நமது பாரம்பரியத்தின் பெருமை பேசும் ‘கள்ளன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யதார்த்த சினிமாவிற்கு எப்பொழுதுமே ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படியானதொரு யதார்த்த படமாக உருவாகி வருகிறது எழுத்தாளர் சந்திராவின் ‘கள்ளன்’. கதாபாத்திரத்துடன் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொண்டு சினிமாவை சுவாசிக்கும் ஒரு புகழ்பெற்ற ஆளுமை நடிக்கும்போது, அந்த படைப்பு மேலும் புகழ் பெறுகிறது. அத்தகைய குணங்களைக் கொண்டிருக்கும் கரு பழனியப்பன், எழுத்தாளர் சந்திரா இயக்கும் ‘கள்ளன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம் ஆகியோரிடம் சினிமா கற்ற இயக்குனர் சந்திரா ‘கள்ளன்’ பற்றிக் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பை எழுதி முடித்த போதே இந்த கதையின் மீது பெரிய நம்பிக்கை ஏற்பட்டது.அதை அப்படியே உள்வாங்கியதுடன், இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து தன்னைத் தயார் படுத்திக்கொண்டார் இயக்குனர் கரு.பழனியப்பன் சார். படத்தின் சூழ்நிலை மற்றும் பருவநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ள கதைக்காக நான் செய்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து அவரும் கூடுதல் முயற்சிகள் எடுத்தார். ரொம்பவும் உணர்வுபூர்வமான இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

‘கள்ளன்’ இருவேறு காலங்களின் பின்னணியில் அமைந்த ஒரு கதையாகும். 1988-89ல் ஒன்றும், 1975 ஆம் ஆண்டில் இன்னொரு கதையும் நடக்கும். வேட்டையாடும் சமூகம் நம்முடையது. ஆதி மனிதன் வேட்டையிலிருந்து தான் வாழ்வைத் தொடங்கினான். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று நான்கு மாநிலங்களில் பயணிக்கிறது கதை.பரந்து விரிந்த நிலவியலும் காடுகளும் ரசிகர்களுக்கு ஒரு புது விதமான அனுபவத்தைத் தரும்.

தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது. அரசாங்கம் வேட்டையாடுவதைத் தடை செய்யும் போது, காலம் அவனது வாழ்க்கையை எப்படியெல்லாம் வேட்டையாடுகிறது, சூறாவளியாய் திசைமாறி சுழற்றிப் போடுகிற அவனது வாழ்வின் போக்கையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறேன். இசையமைப்பாளர் கே-யின் இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். பின்னோக்கிய காலக்கட்டங்களிலும், வேட்டையாடுதலையும் பற்றிய கதை என்பதால் பிரத்யேகமாக பாரம்பரியமான இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இசையமைத்திருக்கிறார்” என்றார்.

எட்சட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுத்தாளர் சந்திரா இயக்கியுள்ளார்.வேட்டை சமூகத்தைச் சேர்ந்த கிராமத்து இளைஞராக இயக்குனர் கரு.பழனியப்பன் நடித்துள்ளார். நாயகியாக நிகிதா அறிமுகமாகியுள்ளார். எம்.எஸ். பிரபு மற்றும் கோபி ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, ஃபைட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், நமோ நாராயணன் , சௌந்தர்ராஜா,முருகன்,அருண்,மாயா என அனைவரும் கதாப்பாத்திரங்களை கண்முன் தோற்றுவிப்பவர்களாக நடித்திருக்கின்றனர்.

காடு, மலை, விலங்குகளின் நிஜ வேட்டைக் காட்சிகள் என சிந்திக்கவைக்கும் படமாக உருவாகியிருக்கும் ‘கள்ளன்’ படத்தின் பாடல்களை மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். யுகபாரதியும், ஞானகரவேலும் தலா ஒரு பாடலையும் எழுதியுள்ளனர். படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ரஜினி கைவிட்ட படத்தலைப்பை கார்த்திக்காக எடுக்கும் ’ரெமோ’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இதனையடுத்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் நடித்து வருகிறார் கார்த்தி.

இதில் நிகிலா விமல் நாயகியாக நடித்து வருகிறார்.

