நிறைவு பெற்று இறுதியாகப் பத்து லட்சத்தில் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார் .

கோடிகளில் புழங்கும் திரையுலகில் 10 இலட்சத்தில் ஒரு படத்தை எடுத்து அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார் க்ரிஷ் .

நந்தா உள்பட இப்படத்தில் நடித்த நடிகர்கள் அனைவருமே ஊதியம் வாங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் ஊதியத்தை சினிமா ஆர்வமுள்ள இளைஞர் ஒருவரின் படைப்பிற்காகத் தாங்கள் செய்துள்ள பங்களிப்பு முதலீடாக இருக்கட்டும் என்று திறமையை முதலீடாக்கிப் பங்கெடுத்துள்ளனர்.

புதியதாக ஒரு கதையைத் தேடியபோது கிடைத்த ஒரு மர்ம நாவல் தான் ப்ராஜக்ட் ஃ .இதை எழுதியவர் கவாகேன்ஸ் என்கிற பெண்மணி.
கதை பிடித்து திரைக்கதையாக்கி இதோ படமாக முடிந்துள்ளது.

படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர்கள் ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் என மூவர் . இசையமைத்துள்ளவர் தரன். நாயகன் நந்தா, ஈடன் நாயகி .இவர்கள் தவிர விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா ஆகியோரும் நடித்துள்ளனர் .

“ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று பயணிக்கிறது கதை.

இன்று 10 இலட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது பெரிய சவாலான விஷயம் இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். படத்தில் பெரிய முதலீடு அவர் தான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல இதில் வழக்கமான வேடத்தில் அவரைப் பார்க்க முடியாது .முற்றிலும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து உள்ளார். திரையில் திட்டமிட்டு படம் எடுத்தால் செலவைக் குறைக்க முடியும் புதியவர் கூட ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபிக்க இந்த படத்தை எடுத்தோம் நண்பர்கள் பலர் உதவியுடன் படம் முடிந்துவிட்டது .கதிர் பிலிம்ஸ் சார்பில் பால்டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார்.

திட்டமிட்டுச் சிக்கனமாகப் படம் எடுத்திருந்தாலும் விறுவிறுப்பான கதை சொல்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை என்பதை படம் பார்க்கும்போது அனைவரும் உணர்வார்கள் . ஏப்ரல் 12 -ல் படம் வெளியாகிறது .” என்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

இந்த ‘ழகரம்’ ரசிகர்களுக்கு ஒரு படமாகவும் திரையுலகினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று கூறலாம்

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்

டீன் ஏஜில் கேமராமேன் ஆன கவின் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ இப்படத்தின் ஒளிப்பதிவு ஊடகங்களால் அடையாளம் கண்டு பாராட்டப்பட்டது.

படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் கவின் ராஜ். இவர் டீன் ஏஜிலேயே ஒளிப்பதிவாளர் ஆகியுள்ளவர். இவர் தனது 19 வயதிலேயே ‘தீதும் நன்றும்’ என்கிற முதல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் .இவரது இரண்டாவது படம் தான் ‘இஸ்பேட் ராஜா’. இப்போது வயது 22

இவரது அனுபவம் விசித்திரமானது. கேமராவைத் தொட்டுக் கூட பார்க்காமல் இருந்த இவருக்கு முதல் பட வாய்ப்பு வந்தது. தனது ஆர்வத்தாலும் திறமையாலும் வாய்ப்பு அளித்தவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றித் தன் தகுதியை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இனி அவருடன் பேசலாம்!

“நான் பிளஸ் டூ முடித்தவுடன் மேற்கொண்டு என்ன படிப்பது ?எந்தத் துறையில் ஈடுபடுவது ?என்று எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன். ஆனால் ஓவியம் கலை சினிமா என்று ஆர்வமாக இருந்தேன் ஆனால் இதில் எதில் முழு ஈடுபாடு காட்டுவது என்று தெரியவில்லை .நான் சினிமா நிறைய பார்ப்பேன்.

