நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

நடிகை கீர்த்தியை ஐஏஎஸ் படிக்க 40 லட்சம் அனுப்பிய வாலிபர் போலீசில் புகார்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தமிழில் ரஜினி விஜய் சூர்யா விக்ரம் விஷால் தனுஷ் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இளம் வயதிலேயே தேசிய விருதையும் வென்றார்.

இந்த நிலையில் இவரது பெயரில் பேஸ்புக்கில் ஒரு பெண் மோசடி செய்துள்ளார். கீர்த்தி சுரேஷ் புகைப்படத்தை தனது டிபி ஆக வைத்துள்ள அந்த பெண் வாலிபர் ஒருவரிடம் நைசாக பேசியுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த வாலிபரிடம் நைசாக பேசி உள்ளார். நாளடைவில் இவர்கள் நெருக்கமாக பேச பேச.. “தனக்கு நடிப்பு துறையில் ஆசை இல்லை தான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்றுதான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார் அந்த பெண்.

மேலும் ஐஏஎஸ் படிக்க பணம் தேவைப்படுகிறது என தெரிவிதக்கு இதனை நம்பி அந்த வாலிபர் முதற்கட்டமாக 10 லட்சம் அனுப்பியுள்ளார்.

மேலும் இவர்களுக்கு நாளடைவில் நெருக்கமாகி தங்களது நிர்வாண புகைப்படங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் உங்களை பார்க்க வேண்டும் உங்களிடம் பேச வேண்டும் என அந்த வாலிபர் தெரிவிக்கவே அந்த பெண் சுதாரித்து கொண்டுள்ளார்.

அப்போது அந்த வாலிபர் அனுப்பிய நிர்வாண படங்களை வெளியே விடுவேன் என மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இதனை சொல்ல வெளியே சொல்ல பயந்து அந்த வாலிபர் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கேட்ட பணத்தை எல்லாம் கொடுத்துள்ளார். மொத்தமாக ரூபாய் 40 லட்சம் வரை அந்த வாலிபர் கொடுத்து ஏமாந்துள்ளார்.

மேலும் அந்தப் பெண் பணம் கேட்டு மிரட்டவே வேறு வழியில்லாமல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

தற்போது அந்த மோசடி பெண்ணை போலீசார் கைது செய்த நிலையில் அந்த பெண்ணுக்கு உடந்தையாக இருந்த அவரது கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோடி கணக்கில் சம்பாதிக்கும் ஒரு நடிகை பணம் கேட்டுள்ளார்.. அதை உண்மை என அதை நம்பி ஒரு படித்த பட்டதாரி இன்ஜினியர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

விஜய்க்காக சிம்பு பாடிய ‘தீ தளபதி..’ சாங்; டிரெண்டிங்கில் 3 Decades Of VIJAYism

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ராஷ்மிகா முதன்முறையாக இணைந்துள்ள படம் ‘வாரிசு’.

வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே…’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். அந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் நாளை டிசம்பர் 4ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற 2வது பாடலான ‘தீ தளபதி…’ என்ற பாடல் வெளியாக உள்ளது.

இப்பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானது முதலே விஜய் & சிம்பு ரசிகர்களும் இந்தப் பாடலை வரவேற்க தயாராக உள்ளனர்.

இப்பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் விஜய் சினிமா துறைக்கு வந்து 30 வருடங்கள் ஆன நிலையில் #30YearsOfVijayism & #3DecadesOfVIJAYism என்பதையும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

#SilambarasanTR | #TheeThalapathy | #Varisu | #Vijay

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது என் கனவு அது நிறைவேறிட்டு – சந்தோஷ் ராஜன்

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது என் கனவு அது நிறைவேறிட்டு – சந்தோஷ் ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் பேசியதாவது…

இந்தப் படத்தில் கலகலப்பான ஜீவாவை மீண்டும் பார்க்கலாம். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் படம் செய்வது எனது கனவு அது நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரக்யா குஜராத்தி பெண் ஆனால் அவர் ஒரு மலையாளி என அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.

அந்தளவு கதாப்பாத்திரத்தில் ஒன்றி நடித்தார். காஷ்மீரா அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் மிக ஜாலியான படமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

ஒரே நாளில் வெற்றி விழாவா.? ஓடாத ‘டிஎஸ்பி’ படத்துக்கு ஓவர் பில்டப்

ஒரே நாளில் வெற்றி விழாவா.? ஓடாத ‘டிஎஸ்பி’ படத்துக்கு ஓவர் பில்டப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் விஜய் சேதுபதி நடித்துள்ள டிஎஸ்பி படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார்.

இந்த படம் வெளியான முதல் காட்சி முதலே தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த படத்திற்கும் விமர்சனங்களும் நெகட்டிவாக வந்தன.

இதனையடுத்து விஜய்சேதுபதியை ட்ரோல் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில் திடீரென இன்று படத்தின் வெற்றி விழா என படக் குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்சேதுபதி இயக்குநருக்கு வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது இந்தப் புகைப்படங்களை ட்ரோல் செய்துள்ளனர்.

ஓடாத படத்திற்கு ஓவர் பில்டப் ஏன்? ஒரே நாளில் வெற்றி விழாவா? ஏன் இந்த பித்தலாட்டம்? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Vijay Ajith Fans Clash : ‘துணிவு’ படத்தில் அஜித் டூப்.? ‘பிகில்’ படத்தில் விஜய் டூப்.?

Vijay Ajith Fans Clash : ‘துணிவு’ படத்தில் அஜித் டூப்.? ‘பிகில்’ படத்தில் விஜய் டூப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.

தற்போது இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் படத்தில் அஜித்துக்கு பதிலாக சுதாகர் என்பவர் டூப் போட்டதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மேலும் துணிவு படத்தில் ஆக்சன் காட்சிகளில் அஜித் நடிக்கவில்லை என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமே உறுதி செய்துவிட்டதாக மீம்ஸ்கள் பரவியது.

ஆனால் அந்த தகவல் முற்றிலும் பொய் என தெரியவந்துள்ளது.

மேலும், ‘துணிவு’ படத்தில் அஜித்தான் 100% ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் என்பதை படக்குழுவு உறுதி செய்துள்ளது.

விஜய் ரசிகர்கள் அஜித்தை ட்ரோல் செய்த காரணத்தினால் அஜித் ரசிகர்களும் பிகில் படத்தில் விஜய்க்கு டூப் போட்டவர் இவர்தான் என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

SMS படத்திற்கு பிறகு எனக்கு ‘வரலாறு முக்கியம்’ அமைஞ்சிருக்கு – ஜீவா

SMS படத்திற்கு பிறகு எனக்கு ‘வரலாறு முக்கியம்’ அமைஞ்சிருக்கு – ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீவா நடிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள ‘வரலாறு முக்கியம்’ படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில் நடிகர் ஜீவா பேசியதாவது…

“SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் மிகவும் அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது.

கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம். மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.

ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார்.

பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன் பகிர்ந்துகொண்டதும், படப்பிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

More Articles
Follows