தமிழர்களுக்கு டம்ளரில் நீர் கொடுங்கள்; சிம்பு சொன்னதை செய்த கன்னடர்கள்

தமிழர்களுக்கு டம்ளரில் நீர் கொடுங்கள்; சிம்பு சொன்னதை செய்த கன்னடர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karnataka peoples gave water to TN peoples as per Simbu requestகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தினர்.

ஆனால் அதில் நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளாமல் அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.

அந்த பேட்டியில் ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.

இரு மாநில மக்கள் நல்லவர்கள் தான். அரசியல்வாதிகள் தான் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். எனவே நான் மக்களை நம்புகிறேன். அவர்கள் செய்வார்கள் என பேசினார்.

இதை சிலர் கிண்டலடித்தனர். இணையத்தில் ட்ரோல் செய்தும் பேசினர்.

ஆனால் தற்போது சிம்பு கூறியவாறே புகைப்படங்களை கன்னடர்கள் பதிந்து வருகின்றனர்.

கர்நாடகாவில் வாழும் மக்கள் தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர்.

இந்த ஹேஷ்டேக் தற்போது வரை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனால் சிம்பு தரப்பில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமலை விட சிம்பு யதார்த்தமாக பேசி வருகிறார் என கன்னட நடிகர் ஒருவர் கூறியுள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Karnataka peoples gave water to TN peoples as per Simbu request

simbu glass of water

ஆந்திராவை அதிர வைக்கும் ஸ்ரீ லீக்ஸ்; பாகுபலி ராணா தம்பியும் சிக்கினார்!

ஆந்திராவை அதிர வைக்கும் ஸ்ரீ லீக்ஸ்; பாகுபலி ராணா தம்பியும் சிக்கினார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sri Reddy accuses Ranas brother Abhiram of sexual exploitationதமிழ் சினிமாவில் நடைபெறும் அந்தரங்க விஷயங்கள் சுசீ லீக்ஸ் என்ற பெயரில் வெளியானது.

தற்போது ஆந்திராவில் ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அந்தரங்க விஷயங்களை அவிழ்த்து விட்டு வருகிறார்.

வடநாட்டு நடிகைகள் இங்குள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் படுக்கையை பகிர்வதில் சளைத்தவர்கள் இல்லை என்றார்.

சில தினங்களுக்கு முன் மேலாடை இல்லாமல் போராட்டம் செய்தார்.

தனது குரலை எல்லோரும் கேட்கச் செய்யவும், தனது கோரிக்கைகளுக்கு அரசு பதில் அளிக்க வைக்கவும் இந்த ஒரு வழி மட்டுமே மீதமிருந்தது என அப்போது தெரிவித்துள்ளார்.

”சினிமா துறையில் சிலர் என்னிடம் நிர்வாண காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கும்போது நான் ஏன் எனது ஆடைகளை அவிழ்த்து கொண்டு பொதுமக்கள் முன் செல்லக்கூடாது? ” எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுபோல் தினம் தினம் ஒரு சர்ச்சையை உருவாக்கி வருகிறார். இதனால் சில நடிகைகள் தங்கள் படம் வெளியாகிவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி புகழ் ராணாவின் தம்பி அபிராமும் ஸ்ரீ ரெட்டியும் கிஸ் அடித்துக் கொண்டே இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார்.

அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநர் கோனா வெங்கட்டின் பெயர் ஸ்ரீரெட்டி லீக்ஸில் இடம்பெற்றது. இருவரும் வாட்ஸ்ஆப்பில் சாட் செய்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Sri Reddy accuses Ranas brother Abhiram of sexual exploitation

actress sri reddy nude protest

தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் புத்தாண்டிலும் தமிழ் சினிமாவுக்கு சோதனை காலம்தான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

For the first time No Tamil movie is release on Tamil new Yearதிரையரங்குகளில் படங்களை திரையிடுவதற்கு கொடுக்கப்படும் கியூப் டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க சொல்லி தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றனர்.

கட்டணங்களை குறைக்கும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டோம் என கூறி கடந்த 42 நாட்களாக திரையுலகினர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகவில்லையாம்.

தமிழ் சினிமா தோன்றிய காலத்திலிருந்து இப்படி ஒரு ஸ்டிரைக்கை திரையுலகினர் கண்டதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் க்யூப் இல்லாத வேறு சில டிஜிட்டல் சேவை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர் சங்கம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது.

இதனால் ஸ்டிரைக் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முழுவதுமாக எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டு சில சட்டச் சிக்கல்களை முடித்து விட்டுத்தான் ஸ்டிரைக் தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சின்ன சின்ன ஸ்டிரைக்குகளை சினிமா உலகம் பார்த்துள்ளது.

ஆனால் பண்டிகை நாட்களில் எப்படியாவது படங்கள் வெளியாகிவிடும்

ஆனால் இந்தாண்டுதான் முதன்முறையாக தமிழ்ப் புத்தாண்டுக்கு ஒரு படங்கள் கூட வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே ஸ்டிரைக் முடியும்போது கோடை விடுமுறையை கணக்கில் கொண்டு மே மாதம் நிறைய படங்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அவையனைத்தையும் மக்கள் ஒரே மாதத்தில் பார்ப்பார்களா? பார்க்கத்தான் முடியுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

For the first time No Tamil movie is release on Tamil new Year

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

பாலாவின் அடுத்த படம் முடிவானது; லென்ஸ் பட டைரக்டருடன் இணைகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director balaசில ஆண்டுகளாக படங்களை இயக்குவதை மட்டுமே செய்து வந்தார் பாலா.

தற்போது படங்களை தயாரித்தும் வருகிறார்.

நாச்சியார் படத்தை தொடர்ந்து ஒரு புதிய படத்தை தனது ‘பி ஸ்டூடியோஸ்’ சார்பில் தயாரிக்கிறார்.

லென்ஸ் பட இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார்.

‘லென்ஸ்’ படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் வாங்கி வெளியிட்டு இருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

விரைவில் இந்த புதிய படம் தொடங்கப்பட உள்ளது.

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

சமுத்திரக்கனி மற்றும் பிரபுதேவாவை இயக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

parthibanபார்த்திபன் இயக்கத்தில் ஐஸ்வர்யா படு கவர்ச்சியாக நடித்து வெளியான படம் உள்ளே வெளியே.

கடந்த 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்க முடிவு செய்திருப்பதாக பார்த்திபன் அறிவித்தார் என்பதை பார்த்தோம்.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கிறாராம்.

இவர்களுடன் மம்தா மோகன்தாஸ், ஆடுகளம் கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம் பார்த்திபன்.

ஏற்கெனவே ஜேம்ஸ் பாண்டு’, `சுயம்வரம்’ ஆகிய படங்களில் பார்த்திபன் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

விஜய் ஆண்டனி பெயரில் சமந்தாவை லவ் பண்ணும் விஜய் தேவரகொண்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mahanati vijayபழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.

இதில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர்.

இதன் பர்ஸ்ட் வெளியானவுடன் இவர்களின் மேக் அப்பை பலரும் பாராட்டினர்.

மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, மோகன்பாபு, பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

மதுரவாணி என்ற பத்திரிகை நிருபராக நடிக்கிறார் சமந்தா.

இதனிடையில் விஜய் தேவரகொண்டாவின் போஸ்டரை வெளியிட்டனர்.

படத்தில் இவருடைய பெயர் விஜய் ஆண்டனியாம். இவரும் சமந்தாவும் படத்தில் காதலர்களாக வருகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வருகிற மே 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

Vijay Deverakonda as Vijay Antony romance with Samantha in Mahanati movie

mahanati

More Articles
Follows