ஆசை-பயம்-பதட்டம்-சிறப்பு; ரஜினியை இயக்குவது குறித்து கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாப்ட்வேர் என்ஜினீயரான கார்த்திக் சுப்பராஜ் வேலை பார்த்துக் கொண்டே குறும்படங்களை இயக்கி வந்தார்.

பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க, இதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

நான்கு படங்களை மட்டுமே இயக்கிய இவருக்கு தற்போது ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினியை இயக்குவது குறித்து அவர் கூறியதாவது…

“ரஜினி சாரின் படத்தை இயக்க வேண்டும் என்பது எல்லா இயக்குனருக்கும் உள்ள ஆசை.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட நடிகர் ரஜினிகாந்த்.

அவருடன் பணி புரிய உள்ள நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

ரஜினி சார் விரைவில் அரசியல் களத்தில் முழு கவனம் செலுத்த உள்ளார். எனவே என் படத்தின் பணிகளை நான் இந்தாண்டுக்குள் முடித்து விடுவேன்.

ரஜினி சாரை இயக்க நான் பயப்படவில்லை. கொஞ்சம் பதட்டம் உண்டு. ஆனால், ஒரு சிறப்பான படத்தை கொடுப்பேன் என்பது நிச்சயம்” என்றார்.

Karthik Subbaraj talks about his next movie with Rajinikanth

தமிழ் சினிமாவுக்கு ஆதரவளிக்க தெலுங்கு படங்களை திரையிட மறுக்கும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் எந்தவொரு புதிய தமிழ் படமும் வெளியாகவில்லை.

விஷால் தலைமையிலான திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவு படி இந்த வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

தனியார் கார்பரேட் நிறுவனங்களின் க்யூப் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த நிறுவனங்கள் டீசர், டிரைலர் உள்ளிட்டவைகளை தியேட்டர்களின் திரையிடும் போது அதற்கு கட்டணங்களை தயாரிப்பாளர்களிடம் இருந்து பெற்று வருகின்றன.

இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிட லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்யும் நிலையுள்ளது.

இந்த கட்டண குறைப்பு குறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றாலும், சுமூக தீர்வு ஏற்படவில்லை.

ஆனால் தியேட்டர் அதிபர்கள் பழைய ஹிட்டான தமிழ் படங்களையும் மற்ற மொழி புதுப்படங்களையும் திரையிட்டு வருகின்றன.

இதனை வைத்து க்யூப் நிறுவனங்கள் தங்களை பிழைப்பை எந்தவொரு இடையூறும் இல்லாமல் செய்து வருகின்றன.

இந்த பிரச்சினை குறித்தும் விவாதிக்கப்பட்ட நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் வகையில் ஏப்ரல் 8 ஞாயிறு முதல் தமிழகத்தில் தெலுங்கு படங்கள் வெளியாகாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அண்மையில் வெளியாகி ஹிட்டான ராம்சரணின் ரங்கஸ்தலம் படத்தை கூட அன்றுமுதல் தமிழகத்தில் திரையிட மாட்டோம் என அந்த படத் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறாராம்.

Telugu Producer council decided not to screen Telugu movies to supports TN producers

அரவிந்த்சாமியின் பேங்க் அக்கௌண்ட் ஐடி நோட்டீஸ்; கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடப்பு நிதியாண்டுக்கான வருமான வரியாக 96 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை நடிகர் அரவிந்த் சாமியின் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்ய அண்ணா சாலையில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி வங்கி கிளைக்கு வருமான வரித் துறை உதவி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனையறிந்த நடிகர் அரவிந்த்சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில் ஏற்கெனவே தோராய வருமான வரியாக ரூபாய் 30 லட்சத்தை முன் கூட்டியே செலுத்திவிட்டேன் எனவும் வருமான வரியை அதிகாரிகள் பரிசீலிக்காமல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என குறிப்பிட்டு இருந்தார்.

எனவே வருமான வரித்துறையின் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் நடிகர்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் தோராய வருமானவரி செலுத்திய விண்ணப்ப படிவத்தை பரிசீலிக்கும் வரை மேற்கொண்டு அரவிந்த்சாமி வங்கிக் கணக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

HC directs IT dept to halt proceedings against Arvind Swamy

மகேஷ்பாபு படத்தில் பர்ஹான் அக்தரை பாடவைத்த தேவி ஸ்ரீபிரசாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் பர்ஹான் அக்தர்.

இவர் முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’ என்ற திரைப்படத்தில் பின்னணி பாடியிருக்கிறார்.

இவரை பாடவைத்து அனுபவம் குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் கேட்டபோது,…
‘பர்ஹான் அக்தரை மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது வழங்கும் விழாவில் சந்தித்தேன்.

அப்போது அவர் என்னுடைய இசையில் வெளியான ஹிந்தி பாடல்களைப் பற்றி பேசினார்.

அதே போல் நானும் ‘ராக் ஆன்’ என்ற படத்தில் அவர் பாடிய பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் என்றும், உங்களது குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொன்னேன்.

அத்துடன் நீங்கள் ஏன் தென்னிந்திய மொழிகளில் பாடக்கூடாது? என்று கேட்டேன்.