பலவகையான படங்களையும் பார்ப்பேன் iஇந்த ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா உனக்கு சினிமாவில் ஈடுபட விருப்பம் இருக்கிறதா என்றார் .சினிமா ஆர்வம் என்பதை அவரிடம் கூறினேன். அவர் கேந்திரீய வித்யாலயா பள்ளியில் ஓவிய ஆசிரியர் . கலை ஈடுபாடு இருப்பதால் அப்பா என் ஆர்வத்தை கண்டு கொண்டார்.

அப்படி என்றால் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேரலாம் என்று சொன்னார் .டைரக்ஷன் துறையில் சேர்ந்தால் சினிமா பற்றி ஆழமான அறிவு கிடைக்கும் என்று கருதினோம். ஆனால் ஒளிப்பதிவு கூடக் கிடைக்கவில்லை.கடைசியில் கிடைத்த எடிட்டிங்கில் சேர்ந்தேன்.

எடிட்டிங் சம்பந்தப்பட்ட அறிவும் சினிமா உருவாக்கத்தில் தேவை என்பது புரிந்தது. இன்ஸ்டிடியூட்டில் படித்துக்கொண்டே நிறைய புத்தகங்கள் படித்தேன். இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது ஒளிப்பதிவு என்னை மிகவும் ஈர்த்து விட்டது .அதன்பிறகு ஒளிப்பதிவு சார்ந்த தேடலில் இறங்கினேன் .ஒளிப்பதிவாளர் ஆவது என்பதை முடிவு செய்து கொண்டேன் .

நாளைய இயக்குநர் சீசன் 5 -ல் குறும்படம் உருவாக்கத்தில் இணைந்து பணியாற்றினோம். எங்கள் குழுவுக்கு வெற்றி கிடைத்தது. அந்த நட்பு வளர்ந்துதான் முதல் படம்’ தீதும் நன்றும்’ என்ற படத்தில் ஒளிப்பதிவு செய்தேன் .இந்த படம் இன்னும் வெளிவரவில்லை .

சொன்னால் நம்ப மாட்டீர்கள் தீதும் நன்றும் திரைப்படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த போது அதற்கு முன் சினிமா கேமராவை நான் தொட்டதே இல்லை .ஆனால் கேமரா சம்பந்தமான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களும் எனக்குத் தெரியும். இந்த பலவீனத்தை படக்குழுவிடம் சொல்லிவிட்டுத்தான் வேலையில் இறங்கினேன்.
அந்த வாய்ப்பை பயன்படுத்தினேன். அவர்களும் என் ஆர்வத்தை மதித்து என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார்கள் .வெற்றிகரமாகச் செய்து முடித்தேன் .

அடுத்த படம்தான்’ இஸ்பேட் ராஜா’ இயக்குநர் ரஞ்சித் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்த போது சில நாட்கள் அவகாசம் கேட்டேன் .அவரிடம் கதையும் கேட்டேன் .அதில் நான் என் சார்ந்த என் தரப்பு பங்களிப்பு என்ன செய்ய முடியும் என்பதற்காக சில நாள் அவகாசம் கேட்டேன். சில தினங்களுக்குப் பிறகு என் தரப்பு எண்ணங்களைக் கூறினேன். அவர்களுக்கு நம்பிக்கை வந்து விட்டது .அதன்படி புறப்பட்டு விட்டோம்.

இந்த படத்தை பொறுத்தவரை இவன் சின்ன பையன் இவன் புதியவன் என்று யாரும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக இருந்தது .போகப் போகப் என்னை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டார்கள் .மரியாதை கொடுத்தார்கள். அன்பு காட்டினார்கள்.படத்தில் நடித்த நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை . கலைஞர்கள், படக்குழுவினர் அனைவருமே ஒரே குழுவாக இயங்கினோம்.

படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மலை உச்சியில் உயரமான இடத்தில் எடுக்க வேண்டியிருந்தது. பலருக்கும் உயரம் சார்ந்த பிரச்சினையால் உடல் பிரச்சினை ஏற்பட்டது. எங்கள் உதவியாளர் ஒருவருக்கு இதயப் பிரச்சினை ஏற்பட்டது.
இருந்தாலும் வெற்றிகரமாக எடுத்து முடித்தோம்.” என்கிறவர் படத்தில் தான் சிரமப்பட்டுப் பணியாற்றியதைப் பற்றி இப்படிக் கூறுகிறார்.