இதனையடுத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. நாயகியாக ராஷிமிகா நடிக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்திற்கு ‘சுல்தான்’ என தலைப்பு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த ஒரு படத்திற்கு சுல்தான் தி வாரியர் என பெயரிட்டு இருந்தனர். பர்ஸ்ட் லுக்கும் வெளியானது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.

Karthi and Bakkiyaraj Kannan combo movie likely to titled Sultan

அருண் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் 7ஆம் அறிவு வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார்.

இந்த படத்திற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார் அருண்.

இவரின் பயிற்சியாளராக சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’ படத்தில் வில்லனாக நடித்த (டாங்லி) ஜானி நியமிக்கப்பட்டுள்ளாராம்.

வியட்நாமில் மாஸ்டர் ஜானியுடன் அருண்விஜய் அவர்கள் எடுத்த போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Arun Vijay trains with 7am Arivu villain Johnny for Boxer

அடுத்த பிரதமர்.?; ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேகம் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற தேர்தல் முடிவுகள் நாளை தெரிந்துவிடும்.

ஆனால் அதற்கு முன்பே வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. இதில் மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

இந்த கருத்துக் கணிப்புகளை விமர்சிக்கும் வகையில் பாலிவுட் நடிகரும் விவேகம் பட வில்லனுமான விவேக் ஓபராய் தெரிவித்துள்ளதாவது…

(படம் பார்க்க) அதில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று கூறி சல்மான்கானுடன் ஐஸ்வர்யா ராய் படத்தையும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பு என்று கூறி தன்னுடன் ஐஸ்வர்யாராய் இருப்பதையும் தேர்தல் முடிவு என கூறி அபிஷேக் மற்றும் குழந்தையுடன் ஐஸ்வர்யாராய் இருக்கும் படத்தையும் போட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராய் முதலில் சல்மான்கானையும் பின்னர் விவேக் ஓபராயையும் காதலித்தார். பின்னர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் ஓபராயின் இந்த கற்பனைக்கு கண்டனங்கள் எழுந்தன.

இதனால் வழக்கம்போல…. எனது பதிவு சிலரது மனதை புண்படுத்தியதாக அறிந்ததால் அந்த பதிவை நீக்கிவிட்டேன். மேலும் இதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

Vivegam villain Vivek Oberoi shares meme mocking Aishwarya Rai

வர்மா படக்காட்சிகளை சுட்ட ஆதித்ய வர்மா .; விக்ரமுக்கு பாலா வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி.

அப்படத்தை டைரக்டர் பாலா தமிழில் ரீமேக் செய்தார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்க இ4 எண்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்தது.

ஆனால் படம் திருப்தியில்லை என தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்ய மறுத்துவிட்டது.

எனவே படத்தின் பெயரை ஆதித்ய வர்மா என மாற்றி அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரிசய்யா என்பவரை இயக்க வைத்தனர்.

இதிலும் துருவ் விக்ரமே நாயகனாக நடித்தார்.

இந்நிலையில், ஆதித்ய வர்மா படத்தின் பெரும்பாலான காட்சிகள், வர்மா படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருக்கிறது என தகவல் கசிய தயாரிப்பு நிறுவனம், துருவ் விக்ரமின் அப்பா நடிகர் விக்ரம் ஆகியோருக்கு, இயக்குநர் பாலா கடிதம் எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது.

வர்மா படத்தை கைவிட்டப்பின் அதில் உள்ள காட்சிகளை பயன்படுத்த கூடாது என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Director Bala warning to Vikram and Adithya Varma movie team

மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கும் விஜய்; டைரக்டர் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தளபதி 63 என்று தற்காலிக பெயர் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அட்லி இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள படத்தை பற்றி பார்த்தோம்.

‘மாநகரம், கைதி’ படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தில் தான் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை விஜய்யே தயாரிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வந்துள்ளன.

பல வருடங்களுக்கு முன்பு ‘ரசிகன், செந்தூரபாண்டி’ ஆகிய படங்களை விஜய்யின் உறவினரான பிரிட்டோ என்பவர் தயாரித்திர்.

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்தனர்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கவுள்ளார்.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷும் லைன் புரொடியூசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது.

After long time Actor Vijay plans to produce movies

More Articles
Follows