அதற்கு அவர் எனக்கு விருப்பம் இருந்தாலும் எனக்கு தென்னிந்திய மொழிகளான தெலுங்கோ, தமிழோ சுத்தமாக தெரியாதே..? என்று பதிலளித்தார்.

அத்துடன் உங்களுக்கு என்னுடைய குரலினிமை மீது நம்பிக்கை இருந்தால் நான் முயற்சி செய்கிறேன். நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நீக்கிவிடுங்கள் என்றார்.

அப்போது நான் அவருக்கு மொழி உச்சரிப்பு ஆகியவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களுடைய குரலுக்கு ஏற்ற வகையில் பாடல்கள் அமைந்தால் நீங்கள் தான் பாடவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு சரியென்று ஒப்புக்கொண்டார்.

முதலில் சுகுமார் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தயாரான ‘1 நேநோக்கடுனே’ (1 Nenokkadine) என்ற படத்தில் இடம்பெற்ற ‘Who are you..’ என்ற பாடலைத்தான் பர்ஹான் அக்தர் பாடுவதாகயிருந்தது.

ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் அவரால் பாட இயலவில்லை. அதனையடுத்து தற்போது மகேஷ் பாபு நடிப்பில் ‘பாரத் அனே நேனு’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘I Dont Know…’ எனத் தொடங்கும் பாடலை பர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, அவரைத் தொடர்பு கொண்டேன்.

இந்த பாடலுக்கான மெட்டை நான் உருவாக்கும் போதே இந்த பாடலை பர்ஹான் பாடினால் நன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்பினேன்.

அவரைத் தொடர்பு கொண்ட போது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு பாடுகிறேன் என்றார். இருந்தாலும் அவர் தெலுங்கு மொழி உச்சரிப்பைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார். ஆனால் மும்பையில் இந்த பாடலை பதிவு செய்யும் போது அற்புதமாக பாடிக்கொடுத்தார்.

இந்த பாடலை கேட்டவர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. பர்ஹான் அக்தர் எப்படி தெலுங்கு மொழியை கச்சிதமாக உச்சரித்து இனிமையாக பாடியிருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டனர்.

இதுவே இந்த பாடலுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது. கடந்த வாரம் இந்த பாடல் இணையத்தில் வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றிக்கு உதவிய நாயகன் மகேஷ் பாபு, இயக்குநர் கொரட்லா சிவா, தயாரிப்பாளர் என அனைத்து தரப்பினருக்கும் நான் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

பர்ஹான் அக்தருடனான இந்த இசைப்பயணம் மேலும் தொடரும்’ என்றார்.

இதற்கு முன்பே பாலிவுட் பாடகர்களான மில்கா சிங், அப்பச்சே இந்தியன், அட்னன் ஷமி, பாபா செகல் உள்ளிட்ட பல இசை கலைஞர்களை தென்னிந்திய மொழிகளில் பாட வைத்து, இங்கு அறிமுகப்படுத்திய பெருமையை தேவி ஸ்ரீபிரசாத்தையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Music composer Devi Sri Prasad brings Farhan Akhtar to Tollywood

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம். இந்த சங்கமானது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

பாபுகணேஷ் அந்த சங்கத்தின் தலைவராக பொறுப்பில் இருந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் பொறுப்பேற்றவுடன் அதிரடியாக இந்த சங்கத்தை நீக்கினார்.

அந்த இடத்தையும் பறிமுதல் செய்துக் கொண்டார்.

அண்ணாசாலையிலுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் கட்டிடம் மீது வழக்கு நிலுவையில் உள்ளதால், தயாரிப்பாளர் விடியல் ராஜு தன் சொந்த இடத்தை கடந்த 1 வருடம் காலமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வீட்டு வசதி கூட்டுறவு சங்கம் நடைபெற தற்காலிகமாக அனுமதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தில் இதுவரை ஐந்தாண்டுக்கு ஒரு முறை அரசாங்கத்தால் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது, அதன்படி தற்போது சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதில் போட்டியிட்ட 11 பேரும் போட்டியின்றி தயாரிப்பாளர் விடியல் ராஜு தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அந்த 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விவரம் இதோ

TN Producer Council Veetu vasadhi vaariyam election result updates

டெட்பூல்-2 ஹாலிவுட் படத்தில் ரஜினியின் காலா பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹாலிவுட் நடிகர் ரேயான் ரெனால்ட்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள படம் டெட்பூல் 2.

இவருடன் ஜாஸ் பெர்லின், மொனோரா பச்சிரின், ஜுலியா டென்னி சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இதன் முதல் பாகம் கடந்த 2016ல் உலகமெங்கும் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

தற்போது இதன் 2ஆம் பாகம் வருகிற மே மாதம் 18-ந் தேதி ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தின் தமிழ் டப்பிங் டீசர் சமீபத்தில் வெளியானது.

இதில் ஹீரோ ரேயான் ரெய்னால்ட்ஸ் பேசும்போது ரஜினியின் காலா பனச் டயலாக்கை பேசியுள்ளார்.

“வேங்கையின் மகன் ஒத்தையில் நிக்கிறேன்னு ஒரு ஜோர்ல சொல்லிட்டேன்.. எல்லாம் மொத்தமா வந்துட்டானுக” என்று பேசுகிறார்.

இது தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinis Kaala punch dialogue used in DeadPool 2 hollywood movie

More Articles
Follows