“நான் இந்தப் படத்தை ஒரு வாய்ப்பாகப் பார்க்கவில்லை. வாழ்க்கையாகத்தான் பார்த்தேன் கேமராவை ட்ரை பேடில் போட்டு ஸ்டாண்டில் பொருத்தி காட்சிகளை எடுப்பதைப் பெரும்பாலும் தவிர்த்தேன் .கையில் தூக்கிக் கொண்டு தோளில் சுமந்து கொண்டு, நகர்ந்து கொண்டு ,அசைந்து கொண்டு, ஊர்ந்து கொண்டு இருக்கும் படி தான் காட்சிகள் எடுத்தோம்.. அதுதான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என நினைத்தோம். இதை படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் செய்திருக்கிறேன். படப்பிடிப்பு முழுதும் handheld கேமராவாகவே எடுத்தேன்.

ஒரு காட்சி எடுக்கும் போதும் நம்மால் எப்படி அதை மேம்படுத்த முடியும் ,வலு சேர்க்க முடியும் என்பதாகவே யோசித்தேன். அப்படித்தான் என் உழைப்பினைப் போட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு நீளமான முக்கியமான காட்சிகளை ஒரே ஷாட்டில் எடுத்தோம். காபி ஷாப்பில் காதலர்கள் பிரியும் காட்சி ஒன்று.மற்றொன்று தாராவின் வீட்டில் நடக்கும் காட்சி.

இரண்டு காட்சியிலும் ஒரு வினாடி கூட இடைவெளி கொடுக்கக்கூடாது என்று ஒரே ஷாட்டில் எடுப்பது என்று முடிவெடுத்தோம், அதற்குள் கட் செய்வது என்பது பார்வையாளர்களின் கவனத்தை மாற்றிவிடும் என்று நினைத்து இயக்குநருடன் பேசி அப்படி எடுத்தேன் .இந்த இரண்டு காட்சிகளும் விமர்சகர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்டுப் பாராட்டப்பட்டன.

அதே போல் இன்னொரு முக்கியமான விஷயம். இந்தப்படத்தில் நான் மூன்று லென்ஸ்களை பயன்படுத்தி இருப்பேன். கெளதம் என்ற பாத்திரம் தனிமையில் இருக்கும்போது அனபா பிக் லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறேன் .

சென்னை நினைவுகளுக்கு ஸ்பிரிக்கல் லென்ஸைப் பயன்படுத்தி இருக்கிறேன். பிளாஷ்பேக் காட்சிகளுக்கு 1950 ஆம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட விண்டேஜ் லென்ஸைத் தேடிப்பிடித்து பயன்படுத்தினோம்.அதுமட்டுமல்ல படத்தில் காட்டப்படும் நிறங்களுக்கும் புது அர்த்தம் இருக்குமாறு பயன்படுத்தி இருக்கிறேன் .
கெளதம் தனக்குள் கோபத்தை மறைத்து வைத்திருக்கும் ஒரு பாத்திரம். அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று உணரும் போது சிவப்பு நிறம் வரும் .வேறு காட்சிகள் வந்து மனநிலை மாறும் போது பச்சை நிறமாக மாறும்.

இப்படி வண்ணங்களையும் உணர்வுகள் ஆக்கிக் காட்டியிருப்பேன்.சூரியன் மறைகிற செம்மாலை நேரத்தில் முக்கியமான காட்சியைப் பரபரப்பாக எடுத்து முடித்தோம். இன்று ஊடகங்கள் என் ஒளிப்பதிவைப் பாராட்டுகிற போது நான் கதைப் போக்கிற்கு ஏற்ப கையாண்டுள்ள நிற மாற்றங்களை அடையாளம் கண்டு பாராட்டுகிற போது பட்ட கஷ்டங்கள் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.” என்று முடிக்கிறார் கவின் ராஜ்.

இப்போது புதிய பட வாய்ப்புகள் கவின் ராஜை வட்டமிட்டு வருகின்றன.இவர் விளையும் பயிர் என்பதை நிரூபித்து விட்டார்.

More Articles
Follows