தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தினர்.
ஆனால் அதில் நடிகர் சிம்பு கலந்துக் கொள்ளாமல் அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பல்வேறு விஷயங்களை பேசினார்.
அந்த பேட்டியில் ஏப்ரல் 11ம் தேதி அன்று கர்நாடகாவில் இருக்கும் மக்கள் அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம் என்றார்.
இரு மாநில மக்கள் நல்லவர்கள் தான். அரசியல்வாதிகள் தான் இதை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். எனவே நான் மக்களை நம்புகிறேன். அவர்கள் செய்வார்கள் என பேசினார்.
இதை சிலர் கிண்டலடித்தனர். இணையத்தில் ட்ரோல் செய்தும் பேசினர்.
ஆனால் தற்போது சிம்பு கூறியவாறே புகைப்படங்களை கன்னடர்கள் பதிந்து வருகின்றனர்.
கர்நாடகாவில் வாழும் மக்கள் தமிழ் நண்பர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போல புகைப்படங்கள் எடுத்து #Unitedforhumanity எனும் ஹேஷ்டேகில் பதிந்து வருகின்றனர்.
இந்த ஹேஷ்டேக் தற்போது வரை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
இதனால் சிம்பு தரப்பில் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசியலுக்கு வந்துள்ள ரஜினி, கமலை விட சிம்பு யதார்த்தமாக பேசி வருகிறார் என கன்னட நடிகர் ஒருவர் கூறியுள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Karnataka peoples gave water to TN peoples as per Simbu request