தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை பேசும் போது கர்நாடகாவில் இருந்து பலத்த எதிர்ப்பு உருவாகும்போது இந்த தமிழர் பிரச்சினை அங்கே பிரதிபலிக்கிறது.
இந்தமுறையும் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதை அடுத்து அவரது காலா படம் கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபையே காலா படத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்த பிரச்சினையை நடிகர் தனுஷ் கோர்ட் வரை கொண்டு சென்றார்.
இதனையடுத்து கர்நாடகாவில் ‘காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த் என்பவர், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று காலை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம்.
காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு.
காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை.
காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம்.
காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’ என பேசினார்.
Karnataka is not fair in opposing Kaala release says Rajinikanth