தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கொரோனா காலங்களில் ட்ரோன்களை மருந்துகளை எடுத்துச் செல்லும் பறக்கும் ஆம்புலன்சாக பயன்படுத்தலாம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோனை பயன்படுத்துமாறும் நடிகர் அஜித் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.
அதன்படி கொரோனா சிவப்பு மண்டலங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதனையறிந்த கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராணயன், அஜித்தின் ட்ரோன் குழுவினரை நேரடியாக பாராட்டி உள்ளார்.
அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு “அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.