கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் அஜித்; துணை முதல்வர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் நடிப்பை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதல், பைலட், ஆளில்லா குட்டி விமானங்களை (ட்ரோன்) இயக்குவது என நடிகர் அஜித்தின் ஆர்வங்களை பட்டியல் போடலாம்.

கொரோனா காலங்களில் ட்ரோன்களை மருந்துகளை எடுத்துச் செல்லும் பறக்கும் ஆம்புலன்சாக பயன்படுத்தலாம் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோனை பயன்படுத்துமாறும் நடிகர் அஜித் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார்.

அதன்படி கொரோனா சிவப்பு மண்டலங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனையறிந்த கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராணயன், அஜித்தின் ட்ரோன் குழுவினரை நேரடியாக பாராட்டி உள்ளார்.

அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு “அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் சரக்கு கடத்திய தாதா 87 தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் விடப்பட்டுள்ளது. இதனால் மது கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

தற்போது சில தளர்வுகளுடன் மதுக்கடைகள் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா சிவப்பு மண்டலங்களில் முற்றிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மற்ற மாவட்டங்களில் வாங்கப்படும் மது பாட்டில்களை காரில் கடத்தி செல்கின்றனர் மது பிரியர்கள்.
இதனை தடுக்க சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் வாகன சோதனைக்கு நிறுத்தினர்

கார் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த காரை பரிசோதனை செய்தனர் காவலர்கள். காருக்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர்.

அப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது.

இதையடுத்து காரை சோதனை செய்துள்ளனர் போலீஸ்.

அப்போது அவர்களை அதிர்ச்சியுள்ளாக்கும் வகையில் கார் முழுக்க பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தன.

போலீஸ் விசாரணையில் காரில் வந்தது ஒரு சினிமா தயாரிப்பாளர் என்பது தெரியவந்துள்ளது.

விஜய்ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன் நடிப்பில் தாதா87 படத்தை எடுத்து ரிலீஸ் செய்துள்ளார்.

மேலும் டைம் இல்ல என்ற படத்தை தற்போது தயாரித்து வருகிறாராம்.

அந்த தயாரிப்பாளரோடு ஆனந்தராஜ் என்ற பல் டாக்டரும் இருந்துள்ளார்.

மது கடத்தல் வழக்கில் இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

சில தினங்களுக்கு முன் நடிகை ரம்யாகிருஷ்ணனும் இதுபோல தனது காரில் மது கடத்தலில் சிக்கியது தஙகளுக்கு நினைவிருக்கலாம்.

ஆனால் சில நிமிடங்களிலேயே காரை டிரைவரை ஜாமீனில் அழைத்து சென்றுவிட்டார் ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

Beer and alcohol bottles seized from DhaDha87 Producers car

மெடிக்கல் மிராக்கிள்.; கொரோனாவை தடுக்க இந்தியா தயாரித்த தடுப்பூசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வைரஸ் கொரோனா கடந்த 6 மாதங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகளே மிரண்டு வருகின்றன.

இதை தடுக்க தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியாவின் புனேயை தலைமையிடமாக கொண்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரானாவுக்கு COVAXIN என்ற தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து கண்டு பிடித்துள்ள இந்த மருந்து பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை வெற்றியடைந்ததால், இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளதாம்.

COVAXIN தடுப்பூசியை அடுத்தகட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.

அடுத்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை இந்த சோதனை வெற்றி பெற்றால் உலகையை அச்சுறுத்தும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த நாடாக இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்.

கொரோனாவை வெல்ல காத்திருப்போம்… அதுவரை வீட்டில் இருப்போம்..

Covaxin India to hold human trial of Covid 19 vaccine in July

BREAKING ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை.; முழு விவரம் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஸ்புக் இருக்கியா..? வாட்ஸ் ஆப்ல இருக்கியா? என்று கேட்டவர்கள் அண்மைக்காலமாக டிக்டாக்ல இருக்கியா? ஹலோ ஆப்ல இருக்கியா? என்றே கேட்கிறார்கள்.

அந்தளவுக்கு இன்றைய தலைமுறையும் அந்த மொபைல் ஆப்ஸ்களுக்கு அடிமையாகி உள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களும் இதிலேயே மூழ்கி கிடந்தனர்.

மேலும் சமீபத்தில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தி நம் ரானுவ வீர்ர்களை 20 பேரை கொன்றது.

இதனையடுத்து சீனா ஆப்களை தடை செய்ய வேண்டும். சீனா பொருட்களை வாங்கவே கூடாது என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீனா மொபைல் ஆப்களுக்கு நமது இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 59 செயலிகள் லிஸ்ட் இதோ…

Govt of India bans 59 mobile Apps and other Chinese Apps

BREAKING தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு.; தளர்வுகள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஜூலை 31 நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு என சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் எதுவுமின்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு தொடரும்.

மதுரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஜூலை 5 ஆம் தேதி வரை முழு முடக்கம்.

மற்ற விவரங்கள் இதோ…

பள்ளி, கல்லூரிகள் செயல்பட தடை நீட்டிப்பு- ஆன்லைன் வழிக்கல்விக்கு தடையில்லை .

மாவட்டங்களுக்குள் அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை

மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீடிப்பு

சுற்றுலாத் தலங்களுக்கும் தடை நீட்டிப்பு

சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள், கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதி பெற்று இறைச்சி கடைகள் செயல்படலாம்.

பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் எந்த நடவடிக்கையும் பலன் தராது.

பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் அவசியம்.

சுற்றுலாத் தலங்களுக்கு வெளியூர் மக்கள் செல்ல தடை நீடிக்கும். வழிபாட்டுத் தலங்கள், மதம்சார்ந்த கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை இருக்கும். மாவட்டங்களுக்கு இடையே சென்று வர இபாஸ் முறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

அந்தந்த மாவட்டங்களுக்குள் இபாஸ் இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படும். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு முடக்கம் தொடரும்.

ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 15 வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனம் அனுமதி.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஜூலை 6 முதல் அதிகபட்சம் 80 நபர்களுடன் இயங்க அனுமதி.

முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

ஜூலை 6 முதல் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 50% பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஜூலை 6 முதல் உணவகங்களில் குளிர்சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.

TN Govt announces Corona Lock down extended till 31st July

என் படங்களில் போலீசை பெருமைப்படுத்தியதற்காக வேதனைப்படுகிறேன்.. – ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடித்த சாமி, சாமி2… சூர்யா நடித்த சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3… உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஹரி.

மேற்க்கண்ட படங்களில் படத்தின் நாயகன் போலீசாக நடித்திருப்பார்.

எந்தவொரு அரசியல்வாதிகளுக்கும் ரவுடிகளுக்கும் நேர்மையற்ற போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அடிபணிவதில்லை என கம்பீரமாக காட்டியிருப்பார் டைரக்டர் ஹரி.

ஆனால் இன்று அவரே இந்த படங்களை எடுத்தமைக்காக வேதனைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளதாவது…

சாத்தான்குளம் சம்பவம் ஜெயராஜ் பெனிக்ஸ் உயிரிழப்பு போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது.

அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….

காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …

காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்…

இவ்வாறு திரைப்பட இயக்குனர் G.ஹரி தெரிவித்துள்ளார்.

Director Hari regrets glorifying Police in his films

More Articles
Follows